India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் தனித்து களமாடிய நாம் தமிழர் கட்சி 36 லட்சம் வாக்குகளை நெருங்கியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய (30,41,717) வாக்குடன் ஒப்பிடுகையில் சுமார் 5 லட்சம் வாக்குகள் அதிகம். தூத்துக்குடி, தஞ்சை, பெரம்பலூர், இராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட 8 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கு மேல் வாக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் 8% வாக்குடன் நாதக மாநில அந்துஸ்து பெறவுள்ளது.

தமிழ்நாட்டில் 12 மணி வரை 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், தேனி, தென்காசி, சென்னை, பெரம்பலூர், திருவள்ளூர், சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கவனமாக செல்லவும்.

பாஜக தலைமையிலான NDA கூட்டணி 290+ தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி 230+ தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், புதிதாக கூட்டணியில் இணைய உள்ள கட்சிகளுடன் இனிமேல் தான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தங்களது யுக்திகளை கூறினால், மோடி அதை பயன்படுத்தி புத்திசாலி ஆகிவிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை விசிக பெற உள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற, மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெல்ல வேண்டும். அல்லது, மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுகளில் 8% வாக்குகளை பெற வேண்டும். அந்த வகையில், 2 தொகுதிகளில் வென்றதால் விசிகவுக்கு அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

தமிழ்நாடு & புதுச்சேரியில் 40/40 என்ற வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள உதயநிதி, “மாநில சுயாட்சிக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முழங்கிய கழகத்தின் உரிமைக் குரல்கள் மக்களவையில் இன்னும் அழுத்தமாக ஒலிக்கும்” என தெரிவித்துள்ளார்.

பலாப்பழம் சின்னத்தை கண்டறிந்து தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அவர், IMUL வேட்பாளர் நவாஸ் கனியிடம் தோல்வியை தழுவினார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தன்னை வீழ்த்துவதற்காக பல ஓபிஎஸ்-களை கங்கணம் கட்டிக்கொண்டு சுயேச்சையாக களம் இறக்கினார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்காக, தமிழகத்தில் மட்டும் பிரதமர் மோடி 8 முறை சுற்றுப்பயணம் செய்தார். குறிப்பாக, சென்னை & கோவையில் சாலைப் பேரணி போன்ற பிரசாரங்களை மேற்கொண்டார். ஆனாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. மேலும், பல தொகுதிகளில் பாஜக 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மூலம், பாஜகவை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாக புரிவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம், 2014 மக்களவைத் தேர்தலில் 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், 2019 மக்களவைத் தேர்தலில் 4,79,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அடுத்தடுத்த தேர்தலில் அவருக்கான வாக்குகள் அதிகரித்த நிலையில், தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு, 3.95 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 2ஆவது இடத்தையும், பாஜக சின்னத்தில் போட்டியிட்ட பாரிவேந்தர் 3ஆவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 291 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்த INDIA கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மற்றவை 17 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.