News March 21, 2025

IPL 2025: முதல் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

image

IPL 2025 போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது. KKR – RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை அங்கு கனமழை பெய்ய 90% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும்.

News March 21, 2025

நாமினிகள் எளிதாக அணுக ‘செபி’ வசதி

image

இறந்தவர்களின் கணக்கை நாமினிகள் எளிதாக அணுக வசதியாக, டிஜிலாக்கருடன் இணைந்து செயல்பட உள்ளதாகப் செபி (SEBI) அறிவித்துள்ளது. இதனால் பயனர் மறைந்தால், அவர் நியமித்த நாமினிகளுக்கு டிஜிலாக்கர் கணக்கைப் படிக்க மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும், இதன் மூலம் பங்குச்சந்தையில் பல கோடி மதிப்பிலான அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சொத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்றும் கூறப்படுகிறது.

News March 21, 2025

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து (தகுதியான பெண்கள்) விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்பித்து மேல்முறையீடு செய்யலாம் என அரசு கூறியுள்ளது. இதை அதிகாரிகள் கவனமாக சரிபார்க்க வேண்டும் என்றும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டு, ஆதார், மொபைல் எண், வங்கி பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் PHOTO கொடுத்து விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

News March 21, 2025

இது கேவலத்திலும் கேவலம்: BJP

image

டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் ஒட்டுவதைத் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, பாலியல் வன்கொடுமை, கொலைகள் & குடிபோதையில் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்தும் குண்டர்களை காவல்துறையால் தடுக்க முடியவில்லை. ஆனால், பலரின் குடியைக் கெடுக்கும், டாஸ்மாக் கடைகளைப் பாதுகாக்க, துப்பாக்கியுடன் காவல் காப்பது கேவலத்திலும் கேவலம் என்று விமர்சித்துள்ளது.

News March 21, 2025

டிரைவர், கண்டக்டர் வேலை: இன்றே விண்ணப்பிக்கலாம்!

image

அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி <>www.arasubus.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்.21 ஆம் தேதிக்குள் பதிவு செய்து விடுங்கள்.

News March 21, 2025

IPLல் 2 பந்து: புதிய விதி அறிமுகம்

image

IPL போட்டியின் நடப்பு சீசனில் புதிய விதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இரவு நேர ஆட்டங்களில் பந்து ஈரமாகி விடுவதால், 2 ஆவது இன்னிங்ஸில் புதிய பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஆவது ஓவருக்கு பின், நடுவரிடம் முறையிட்டு புதிய பந்து கேட்கலாம். பந்தின் மீது எச்சில் தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. IMPACT வீரர் விதிமுறை 2 ஆண்டுகளுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2025

வெயில் காலம் வருது.. இது முக்கியம் மக்களே

image

வெயில் காலம் ஆரம்பிச்சா வெளியில தலை காட்ட முடியாது. ஆனால் வெளில போகலன்னா பொழப்பு ஓடாது. வெயில் காலத்துல வெப்பத்தின் காரணமாக, உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து `ஹீட் ஸ்ட்ரோக்’ வரலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல் போன்ற அறிகுறிகளுடன் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பவாத பாதிப்பு ஏற்படும். இதனால் வெயில் நேரத்தில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

News March 21, 2025

80 நாள்களில் 113 நக்சல்கள் சுட்டுக்கொலை!

image

சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் நமது படை வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்று வருகின்றனர் என அமித் ஷா பாராட்டியுள்ளார்.

News March 21, 2025

Gpay, PhonePe பயன்படுத்துகிறீர்களா?

image

ஏப்.1ஆம் தேதி முதல் NPCI (National Payments Corporation of India) புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த உள்ளது. பயன்பாட்டில் இல்லாத, செயலற்ற மொபைல் எண்களை வரும் 31ஆம் தேதிக்குள் நீக்க வங்கிகள், UPI செயலிகளுக்கு NPCI உத்தரவிட்டுள்ளது. இதனால், உங்கள் வங்கிக் கணக்கு செயலற்ற மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும். அதன் பின், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட PhonePe, Gpay சேவைகளைப் பெற முடியாது.

News March 21, 2025

மீண்டும் நிலநடுக்கம்; அலறிய பொதுமக்கள்…!

image

ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் நிகழ்ந்தது. கடந்த 13 ஆம் தேதி ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கின. இந்தச் சூழலில், இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணி அளவில் 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் நேரிட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

error: Content is protected !!