India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பக்தர்களை வெளியேற்ற ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ராஜபாளையம் அருகே இரு வேறு இடங்களில் நித்தியானந்தா சீடர்கள் ஆசிரமம் கட்டி வசித்து வருகின்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளி. அவர் தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது.
மாரடைப்பின் காரணமாக காலமான, நடிகர் மனோஜ் பாரதிராஜாவுக்கு திரைத்துறையினர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா என உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே… சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா… உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த பீஹார் மாணவர் ஹர்ஷ்ராஜ் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாவில் தங்கியிருந்த ஓட்டலில் அவரது உடல் மீட்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களுக்குள் ஜோத்பூரில் மற்றொரு மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். ராஜஸ்தானில், இந்த ஆண்டு மட்டும் தேர்வு அழுத்தத்தால் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்த எண்ணம் எழுந்தால், 104 என்ற எண்ணை அழைக்கவும்!
பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு (48) இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, அவர் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்து கடந்த வாரம்தான் வீடு திரும்பியுள்ளார். ஆனால், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென்று 2வது முறையாக மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.
சென்னை என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் புகாரியை நோக்கி கொள்ளையன் ஜாபர் 2 முறை துப்பாக்கியால் சுட்டபோது, குண்டுகள் ஜீப்பில் பாய்ந்தன. இதனால், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சுட்டபோது, நெஞ்சில் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜாபர் உயிரிழந்தார். அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கர்நாடக பதிவெண் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான பூபேஷ் பாகல் வீட்டில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 10ஆம் தேதி ED அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், இன்று ராய்பூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதலே CBI அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் வாகனங்கள் மீது அவரது ஆதரவாளர்கள் கல் எறிந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவது, மனித கொலையை விட மோசமானது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. தாஜ்மஹால் அருகே பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் 454 மரங்கள் வெட்டிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இப்படிப்பட்டவர்களுக்கு கருணையே காட்ட முடியாது என தெரிவித்துள்ளது. ஒரு மரத்திற்கு ₹1 லட்சம் வீதம் அபராதம் செலுத்தியே ஆக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (NREGA) தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பார்லிமென்ட்டில் அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி குறித்து MP கனிமொழி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், 20 கோடி மக்கள்தொகை கொண்ட UPக்கு ₹10,000 கோடி, 7 கோடி மக்கள்தொகை கொண்ட TNக்கு ₹10,000 கோடி என பாரபட்சமின்றி வழங்கியதாகக் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பார்முலாவை பின்பற்ற அதிமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுக 170+, NDA 64 இடங்களில் போட்டியிட அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. இதில், BJP, DMDK, PMKவுக்கு இரட்டை இலக்கத்திலும், தமாகா, புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலும் சீட் கொடுக்கப்படலாம். சூழலை பொறுத்து, TTV கூட்டணியில் இணையக்கூடும்.
Sorry, no posts matched your criteria.