India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அடுத்த 5 ஆண்டுகள் மலையாள சினிமாவுக்கானது என நடிகர் ஃபஹத் ஃபாசில் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், மலையாள சினிமாவில் தற்போது 40-50% வரை வருவாய் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆவேஷம், ஆடு ஜீவிதம், பிரம்மயுகம் போன்ற படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. ₹100 கோடி வசூலை நோக்கி ஓடாமல், அர்த்தமுள்ள சினிமாக்களை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபேட் எனப்படும் மின்னணு ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டி தொடரப்பட்ட வழக்கில் இன்னும் சற்றுநேரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை மறுநாள் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால், இந்த தீர்ப்பை எதிர்பார்த்து அனைத்து அரசியல் கட்சியினரும் உள்ளனர்.
இந்தியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வதாக கூறிய அவர், இந்த நாடு அம்பேத்கரின் சட்டத்தின் படி ஆளப்பட வேண்டுமே தவிர, ஷரியத் சட்டத்தின் படி அல்ல என்று தெரிவித்தார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை 2 மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போனதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களையும் சென்றடைந்துள்ளது. இதை பாஜகவால் ஏற்க முடியாமல் தவறான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். பாஜக தலைவர்கள் முதலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்த்துவிட்டு அதன்பிறகு குற்றச்சாட்டுகளை கூறுங்கள் என அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லை என்றால், பதவி பறிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது தேர்தலில் வேலை செய்யாதவர்களின் லிஸ்ட்டை திமுக தலைமைக் கேட்டுள்ளதாம். இதில் சிலரின் பதவி பறிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. இதனால், திமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனராம்.
2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். ராகுல் காந்தி மாலை அமராவதியிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவிலும் இன்று இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொள்கிறார்கள்.
LSG-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், CSK கேப்டன் ருதுராஜ் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பொறுப்புடன் விளையாடிய அவர், 108*(60) ரன்கள் குவித்து, CSK அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், போட்டியில் தோல்வி அடைந்ததால், சதம் அடித்தும் தோல்வி அடைந்த கேப்டன்கள் வரிசையில் சஞ்சு சாம்சன் (119), சச்சின்(110*), கோலி (110*) ஆகியோரைத் தொடர்ந்து 4ஆவதாக இணைந்துள்ளார்.
தேர்தல் முடிவு வந்த உடன் அமைச்சரவையை மாற்றம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் அமைச்சர்களின் செயல்பாடு, வாங்கிக் கொடுக்கும் வாக்குகள், பொறுப்பு அமைச்சராக கடந்த இரண்டரை ஆண்டுக்காலச் செயல்பாடு, சமூக ரீதியான பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமாம். தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முக்கிய துறைகளும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் 40ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை குஜராத் அணி இன்று எதிர்கொள்கிறது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இரு அணிகளும் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற குஜராத் அணி இந்த போட்டியில் பதிலடி தருமா என ரசிகர்கள் கமெண்டில் கூறலாம்.
படத்திற்கு தேவைப்பட்டதாலேயே ‘ரெட்ட தல’ என்று பெயரிட்டுள்ளதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்களுக்கு என்னை பிடிக்கும் என்பது உண்மை என்றாலும் அஜித் ரசிகர்களை கவர இந்த டைட்டிலை வைக்கவில்லை. படம் வெளியான உடன் அது புரியும் வரும் என்ற அவர், இந்த தலைப்பை ஈடு செய்யும் வகையில் உழைத்திருப்பதாகவும் தெரிவித்தார். ‘ரெட்ட தல’ படத்தின் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.