India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி தொடர்ந்திருந்தால் 30 தொகுதிகளை வென்றிருப்போம் என்றார். எல்.முருகன், தமிழிசை ஆகியோர் தமிழக பாஜக தலைவர்களாக இருந்த போது தங்கள் கூட்டணியில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலை சாதகமாக்கி, நிதித்துறை, உள்துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய துறைகளை விட்டுத்தர முடியாது என பாஜக கறார் காட்டுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, நாமக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது.

மத்திய அமைச்சரவையில் 6 கட்சிகளுக்கு இடம் கொடுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம், ஜன சேனா, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆகிய கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தீவிர ஆலோசனையில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், தமிழக மாணவ, மாணவிகள் 58.4% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மே 5ஆம் நடந்த இந்தத் தேர்வில், தமிழக மாணவர்கள் 1.3 லட்சம் பேர் எழுதினர். இதில், 85,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 8 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு தமிழக தேர்ச்சி விகிதம் 54.4% ஆக இருந்தது. தற்போது 4% அதிகரித்து தேசிய சராசரியை (56.4%) முந்தியது.

மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் NDA கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவால் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சரத் பவாரிடம் இருந்து பிரிந்து சென்று, பாஜக கூட்டணி அரசு உருவாக காரணமாக இருந்தவர் அஜித் பவார். அவரது அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் மனமாற்றம் அடைந்த அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் மீண்டும் சரத் பவாரிடமே செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாக்கூர், விவேக் தங்கா வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத்தில் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து, ‘ராமாயணம்’ டிவி தொடரில் லக்ஷ்மணனாக நடித்த சுனில் லஹேரி அத்தொகுதி மக்களை வசை பாடியுள்ளார். வனவாசம் சென்று வந்த சீதையை சந்தேகப்பட்ட அயோத்தியை சேர்ந்த அதே மக்கள்தான் இவர்கள் எனவும், அயோத்தியின் மக்கள் தங்கள் மன்னனுக்கு எப்போதும் துரோகம் செய்பவர்கள் என்பதற்கு வரலாறே ஆதாரம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விருதுநகரில் ஓய்வுப்பெற்ற நீதிபதி முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரும் தேமுதிகவின் கோரிக்கை தவறானது என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடத்தில் தான் நள்ளிரவு வரை அத்தொகுதிக்கான பொறுப்பாளர் ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன் இருந்தனர். அப்போது எதிர்க்காமல், அமைதியாக சென்றது ஏன்? பிரேமலதா கூறும் பொய் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என்றார்.

பெரும்பான்மை இல்லாமல், மாநிலக் கட்சிகளை நம்பி பாஜக ஆட்சியமைப்பது, மாநில அரசுகளுக்கான வெற்றி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மாநில அரசுகளுக்கு முன்பு இருந்த குடைச்சல் குறையும் எனவும், பாஜகவால் முன்பு போல் மாநில அரசுகளை எளிதாக அணுக முடியாது என்றும் கூறுகின்றனர். இந்துத்துவா செயல்திட்டத்தை புகுத்துவது, மாநிலக் கட்சிகளை ஒடுக்குவது போன்றவற்றை சந்திரபாபு விரும்ப மாட்டார் எனத் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.