India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தின உரையில் PM மோடி RSS-ஐ புகழ்ந்து பேசியது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில், நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் இந்திய தாலிபன் தான் RSS எனவும், அதுதான் இந்தியாவில் பதிவு செய்யப்படாத ஒரே அமைப்பு என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் விமர்சித்துள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, மகாத்மா காந்தி RSS-ஐ ஏன் புகழ்ந்தார் என கேள்வி எழுப்பியுள்ளது.
குடிநீருக்காகச் சென்ற பட்டியலின மக்களை, மாற்று சமூகத்தினர் சாதிப்பெயரால் திட்டியுள்ளனர். தென்காசி தலைவன்கோட்டையில் இப்படி நடந்தது ஓரிரு நாள் அல்ல, 55 ஆண்டுகள். இதனிடையே, ஒரு பிரச்னைக்காக மதுரை கோர்ட் வந்த இக்கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் (70), நீதிபதியிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். மறுநாளே அப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை ஊர்களோ?
CM ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க முடியும் என பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியுள்ளார். 2026 தேர்தலில் இயற்கையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி அமையும் என்றார். மேலும், பாமகவினரின் மனங்களை எக்ஸ்ரே எடுத்து பார்த்து அனைவரது மனங்களும் குளிரும் வகையில் கூட்டணி முடிவை எடுப்பேன் என உறுதியளித்தார். குறிப்பாக, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் ஐ.பி., உள்பட மேலும் சில அமைச்சர்கள் ED பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரெய்டுக்கு பின்னணியில் நெல்லை விருந்து தான் காரணம் என்கின்றனர். சமீபத்தில் தனது நெல்லை வீட்டில் EPS, ADMK தலைகளுக்கு நயினார் விருந்தளித்தார். அப்போது, தேர்தல் பணிகளை முடக்க திமுக அமைச்சர்களின் பண பலத்தில் கை வைக்கவேண்டும், அதற்கு ரெய்டு தான் ஒரே வழி என இருவரும் டிஸ்கஸ் செய்ததாக கூறப்படுகிறது.
காதலியுடன் பழக மனைவி இடையூறாக இருந்ததால், BJP தலைவர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ராஜஸ்தானின் அஜ்மீரில் ரோஹித் சைனி (28), சஞ்சுவை(25) கொலை செய்து, அதனை கொள்ளை சம்பவம் போல செட்டப் செய்து நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் ரோஹித்தின் காதலி ரிது சைனியின் (25) வற்புறுத்தலின் காரணமாக, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரோஹித் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது.
<<17416427>>SBI வங்கியை<<>> தொடர்ந்து IMPS முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை HDFC வங்கியும் உயர்த்தியுள்ளது. அதன்படி, ₹1,000 வரை ₹2.5, ₹1,000 – ₹1 லட்சம் வரை ₹5, ₹1 லட்சத்திற்கு மேல் ₹15 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், NEFT முறையில் பணம் அனுப்புவதற்கும் ₹24 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும், சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு இனி 1 ஆண்டுக்கு 10 பக்கங்களை கொண்ட செக் புக் மட்டுமே இலவசம். SHARE IT.
அரசியலமைப்பின் வழியில் தன்னாட்சி அமைப்புடன் இயங்கும் தங்களை தவறான புகாரால் யாரும் மிரட்ட முடியாது என ECI தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார். BJP-க்கு ஆதரவாக மகாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ECI, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அசல் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குகளைச் செலுத்தினாலே திமுக வென்றுவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். CM தொகுதியில் 9,000 போலி வாக்குகள் இருந்ததாக <<17426871>>அனுராக்<<>> தாக்கூர் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, தங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை என்றார். பொன்னியின் செல்வனைப் போல் 2-ம் பாகம், 3-ம் பாகம் என திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் நீங்க போன் யூஸ் பண்றீங்க’னு, எந்த App-ல் மூழ்கி போயிருக்கீங்க’னு தெரிஞ்சிக்கணுமா? உங்க போனிலேயே இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் Settings-> Digital Wellbeing option சென்று பாருங்க. இது Iphone-களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நீங்க எவ்வளவு நேர விரையும் பண்றீங்க என புரியும். SHARE IT.
தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக BJP மாற்றியுள்ளதாக CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலம் CPI மாநாட்டில் பேசிய அவர், ஜனநாயகத்துக்கு அடிப்படையான தேர்தலையே கேலிக் கூத்தாக்கி விட்டதாக சாடினார். ECI ஆணையர் நியமனத்தில் சதி செய்கிறார்கள் என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி செய்கிறார்கள் என கூறினார். BJP உடன் இணைந்து ECI வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக INDIA கூட்டணியினர் கூறி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.