India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, மோடி 3ஆவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, அமைச்சரவைக்கான பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா, மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் நடவடிக்கையால் 13 இடங்களில் பாஜகவுக்கு டெபாசிட் பறிபோனதாக குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலைக்கு அதற்கான தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் பாஜகவின் 14% வாக்கு என்பது வளர்ச்சி அல்ல என்றும், அது அசிங்கமானது எனத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் NDA மற்றும் INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்தனர். விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துகளை தெரிவித்தார்.

3ஆவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியால் இந்தியா-அமெரிக்க உறவு வலுப்படும் என ஜோ பைடன் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மோடியின் வெற்றிக்கு சீனா ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நியூ யார்க்கில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் Gareth Delany 26 ரன்கள் எடுத்தார். IND தரப்பில் ஹர்திக் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய IND அணி, 12.2 ஓவர்களில் 97/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

* மேஷம் – மன உறுதியுடன் செயல்படுங்கள் , *ரிஷபம் – இன்றைய நாள் நிறைவாக இருக்கும், *மிதுனம் – செய்யும் செயலில் ஆர்வம் தேவை, *கடகம் – ஆக்கப்பூர்வமான நாளாக அமையும், *சிம்மம் – சோர்வு ஏற்படும், *கன்னி – பயம் உண்டாகும், *துலாம் – தடை வரும், *விருச்சிகம் – இன்பம் ஜொலிக்கும், *தனுசு – மகிழ்ச்சி பொங்கும், *மகரம் – கோபத்தை தவிர்க்கவும், *கும்பம் – அடுத்தவர்களுக்கு உதவி செய்யவும், *மீனம் – பக்தி உண்டாகும்.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் வென் சி ஹூவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 15-21, 21-15, 14-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்பை 21-18, 21-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் வீழ்த்தினார்.

தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த சூழலில், தனி விமானம் மூலம் திருச்சி வந்த அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருமயம் சென்று கோட்டை பைரவரை வழிபட்டு சென்றார். இவ்வளவு மெனக்கெட்டு வந்து, அவர் பைரவரை வழிபட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. கோட்டை பைரவரை வழிபட்டால் ஆட்சி நிலைக்கும் என்பது நம்பிக்கை. அமித் ஷாவின் இந்தப் பயணம் அந்த வேண்டுதலுக்காகவும் இருக்கலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

மோடி தலைமையில் அமையவுள்ள பாஜக அரசு அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. NDA கூட்டணியில் எந்நேரத்திலும் கருத்து வேறுபாடு எழ வாய்ப்பு இருக்கிறது. பாஜகவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. நிதிஷ், சந்திரபாபு, ஷிண்டே ஆகியோரின் கண் அசைவுகளை கண்டுகொள்ளவில்லை என்றால், ஆட்சி நிலைக்க வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களை பழிவாங்க விரும்பும் என ஆஸி., அணி வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மீண்டும் இறுதிப் போட்டியில் மோதினால் அது நன்றாக இருக்கும் என தெரிவித்த அவர், இந்திய மக்கள் அனைவரும் அதை விரும்புவார்கள் என கூறியுள்ளார்.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.