India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை EPS சந்தித்துள்ள நிலையில், இதில் கூட்டணி கணக்கு ஒன்றும் இல்லை என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானலும் சந்திக்கலாம் என்று கூறியிருக்கும் அவர், கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டியளித்திருக்கிறார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் EPS நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து பிரிந்த அதிமுக – பாஜக வரும் தேர்தலில் மீண்டும் கூட்டணியமைக்கும் என்று பேசப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால், இது கூட்டணிக்கான சந்திப்பு இல்லை என்று அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 தேர்தலை அதிமுக, பாஜக இணைந்து சந்தித்து தோல்வி கண்டபின், அதிமுக அக்கூட்டணியில் இருந்து விலகியது. அதற்கு, அண்ணாமலைதான் காரணம் என்று EPS பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார். அடுத்த முதல்வர் பாஜகவில் இருந்துதான் வருவார்கள் என்று அண்ணாமலை பேசியதுதான் கூட்டணி பிளவுக்கு காரணமாகப் பார்க்கப்பட்டது. அதன் பின்னரும் அண்ணாமலை மாற்றப்படாதது, டெல்லி தலைமை அவருக்கு ஆதரவாக இருந்ததை காட்டுகிறது.
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரத்தில், அவரது ஆதரவாளர் ஒருவர் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் காம்ராவை மிரட்டும் ஆடியோ வைரலாகி வருகிறது. நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்களோ, அங்கு வந்து அடிப்பேன் என ஷிண்டே ஆதரவாளர் கூற, நான் தமிழ்நாட்டில் தங்கியிருக்கிறேன், வாருங்கள் என குணால் கூறுகிறார். அதற்கு தமிழ்நாட்டிற்கு எப்படி வருவது என ஷிண்டே ஆதரவாளர் கோபப்படுவது ஆடியோவில் கேட்கிறது.
டாஸ்மாக்கில் ED ரெய்டு நடந்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் அதிகாரிகள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ED சோதனையின் போது நாங்கள் நடத்தப்பட்ட விதம் மனிதத்தன்மையற்ற செயல் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ED அதிகாரிகள் தங்களை ஓரிடத்தில் அடைத்து வைத்திருந்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். தாஜ் மகால், வருஷமெல்லாம் வசந்தம் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர், மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் பிளேயிங் XI-ல், 3 தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஷாருக் கான் ஆகிய 3 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
தமிழக பாஜக தலைவராக மீண்டும் அண்ணாமலை நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது பதவிக்காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், புதிய தலைவரை நியமிக்கும் பணிகளை பாஜக கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், தேர்தல் நெருங்குவதால், அண்ணாமலையின் தலைவர் பதவியை நீட்டிப்பு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
பிரபல பாக்சிங் வீராங்கனை சவீட்டி, தன் கணவனும் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனுமான தீபக் ஹூடா மீது <<15880251>>வன்கொடுமை வழக்கு<<>> பதிந்த நிலையில், புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விவாகரத்தை மட்டுமே தான் கேட்பதாகவும், தனக்கு சொத்து தேவையில்லை என்றும் தெரிவித்துள்ள சவீட்டி, தன்மீது தவறான இமேஜை ஏற்படுத்த தீபக் முயல்வதாகவும், அவர் ஆண்கள்மீது ஈர்ப்பு கொண்டவர் என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தாமரை கூட்டணி ஆட்சி அமையும் என்று தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் EPS டெல்லி சென்றிருக்கும் நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், தமிழிசையின் இந்தப் பேச்சு, அவர்களுக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.