India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘கம் கம் கணேஷா’ என்ற தெலுங்கு படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்மிகா மந்தனா தெலுங்கில் பல விஷயங்களை பேசி இருந்தார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், ரஷ்மிகாவை டேக் செய்து, தங்களுக்கு மொழிகள் கடந்து பல இடங்களில் ரசிகர்கள் இருப்பதால் ஆங்கிலத்தில் பேசினால் நாங்களும் ரசிப்போம் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அவர், இனிமேல் முடிந்தளவு ஆங்கிலத்தில் பேச முயற்சிப்பதாக கூறினார்.

*மேஷம் – குழப்பம் ஏற்படும்
*ரிஷபம் – உணர்ச்சிவசப் படாதீர்
*மிதுனம் – சோர்வு உண்டாகும்
*கடகம் – கவலை மேலோங்கும்
*சிம்மம் – இன்பமான நாள்
*கன்னி – துயரம் துரத்தும்
*துலாம் – வேதனை அதிகரிக்கும்
*விருச்சிகம் – ஆதாயம் கிடைக்கும்
*தனுசு – அனுகூலம் உண்டாகும்
*மகரம் – கோபத்தை குறைக்கவும் *கும்பம் – நன்மை ஏற்படும் *மீனம் – சுகமான நாள்

ஈரோட்டில் அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் வழங்காததால், காயமடைந்த தாயை தனி ஆளாக சுமந்து சென்ற பெண்ணின் வீடியோ வைரலானது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எல்.முருகன், அரசு மருத்துவமனைகளில் பாமர மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதியை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத “போலி சமூக நீதி” அரசை தான், நாட்டின் முதன்மை ஆட்சி என்று கூறிக் கொள்கிறீர்களா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என விமர்சித்துள்ளார்.

தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர இயற்கை மருத்துவர் ஹேம்சந்தி மாஞ்சி முடிவெடுத்துள்ளார். சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தொலைதூர கிராமத்தில் மருத்துவ சேவையாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். இந்நிலையில், விருதை திருப்பி தர வேண்டுமென மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், விருதைத் திருப்பித் தருவதாகவும், மருத்துவப் பயிற்சியை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.

சேலம் திமுக எம்பி எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர் பாஜகவில் இணையப்போவதாக சிலர் வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். இந்நிலையில், “என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் தவறான, பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதற்கு, சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. ஆனாலும், போரை தொடரப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக #AllEyesOnRafah என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வரும் சூழலில், நடிகைகள் சமந்தா, ராதிகா ஆப்தே, எமி ஜாக்சன் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழா-2024இல் விருது வென்ற பாயல் கபாடியா, அனசுயா செங்குப்தா ஆகியோருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இருவரது சாதனையும் இந்திய சினிமாவின் தாழ்வாரங்களுக்குள் ஆழமாக எதிரொலிப்பதாக புகழ்ந்துள்ளார். ஷேம்லஸ் படத்திற்காக நடிகை அனசுயா செங்குப்தா, ALL WE IMAGINE AS LIGHT படத்திற்காக பாயல் கபாடியாவுக்கு விருது வழங்கப்பட்டது.

பொருளாதார சவால்களை சமாளிக்கும் வகையில், சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிக்க தாய்லாந்து அரசு முயன்று வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதம் முதல் 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 60 நாள்கள் வரை தங்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, 57 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 30 நாள்கள் வரை தங்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 4 கோடி பயணிகள் இந்த ஆண்டு தாய்லாந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக தொடங்கி பாஜக வரை அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறிமாறி கட்சித் தாவினர். தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இபிஎஸ் தலைமையை ஏற்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்.

உயிரணு சிகிச்சை மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் அவதி அடைந்து வரும் நிலையில், சீனாவில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய நபர் உயிரணு மாற்று சிகிச்சைக்கு பிறகு 33 மாதங்களாக இன்சுலின் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறார். சீனாவில் 4 கோடி பேர் இன்சுலின் ஊசியைச் சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.