India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶மார்ச் – 26 ▶பங்குனி – 12 ▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:00 AM
▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்
▶நட்சத்திரம் : திருவோணம் அ.கா 12.42
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 257 பயணிகளுடன் சீனா புறப்பட்ட விமானம், 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பியுள்ளது. பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோதுதான் விமானியிடம் பாஸ்போர்ட் இல்லையென தெரிந்ததாம். இதனால், திரும்பி சான் பிரான்ஸிஸ்கோ வந்த விமானம், புதிய விமானிகள் குழுவினருடன் மீண்டும் சீனா புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஒடிசாவில் சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோஷமிட்டனர். சபாநாயகர் அவர்களை எச்சரித்தும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இன்று (மார்ச்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தமிழர்களின் மருத்துவ ஏடுகளை களவாட வடக்கத்திய கும்பல் சூழ்ச்சி செய்வதாக கவிஞரும், சித்த மருத்துவருமான குட்டி ரேவதி குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழர்களின் மருத்துவ அறிவுக் களஞ்சியமான சித்த மருத்துவ மூல புத்தகங்கள் பலவற்றை, ஆயுர்வேத மருத்துவ அட்டவணையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் இணைத்துள்ளதை கண்டித்த அவர், இதை ஒன்றுபட்டு பாதுகாப்பது, எதிர்வினையாற்றுவதை நமது கடமையாக கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஷ்மிகாவின் சொத்து மதிப்பு ₹66 கோடியாக உள்ளதென Forbes அறிக்கை தெரிவிக்கிறது. புஷ்பா 2வில் நடிக்க ₹10 கோடி பெற்ற அவர், பொதுவாக ஒரு படத்திற்கு ₹4 கோடி சம்பளம் வாங்குகிறார். BOAT, 7UP, Meesho உள்ளிட்ட பிராண்டுகளின் விளம்பரங்கள் மூலமும் அவருக்கு வருமானம் வருகிறது. பெங்களூருவில் ₹8 கோடி பங்களா உள்பட நாடு முழுவதும் 4 இடங்களில் சொத்துக்கள், AUDI, ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட 4 சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.
இன்று (மார்ச்.26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சதமடிக்க வாய்ப்பிருந்தும் அதனை தியாகம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இறுதி ஓவரில் விளையாடியபோது, ‘எனது சதத்தை பார்க்காதே, நீ விளையாடு’ என தன்னிடம் கூறியதாக ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். தனது முதல் சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ் ஐயரை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளுகின்றனர்.
ரன்பிர் கபூர் நடிக்கும் பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரொமான்டிக் காமெடி கதையம்சத்தில் இப்படம் உருவாகி வருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது கீர்த்தி நடிக்கும் 2-வது ஹிந்தி படமாகும். முன்னதாக, ‘தெறி’ படத்தின் ரீமேக்கில், வருண் தவான் ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
போபாலில் 12 வயது சிறுமியுடன் விளையாடிய 4 வயது சிறுவன் மாயமாகி இருக்கிறான். அதன்பின், சிறுமி முன்னுக்கு பின் முரணாக பல பதில்களை கூறியிருக்கிறார். இதனையடுத்து, சிறுமியை விசாரித்த பெண் போலீஸ், சாமி வந்தது போல நாடகமாடியிருக்கிறார். இதனால் அச்சமடைந்த சிறுமி, சிறுவனை கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டார். 50 போலீசார் தேடியும் கிடைக்காத சிறுவன், இறுதியில் நாடகத்தின் மூலம் பிணமாக மீட்கப்பட்டான்.
Sorry, no posts matched your criteria.