India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். அதேபோல், போட்டியிட்ட மேலும் 4 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியடைந்தது. பிரேமலதா தேமுதிக தலைவரான பிறகு நடந்த முதல் தேர்தலே முற்றும் கோணலாகியுள்ளது. இத்தேர்தலில் வென்று சட்டப்பேரவைத் தேர்தலில் பேரம் பேசலாம் என்ற அவரின் எதிர்பார்ப்பில் மண் விழுந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். நாதகவுக்கு மாநில அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலில் ஏமாந்து போன விரக்தி அடைந்த இளைஞர்கள்தான் சீமானுக்கு வாக்களிக்கிறார்கள். பிரிவினைவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர்ப்போம்” என்றார்.

2019 தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி, இம்முறை 62 இடங்களில் போட்டியிட்டு, 37 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் வாக்கு வங்கியை உயர்த்திய கட்சிகளில், பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. 33.59% வாக்குகளுடன் வாக்கு வங்கி 7 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உ.பி.,யில் தனிப்பெரும் கட்சியாகவும், மக்களவையில் 3ஆவது பெரிய கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

டெல்லியில், பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நடப்பு மக்களவையை கலைப்பது என்றும், அதற்கான பரிந்துரை கடிதத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதன்பின் புதிய அரசு அமையும். புதிதாக தேர்வான எம்.பிக்கள் பதவியேற்றுக் கொள்வர்.

தேர்தல் முடிவுகள் அதிமுக எதிர்பார்த்தது போல அமையவில்லை. போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அதேப்போல் தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி பெறுவோம் எனக் கூறிய பாஜகவும் ஏமாற்றம் அடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அதிமுக, பாஜக அலுவலகங்கள் களையிழந்து காணப்படுகின்றன. கட்சித் தொண்டர்கள் சிலரே தென்படுகின்றனர். அவர்களின் முகத்திலும் ஏமாற்றமே காணப்படுகிறது.

பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் உ.பி.,யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் INDIA கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. இங்கு பிரசாரத்தில், தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னிறுத்தி அகிலேஷ் மற்றும் ராகுல் பேசியிருந்தனர். மேலும், INDIA கூட்டணி வெற்றி பெற்றால் ராணுவத்தில் அக்னி வீரர் முறை ரத்து செய்யப்படும் என ராகுல் பேசியதும் வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மெஜாரிட்டி இல்லாத பாஜக, மத்தியில் ஆட்சியமைக்கக் கூடாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். 1989, 1998 ஆகிய ஆண்டுகளில் கூட்டணி ஆட்சியால் பாஜகவுக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சுட்டிக் காட்டியிருக்கும் அவர், மாறாக INDIA கூட்டணியை ஆட்சியில் அமரவிட்டு வலுவான எதிர்க்கட்சியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 25இல் பாஜக வென்றது. காங்கிரஸ் 1 தொகுதியில் வென்றுள்ளது. பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் நாகாஜி தாகுர் 30,406 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். குஜராத்தில் 2009 தேர்தலில் 11 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 2014, 2019 தேர்தல்களில் ஒன்றில் கூட வெல்லவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காங்கிரஸ் வென்றுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்ததற்கு 5 காரணங்கள் கூறப்படுகிறது. மெகா பேரணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டியது, உள்ளூர் அமைப்புகளைச் சந்திக்க மறுத்தது, மக்களின் அன்றாட பிரச்னைகளை பேச மறுத்தது, தோல்வியில் முடிந்த ராமர் கோவில் பிரசாரம், அக்னிபாத் திட்டம் ஆகியவை பாஜகவின் சறுக்கலுக்கு காரணமாக அமைந்துள்ளதாக க்க்

பிரேம்ஜி திருமண விவகாரத்தில் தங்கள் பிரைவசிக்கு மதிப்பு கொடுத்து அமைதியாக இருங்கள் என இயக்குநர் வெங்கட் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார். பிரேம்ஜி திருமணத்தை எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதால் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. யூகத்தின் அடிப்படையில் மணமகள் குறித்த தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், விரைவில் GOAT அப்டேட் வரும் என்றும் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.