News March 22, 2025

எந்த blood group-க்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு அதிகம்

image

மருத்துவ புள்ளிவிவர ஆய்வின் அடிப்படையில்: *AB ரத்தம் கொண்டவர்களுக்கு ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு அதிகம், நினைவாற்றல் பிரச்சனைகள் வரலாம் *A, B இரண்டு குரூப்புக்கும் டைப்-2 நீரிழிவு வாய்ப்பு அதிகம். *A மன அழுத்தம், வயிறு புற்றுநோய் வாய்ப்பு அதிகம். *A, AB, B இதய நோய், கணைய புற்றுநோய் வாய்ப்பு அதிகம். * O நீண்ட ஆயுளுக்கு வாய்ப்பு. மற்ற குரூப்களுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு நோய் தாக்க வாய்ப்பு குறைவு.

News March 22, 2025

இரவு 1 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை கொட்டும்

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.

News March 22, 2025

திருமணத்தை பதிவு செய்வது எப்படி? (1/2)

image

திருமணத்தை பதிவு செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் www.tnreginet.gov.in இணையதளத்தில் பதிவாளர் அலுவலகத்தில் அப்பாயின்ட்மென்ட் முன்பதிவு செய்ய வேண்டும். முகவரி, வயது ஆவணம், செல் எண், சாட்சிகள் விவரம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, நமது திருமணம் நடைபெற்ற பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து, அங்கு செல்லும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.

News March 22, 2025

திருமணத்தை பதிவு செய்வது எப்படி? (2/2)

image

தொடர்ந்து பணத்தை கட்டி, REFERENCE எண் பெற வேண்டும். பிறகு தேர்வு செய்த நேரத்தில் 2 சாட்சிகள், திருமண அழைப்பிதழ், வயது சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். திருமண தம்பதிகள் மட்டும் அனைத்து ஒரிஜினல் சான்றுகளும் வைத்திருப்பது அவசியம். இவை அனைத்தும் சரியாக இருந்தால், உடனே அன்றைய தினத்தில் திருமண பதிவு சான்று அளிக்கப்படும். இல்லையெனில் சில நாட்கள் ஆகும்.

News March 22, 2025

பாலியல் தொல்லை: மாமனாரை அடித்துக் கொன்ற மருமகள்!

image

அனைவரும் அஞ்சி நடுங்கும் படியான ஒரு சம்பவம் உ.பி. காசியாபாத்தில் நடந்துள்ளது. கணவரை இழந்த ஆர்த்தி என்ற பெண், குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மருமகள் என்றும் பாராமல் அவருக்கு மாமனாரே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த ஆர்த்தி, மாமனாரை நிர்வாணமாக்கி கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். ஆர்த்தியை போலீஸ் கைது செய்துள்ளது.

News March 22, 2025

சரவெடியாய் வெடித்த சால்ட்.. அதிரடி காட்டும் RCB!

image

கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி, சால்ட் ஆகியோர் வெளுத்து வாங்கினர். பவர்பிளே முழுவதும் பந்துகள் எல்லைக் கோட்டை நோக்கிப் பறந்தன. அதிரடியாக விளையாடிய சால்ட், அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பவர்பிளேயில் மட்டும் பெங்களூரு அணி 80 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.

News March 22, 2025

IPL 2025இல் விளையாடும் வயதான வீரர்கள்

image

IPL 2025ஆம் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. இப்போட்டித் தொடரில் 5 வயதான வீரர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்கள் யார்-யார் என பார்க்கலாம். 1) தோனி (வயது 43), சிஎஸ்கே அணி 2) டூ பிளசிஸ் (வயது 40) – டெல்லி கேபிடல்ஸ் 3) ரவிச்சந்திரன் அஸ்வின் (38)- சிஎஸ்கே 4) ரோஹித் ஷர்மா (37) – மும்பை இந்தியன்ஸ் அணி 5) மொயின் அலி (37) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

News March 22, 2025

வீட்டில் பணம் தங்காததற்கு இந்த 5 பழக்கங்களே காரணம்

image

வீட்டில் பணம் தங்காததற்கு, நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களும் காரணம் என்கிறது வாஸ்து. 1)வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைக்கக் கூடாது; கண்ணாடி ஜாடியில்தான் வைக்க வேண்டும். 2)கடவுளுக்கு உணவு படைக்கும்முன் அதை ருசிக்கக் கூடாது 3)மாலையில் (சூரிய அஸ்தமனம் முன்) விளக்கேற்ற கூடாது. 4)இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவப்படாமல் இருக்கக் கூடாது. 5)பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது.

News March 22, 2025

சம்மரில் பவர் கட் பிரச்னை வருமா?… அமைச்சர் விளக்கம்!

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். ஆனால், தமிழ்நாட்டில் போதுமான மின்சாரம் கையிருப்பு இருப்பதாகவும், 2030 வரை மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை இருக்காது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். எங்கேயாவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்பட்டால், அதுவும் உடனடியாக சரிசெய்யப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

News March 22, 2025

தொழுகை செய்தவர்கள் மீது தாக்குதல்: 44 பேர் பலி

image

நைஜர் நாட்டின் ‘கொகரவ்’ பகுதியில் மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ISIS குழு ஒன்றே காரணம் என தெரிவித்துள்ள அரசு, 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போது ISIS குழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

error: Content is protected !!