India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் அதிக இடங்களில் வென்று ஆட்சியமைக்கும் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். பாஜக தமிழ்நாட்டில் பலூன் போல் உள்ளதாகவும், பலூன் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் வலுவானதாக கருத முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் அனைத்து தந்திரங்களையும் திமுக கூட்டணி முறியடித்து, மீண்டும் ஆட்சியில் அமர்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிஎஸ்கே அணியில் ருதுராஜ்(C), ரச்சின், தீபக் ஹூடா, சிவம் துபே, ஜடேஜா, சாம் கர்ரன், தோனி(WK), அஸ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது ஆகியோர் களமிறங்குகிறார்கள். அதேபோல், எம்ஐ அணியில் ரோகித், ரையான் ரிக்கெல்டன்(WK), வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ்(C), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், சான்ட்னர், தீபக் சாஹர், போல்ட், சத்யநாராயண ராஜு இடம்பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் குறித்து விஜய் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். திமுக அரசின் கபட நாடகத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட களத்தில் இருப்பதாக கூறிய அவர், அவர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என விமர்சித்துள்ளார். மேலும், எல்லாவற்றுக்கும் முன்னோடி என மார்தட்டும் விளம்பர மாடல் திமுக அரசு, ஆசிரியர்களை பார்த்து புறமுதுகிட்டு ஓடுவது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.
சென்னை, மும்பை அணிகள் மோதுவதையொட்டி சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மஞ்சள் ஜெர்சிகளால் நிரப்பியுள்ளது. ரசிகர்கள் இப்போதே ஆரவாரத்தை தொடங்கிவிட்டனர். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான எம்ஐ அணியும் சற்றுநேரத்தில் ஐபிஎல் யுத்தத்தை தொடங்க உள்ளன. இந்நிலையில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. 18வது சீசனை சிஎஸ்கே வெற்றியுடன் தொடங்குமா?
ஸ்பெயின் மொழியில் எல் கிளாசிக்கோ என்பதற்கு ஆங்கிலத்தில் The Classic என்பது பொருள். இந்த வார்த்தை அங்குள்ள கால்பந்து கிளப் அணிகளான பார்சிலோனா, ரியல் மாட்ரிட் மோதும்போது பயன்படுத்தப்படுகிறது. இப்படி சிறந்த அணிகள் மோதும் நிகழ்வை, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் எல் கிளாசிக்கோ எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இதுதான் IPL-ல் CSK vs MI போட்டியை ரசிகர்கள் அப்படி அழைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
பீஹாரின் போஜ்புரி பாடல்களில் வழக்கமாகவே ஆபாசம் சற்று அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பிஹார் அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பொதுவெளியில் ஆபாசமான போஜ்புரி பாடல்களை பயன்படுத்தக் கூடாது என அம்மாநில காவல்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டுக்கும் வேணும்னு நினைக்கிறீங்களா?
IPL-ன் எல் கிளாசிக்கோ என அழைக்கப்படும் சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த சீசன்களில் நடைபெற்ற போட்டிகளில் மும்பை அணியின் கையே ஓங்கி இருந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 37 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், 20 முறை மும்பையும், 17 முறை சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால் உக்ரைனை முழுமையாக அழித்தே தீருவேன் என ரஷ்யா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று கீவ்வில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 5 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். உக்ரைன் அனுப்பிய 147 ட்ரோன்களில் 97 சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் சொல்லப்படுகிறது.
சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவும் பிகில் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்பவருடன் திருமணமாகி, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கமலின் தீவிரமான ரசிகரான ரோபோ குடும்பத்துடன் அவரை நேரில் சந்தித்தார். அப்போது குழந்தையை கொஞ்சி விளையாடிய கமல், ‘நட்சத்திரன்’ என்று பெயர் சூட்டினார்.
வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேற்கொண்டு தேவைப்பட்டால் அதற்கான உரிய காரணத்தை கடிதமாக தந்து பெற்றுக் கொள்ளலாம். சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடு என்றும் 15 சிலிண்டருக்கு மேல் பதிவு செய்பவர்களுக்கு SMSல் தகவல் அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.