India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சொந்த மாமாவைபோல் வடிவேலுவை பார்த்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆனால், வடிவேலு தங்களை ஏமாற்றி விட்டதாகவும், சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்க தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியிலுள்ள REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது நண்பர்களே!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் நாளை டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் என துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள CP ராதாகிருஷ்ணன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். PM மோடி, அமித்ஷா, JP நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி கூறியுள்ள அவர், தேசத்திற்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை எனவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். NDA-வுக்கு பெரும்பான்மை உள்ளதால் CP ராதாகிருஷ்ணனின் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது.
NDA-வின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது திமுகவுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. ‘INDIA’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, அந்த கூட்டணி வேட்பாளரை ஆதரிக்குமா?, தமிழர் என்ற அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ‘INDIA’ கூட்டணி வேட்பாளரை திமுக ஆதரித்தால் அதை கூறியே பாஜக அரசியல் செய்ய வாய்ப்புள்ளது. உங்க கருத்து என்ன?
விஜய் சேதுபதி அடுத்ததாக ‘கருடன்’ இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருவரும் ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் இணைந்து நடித்தனர். அதில் சசிகுமார் ஹீரோவாகவும், VJS வில்லனாகவும் நடித்திருந்த நிலையில், இப்புதிய படத்தில் எந்த கேரக்டரில் நடிக்க இருக்கின்றனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தினாலேயே பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிஹாரில் பேசிய அவர், பாஜக உண்மையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது எனவும், 50% எனும் இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், INDIA கூட்டணி ஆட்சியமைத்ததும் 50% உச்ச வரம்பு நீக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை, அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகளாக அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் தனித்துவமாக அறியப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வாகவிருப்பது பெரும் மகிழ்ச்சி என அண்ணாமலை தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘AK 64’ படத்தில் நடிக்க அஜித் ₹200 கோடி சம்பளம் கேட்டதால், சில தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், பட விநியோகஸ்தர் ராகுல் அப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். ஆனால், அஜித் கேட்ட தொகையை தர முடியாது என்பதால், இருவரும் ஒரு புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதாவது டிவி, OTT உரிமம் விற்பனையாகும் தொகை அஜித்துக்கு, தியேட்டர் வசூல் தயாரிப்பாளருக்கு என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாம்.
ஒடிஷா முன்னாள் முதல்வரும், BJD கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் (78) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வால் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை ஹாஸ்பிடல் விரைவில் வெளியிடும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானதால், டாக்டர்கள் அவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்தனர்.
Sorry, no posts matched your criteria.