News May 29, 2024

அழும்போது கண்களில் நீர் வருவது ஏன்? (2/3)

image

துக்கம், பயம், மகிழ்ச்சி ஆகிய நேரங்களில் கண்களில் நீர் பெருக்கெடுக்கும். அப்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒருபகுதி, கண்ணீரை கட்டுப்படுத்தும் மூளையின் இன்னொரு பகுதியான லிம்பிக்கிற்கு சிக்னல் கொடுக்கும். அது நரம்பு மண்டலத்தை தூண்டி, கண்களில் நீரை வரச் செய்யும். இதுபோன்ற அழுகையின்போது, கண்களுக்குள் சேமித்து வைப்பதைக் காட்டிலும் அதிக நீர் சில நிமிடங்களிலேயே வழிந்தோடும்.

News May 29, 2024

அழும்போது கண்களில் நீர் வருவது ஏன்? (1/3)

image

கண்களில் இருந்து 3 வகையான நீர் வருவதுண்டு. தூசி போன்றவை கண்ணில் விழும்போது உண்டாவது அடிப்படை கண்ணீர். இதனால் கண், தன்னைத் தானே சரிப்படுத்தி கொள்ளும். இன்னொரு வகை கண்ணீர், வெங்காயம் வெட்டுதல், புகை உள்ளிட்ட வெளிப்புற எரிச்சலால் வருவது. மூன்றாவது, துக்கம், பயம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகரமான நேரத்தில் வரும் நீர். இதுவே அழுகை எனப்படுகிறது. இதற்கான மருத்துவ காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.

News May 29, 2024

மோடிக்கு கோவில் கட்டுவோம்: மம்தா பானர்ஜி

image

தன்னை பரமாத்மா தான் பூமிக்கு அனுப்பியதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த மம்தா பானர்ஜி, ஒருவர் தன்னை தானே கடவுள் என்பதாகவும், மற்றொருவர் ஜெகன்நாதரே அவரின் பக்தர் என கூறுவதாகவும் சாடினார். கடவுள் என்றால் அரசியல் செய்யக் கூடாது, கலவரத்தை தூண்டக்கூடாது என்று கூறிய அவர், அவருக்கு தாங்கள் கோவில் கட்டித் தருவதாகவும், நாட்டை தொந்தரவு செய்யாமல் அங்கேயே இருக்குமாறும் விமர்சித்தார்.

News May 29, 2024

ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் ‘வெப்பன்’

image

குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள ‘வெப்பன்’ (Weapon) திரைப்படம், வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் கதைக்களத்தில் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில், சத்யராஜ் முதல்முறையாக சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

News May 29, 2024

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்த 3 நாடுகள்

image

பாலஸ்தீனத்தை இன்னும் சில நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்காமல் உள்ளன. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினருக்கு பதிலடி கொடுக்க காசா, ரஃபா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டிக்கவும், அழுத்தம் தரும் வகையிலும் பாலஸ்தீனத்தை ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகியவை தனிநாடாக அங்கீகரித்துள்ளன. இதன்மூலம் ஐநா உறுப்பு அந்தஸ்து பெற்ற 193 நாடுகளில், பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் எண்ணிக்கை 146ஆக உயர்ந்துள்ளது.

News May 29, 2024

ஊடுருவல்காரர்களுக்காக சிஏஏவை எதிர்க்கும் திரிணாமுல்

image

மேற்குவங்கத்தில் குடியேறும் ஊடுருவல்காரர்களுக்காக, சிஏஏ சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அண்டை நாட்டில் இருந்து ஊடுருவும் நபர்கள், மேற்குவங்க இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்வதாகவும், அவர்களால் அம்மாநில எல்லை மாறுவதை கண்டு ஒட்டுமொத்த நாடும் கவலையடைந்து இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

News May 29, 2024

ரஃபாவை விட்டு வெளியேறும் அப்பாவி பாலஸ்தீனர்கள்

image

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, ரஃபா நகரின் மையப் பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருவதால், அப்பகுதி மக்கள் வெளியேறி வருகின்றனர். நேற்று முன்தினம், ரஃபாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் ராணுவம் தீவிரத் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். இதனால், உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக, கிடைக்கும் வாகனங்களில் ஏறி பாலஸ்தீனர்கள் அங்கிருந்து
வெளியேறி வருகின்றனர்.

News May 29, 2024

வெறும் ₹99க்கு சினிமா பார்க்கலாம்

image

மே 31ஆம் தேதி மீண்டும் சினிமா காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள 4000 திரைகளில் ₹99 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இதில் பிவிஆர், ஐநாக்ஸ் போன்ற பிரபல திரையரங்குகள் பங்கேற்கின்றன. திரைப்படக் காதலர்களுக்கு இந்த சலுகை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

News May 29, 2024

9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

image

தமிழகத்தில் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கேரளாவில் 1ஆம் தேதி பருவமழை தொடங்கவிருப்பதால் அதன் தாக்கம் தமிழகத்தில் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

தோல்விக்கு EVM மீது பழிபோட ராகுல் முடிவு: அமித் ஷா

image

உத்தர பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ச்சில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி தோல்வியடையும், இத்தோல்விக்கு EVM மீது பழிபோட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

error: Content is protected !!