India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் ‘PM Kisan’ திட்டப் பயனாளிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக வரும் 31ம் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களான பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போனுடன் அரசு கள அலுவலர்கள் (அ) இ-சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் 9,59,25,578 பேரும், தமிழகத்தில் 21,94,651 பேரும் பயன்பெறுகின்றனர்.
திருமலை திருப்பதியில் சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்கள் புழக்கத்திற்கு வந்தன. அண்மையில் வரிசையில் காத்திருந்த இரு மாநில பக்தர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், கண்ணாடி பாட்டில்களை வைத்து தாக்கிக் கொண்டனர். இதில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது. இதனால் அலர்ட் ஆன TTD, மக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாக்கெட்டுகளை பயன்படுத்தலாமா என ஆலோசித்து வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல் கணினி அறிவியல் மற்றும் AI பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த பாடத்திட்ட மாற்றம், தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு 15 நாட்களில் முடிவடையும் எனவும், 6,029 மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு IPL தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் விளையாட மாட்டார் எனப்படுகிறது. அவருக்கு பதிலாக தற்போது ஷர்துல் தாக்கூரை ₹2 கோடிக்கு லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. IPL மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத ஆல் ரவுண்டர் தாக்கூர், லக்னோ அணியுடன் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நீட்டித்து வந்த மர்மம் விலகியுள்ளது. சுஷாந்த்தை காதலில் வீழ்த்தி, நடிகை <<15855388>>ரியா <<>>சக்கரவர்த்தி பல கோடி மோசடி செய்ததாக விமர்சித்த நெட்டிசன்கள் #ArrestRheaChakraborty என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்தனர். இதனையடுத்து, போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ரியா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுஷாந்த் மரணத்திற்கும், ரியாவுக்கும் தொடர்பில்லை என சிபிஐ கூறியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும் பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். முடிந்தால் அவரை TN நிதியமைச்சருடன் வாதம் செய்ய சொல்லுங்கள் என சவால் விடுத்துள்ள சேகர்பாபு, மாற்றான்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது என குற்றஞ்சாட்டினார். மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி என மனசாட்சி இல்லாமல் கூறுகின்றனர் என்றும் சாடியுள்ளார்.
<<15844776>>தங்கம்<<>> விலை கடந்த 2 நாள்களாகக் குறைந்த நிலையில், வரும் நாள்களில் மேலும் குறையும் எனப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். கடந்த வாரத்தில் 3,050 டாலர்களாக இருந்த 1 அவுன்ஸ் தங்கம் 3,023 டாலராக குறைந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருவதால் இது மேலும் குறையுமாம். அதோடு, பங்குச்சந்தையும் ஏற்றம் காணுவதால் முதலீட்டாளர்களின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியுள்ளது கவனிக்கத்தக்கது.
தனது கேரியரை மாற்றிய ‘குஷி’ படம் குறித்து இயக்குநரும், நடிகருமான SJ சூர்யா சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். குஷியின் பர்ஸ்ட் காப்பியை பார்த்த யாருக்கும் படம் பிடிக்கவில்லை என்று கூறிய அவர், ஆனால் ரிலீஸ் ஆனதும் பெரிய ஹிட் அடித்ததாக தெரிவித்தார். ஒருவேளை ரிலீஸ் ஆன பிறகும், படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்திருந்தால், அந்த வலியால் நான் செத்திருப்பேன் என்றார். உங்களுக்கு‘குஷி’ படம் பிடிக்குமா?
மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பாலிவுட் நடிகர் ராகேஷ் பாண்டேவின் உடல் மும்பையில் உள்ள சாஸ்திரி நகரில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ஏராளமான திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 1969இல் சினிமாவில் கால் பதித்த ராகேஷ் பாண்டே 2023 வரை ஈஷ்வர், தேவ்தாஸ், தில் சாஹ்தா ஹை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
TNல் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 4 பேர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தெருவில் நடக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் மக்களே!
Sorry, no posts matched your criteria.