India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகர் பிரேம்ஜிக்கு நாளை காலை 9 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. நீண்ட வருடங்களாக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்த பிரேம்ஜி, தற்போது 45 வயதில் திருமணம் செய்து கொள்ள போகிறார். கடந்த மே 30ஆம் தேதி திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது பிரேம்ஜி மணப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

2024 – 2025ஆம் கல்வியாண்டுக்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

டேஸ்ட் அட்லஸ் நிறுவனம், உலகின் மிகச்சிறந்த 100 சட்னி வகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் கொத்தமல்லி சட்னி 47ஆவது இடத்தையும், மாங்காய் சட்னி 50ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. சட்னி என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று. அதன் வகைகள் ஏராளம். புதினா சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, பூண்டு சட்னி, கடலை சட்னி என சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு எது பிடிக்கும்?

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், மோடி நாளை பிரதமராகப் பதவியேற்க உள்ளார். இதையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி பதவியேற்பு விழாவில் 7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பது, குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், நெதர்லாந்து அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி, முதல் 10 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அபாரமாக பந்துவீசிய மார்க்கோ ஜென்சன் 2, பார்ட்மேன், நோர்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

நேரம் வரும்போது INDIA கூட்டணி ஆட்சி அமைக்கும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், INDIA கூட்டணி ஆட்சி அமைக்காது என யாரும் நினைக்க வேண்டாமெனவும், நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார். பாஜகவை INDIA கூட்டணி உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்களின் கட்சிக்குள்ளேயே பல பிரிவுகள் உருவாகத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

நியூசி.,க்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில், ஆப்கன் கேப்டன் ரஷீத் கான் புதிய சாதனை படைத்துள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக, நியூசி., கேப்டன் டேனியல் வெட்டோரி 20/4 விக்கெட்டுகள் எடுத்ததே சிறந்த பவுலிங்காக இருந்தது.

IND-PAK இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, நாளை இரவு நடைபெறவுள்ளது. போட்டியின் போது தாக்குதல் நடத்தப்படும் என சமீபத்தில் ISIS அமைப்பினர் அச்சுறுத்தியதால், பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, நியூயார்க், நாசாவ், அமெரிக்கா, FBI என பல்வேறு துறையைச் சேர்ந்த போலீசார் மைதானத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதனை ஏற்பதில் ராகுல் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. கட்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பொறுப்பினை ஏற்பது குறித்து இதுவரை ராகுல் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நிறைவு பெறும் கட்டத்தை எட்டியுள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் குணசேகரன்தான். அக்கதாப்பாத்திரத்துக்கு உயிர்கொடுத்த மாரிமுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் குழுவினர் மாரிமுத்துவை Miss செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.