India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை விஜயலட்சுமி வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சீமானுக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதித்துறையை அவமதிக்கும் வகையில் சீமான் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், எழும்பூர் நீதிமன்ற உத்தரவின் விவரத்தைத் தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.
எம்ஜிஆர் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள் திமுகவினர்; ஆனால், வேறு எங்கோ ஒருவர் சாணக்கிய தந்திரத்தோடு கணக்குப்போட்டு, அதிமுகவை அபகரிக்க முயற்சிப்பதாக பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்தார். உடனே எழுந்து பேசிய தங்கமணி, கூட்டணிக் கணக்கில் நாங்கள் ஏமாற மாட்டோம் என்று பதிலடி கொடுத்தார். இதற்கு பதிலளித்த CM ஸ்டாலின், ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
மே 7, 2021இல் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து, அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்காக தமிழக அரசு ₹7.12 கோடி செலவிட்டுள்ளது. இதில் பயணம், தங்குமிடம், விசா மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் அடங்கும் என்று RTI மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், அவரது துபாய் பயணச் செலவு குறித்து எந்த தகவலையும் அரசு வெளியிடவில்லை. இதை அரசியல் ரீதியாக விவாதப்பொருளாக மாற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
₹10,000க்கு எவ்வாறு இலவச லேப்டாப் தரமானதாக இருக்கும் என சட்டசபையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணவர்களுக்கு வழங்கப்படும் <<15756642>>லேப்டாப்பின்<<>> தரத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும், நிச்சயம் அவை தரமாக இருக்கும் என்றும் உறுதியளித்தார். அத்துடன், ஒரு லேப்டாப் ₹20,000 விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் 2005இல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘சச்சின்’ திரைப்படம் ஏப்.18இல் ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுத்ததால், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். தற்போது அவரது நடிப்பில் ‘ஜனநாயகன்’ விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. அதற்குமுன் இப்படம் வெளியாக இருப்பதால், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கிய பிரபல யூடியூபர் MR.Beast–க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோகோ பண்ணைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியாக, காலை உணவுத் திட்டத்தை அவர் தொடங்கியுள்ளார். இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை பள்ளியில் ஒன்றில் முதல் வாரத்திலேயே 10% உயர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவை பாஜக கைப்பற்ற துடிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர். அதற்கு வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரைக்கு பின் பேசலாம் என சபாநாயகர் தெரிவித்தார். அதிருப்தியடைந்த அதிமுகவினர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி 10 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸில் சிக்கியுள்ளனர். 2014இல் கடலூர் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் 16 பேருக்கு 2019இல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சதீஷ், தமிழரசி தம்பதி வசமாக சிக்கியுள்ளனர்.
சோஷியல் மீடியாக்களில் அதிகம் பின்தொடரப்படும் IPL அணி எது தெரியுமா? நம்ம தல தோனி இருக்கும் சென்னை அணி தான். இன்ஸ்டா, பேஸ்புக், x என்று 3 சோஷியல் மீடியாக்களிலும் CSKவுக்கு மொத்தமாக 42 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். 2வது இடத்தில் ரோஹித் சர்மாவின் மும்பை அணியும், அதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலியின் பெங்களூரு அணியும் இடம் பிடித்திருக்கின்றன. கடைசி இடத்தில் லக்னோ அணி உள்ளது.
தமிழகத்தையே அதிரவைத்த கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில், பிடிபி இயக்கத் தலைவர் மதானிக்கு எதிராக சாட்சியாக சேர்க்கப்பட்டவர் கேரளாவை சேர்ந்த முன்னாள் நக்சலைட்டான கடல முகமது(79). போலீஸ் அவரை எவ்வளவு சித்ரவதை செய்தபோதும், பொய்சாட்சி சொல்ல மறுத்து, 9 ஆண்டு சிறைக்கு பின் குற்றமற்றவர் என விடுதலையானார். நேர்மைக்கும், துணிவுக்கும் சமூக செயற்பாட்டாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவர் காலமானார். RIP!
Sorry, no posts matched your criteria.