News May 31, 2024

தாய்ப்பால் விற்பனையில் அதிர்ச்சித் தகவல்

image

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த முத்தையா கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் இருந்து தாய்ப்பாலினை பெற்று விற்பனை செய்து வந்ததாக முத்தையா தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய உணவுத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

News May 31, 2024

விவேகானந்தர் மண்டபம் சென்றவர்கள் வெளியேற்றம்

image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலையில் சென்றவர்கள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி அங்கு தியானத்தில் ஈடுபட்டிருப்பதால், மக்கள் சென்றுவர காலையில் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 10 மணியளவில் சிலர் சுற்றுலாப் பயணிகள் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், திடீரென 12 மணியளவில் அவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

News May 31, 2024

இந்திய அணி அச்சுறுத்தலாக இருக்கும்: மைக்கேல் கிளார்க்

image

டி20 உலகக் கோப்பைத் தொடரை வெல்ல விரும்பும் அணிகளுக்கு இந்திய அணி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார். இந்திய அணி சுழற்பந்து வீச்சை அதிகம் நம்பியுள்ளது எனக் கூறிய அவர், டி20 போன்ற குறுகிய வடிவிலான நிறையப் போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது என்றார். அதே போல மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில், இந்திய அணி நல்ல ஃபார்மில் உள்ளது எனவும் கூறினார்.

News May 31, 2024

தாய்ப்பால் விற்பனை ஏன்?

image

தாய்ப்பாலை விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனையும் மீறி விற்பனை நடைபெறுவது ஏன்? தாய்ப்பால் அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயரும் என்றும், புரதச் சத்து அதிகரிக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால், இதில் உண்மையில்லை என்று உணவுப் பாதுகாப்புத்துறை ஏற்கெனவே எச்சரித்துள்ளது. மாறாக, குழந்தைகள் அல்லாதோர் தாய்ப்பால் அருந்துவதால் பாக்டீரியா தொற்று அபாயம்தான் ஏற்படுகிறது.

News May 31, 2024

சென்னையில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்

image

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட தாய்ப்பால் பாட்டில்களை உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புரத மாத்திரைகள் விற்பதற்காக அனுமதி பெற்ற முத்தையா என்பவர், தாய்ப்பால் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிறிய சிறிய 50 மில்லி பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் விற்கப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தையாவின் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

News May 31, 2024

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

image

மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜூன் 11 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ‘எண்ணும் எழுத்தும்’ முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் ஆகும்.

News May 31, 2024

என்ன சாப்பிடுகிறார் மோடி?

image

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் 45 மணி நேர தியானத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நேரத்தில், அவர் நீராகாரம் மட்டுமே அருந்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று கன்னியாகுமரிக்கு வந்திறங்கியவுடன் இளநீர் அருந்திய மோடி, தியானத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று காலை சூரிய உதயத்தை வணங்கிவிட்டு திராட்சை பழரசம் அருந்தினார். நாளை வரை அவர் நீராகாரம் மட்டுமே அருந்தவிருக்கிறார்.

News May 31, 2024

தவெக நிர்வாகிகள் நாளை நியமனம்

image

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை 11 நிர்வாக மாவட்டங்களாகப் பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றப் பின்னணி இல்லாதவர்களாகத் தேர்ந்தெடுத்து நியமித்திருக்கிறாராம் விஜய்.

News May 31, 2024

பிரஜ்வால் ரேவண்ணா மீது மேலும் 2 வழக்கு

image

ஆபாச வீடியோ புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா மீது சிறப்பு விசாரணைக் குழு மேலும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அவர், இன்னும் சற்றுநேரத்தில் மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட உள்ளார். அதன் பின், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

News May 31, 2024

தேர்தலின் போது சிக்கிய ₹1,100 கோடி

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நாடு முழுவதும் நடந்த சோதனையில், கணக்கில் வராத ₹1,100 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2019 தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ₹390 கோடியை காட்டிலும் 182% அதிகமாகும். அதிகபட்சமாக டெல்லி, கர்நாடகாவில் ₹200 கோடியும், தமிழகத்தில் ₹150 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!