India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிஏஏவுக்கு தடை கோரி தாக்கலான மனுக்கள் குறித்து 3 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், பதில் அளிக்க 4 வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது. இதைக்கேட்ட உச்சநீதிமன்றம், 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
85 வயதுக்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான படிவம், வருகிற 20ஆம் தேதி முதல் வீடு வீடாக வழங்கப்பட இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான 12டி படிவம் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளது” என்றார்.
உலகில் அதிக காற்று மாசுயுடைய தலைநகராக டெல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் IQAir அமைப்பு, 2023ஆம் ஆண்டின் அதிக மாசடைந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா 3வது இடத்தில் உள்ளதென்றும், உலகில் அதிக மாசுயுடைய பெருநகராக பீகாரின் பெகுசராயும், அதிக மாசுயுடைய தலைநகராக டெல்லியும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
நடைபெற உள்ள IPL தொடரில் கம்பீர் KKR அணியின் வழிகாட்டியாக செயல்படவுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் அணியில் அவர் இணைந்த நிலையில், ஷாருக் தன்னிடம் பேசியது குறித்து பகிர்ந்துள்ளார். “2011இல் நான் அணியில் சேர்ந்தபோது என்னிடம் என்ன கூறினாரோ, அதையேதான் இப்போதும் கூறினார். இது உங்கள் அணி, நல்ல அணியை உருவாக்கு அல்லது அழித்துவிடு என்றார். அதற்கு இங்கிருந்து செல்லும் முன் நல்ல அணியை கட்டமைப்பேன்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவர் என அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது அவர்களின் விருப்பம் என்று கூறிய அவர், மூழ்குகிற கப்பலில் அவர்கள் ஏறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், நிவாரணத்தை பிச்சை எனக் கூறி தமிழக மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர், திமுக வழக்கறிஞர்கள், சமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
பாஜக கூட்டணியில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சி இணையலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை ராஜ் தாக்கரே இன்று சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜக கூட்டணியில் அக்கட்சி சேர்ந்து, தெற்கு மும்பை உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நயன்தாராவுக்கு ரூ.200 கோடி சொத்துகள் உள்ளன. மனசின்னகரே என்ற மலையாள படம் மூலம் 2003ல் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழில் ஐயா படம் மூலம் 2005இல் களம் கண்டார். இதுவரை 75 படங்கள் நடித்துள்ள நயன்தாரா, டாடா ஸ்கையின் 50 வினாடி விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கினார். இதேபோல் படம் ஒன்றுக்கு ரூ.10 கோடி சம்பளமாகப் பெறுகிறார். அவருக்கு ரூ.200 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன.
மக்களவை தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்திற்கு பதில் ஆட்டோ ரிக்ஷா சின்னம் கிடைக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அச்சின்னம் நாடாளும் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சின்னமும் தற்போது கிடைக்காததால், வேறு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்பது என்பது குறித்து நாதக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் கிடைக்கும் என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் திராவிடக் கட்சிகளின் வாக்கு விகிதம் கணிசமாகக் குறையும். வடக்கில் உ.பி., எப்படியோ அதேபோலத்தான் தெற்கில் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் காலூன்றினால் தென்னிந்தியாவைப் பிடித்துவிடலாம் என பாஜக நினைக்கிறது எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.