India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் பிரித்து, அதனைப் பறிக்க காங்., திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியபோதே, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காங்., மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டுவந்து அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது என விமர்சித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைகளில் ராகுலும், மோடியும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக மோடி குற்றம் சாட்டிய நிலையில், எந்தப் பக்கத்தில் அப்படி உள்ளது எனக் கூற முடியுமா? என ராகுல் பதில் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு விவகாரங்களிலும் ஒருவருக்கொருவர் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்களை விற்கக்கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு டிரை ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யக் கூடாது. இதை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரித்த அதிகாரிகள், உணவாக டிரை ஐஸ் பயன்படுத்தியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
மம்தா பானர்ஜியை சிபிஐ கைது செய்து விசாரிக்க வேண்டும் என பாஜக தலைவர் அக்னிமித்ரா தெரிவித்துள்ளார். கடந்த 2016இல் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி, 26 ஆயிரம் ஆசிரியர் பணிநியமனங்களை மே.வங்க உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் மம்தாவின் உதவி இல்லாமல் எதுவும் நடந்திருக்காது, அவர் கைது செய்து விசாரிக்கப்பட வேண்டியவர் என அக்னிமித்ரா பால் குற்றம் சாட்டியுள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டுமென காங்., எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். சஞ்சு சாம்சனை, ஐசிசி போட்டிகளில் விளையாட விடாமல் பிசிசிஐ பலமுறை புறக்கணித்துள்ளது. நான் அவருக்காக பல வருடங்களாக குரல் கொடுத்து வருகிறேன். நடப்பு ஐபிஎல் தொடரில், பேட்ஸ்மேன் + கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை, உலகக் கோப்பையில் நிச்சயம் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பிரதமர் நேரத்திற்கு தகுந்தாற்போல் நிலைப்பாடுகளை மாற்றுவதாக ராகுல் விமர்சித்துள்ளார். மக்கள் அனைவரும் ஓபிசி என்று கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய பேச்சு வந்ததும் சாதியே இல்லை என பிரதமர் மாற்றிப் பேசினார். பிறகு, ஏழை, பணக்காரன் என்ற சாதி மட்டுமே உள்ளதாக அதையும் திரித்துக் கூறினார். அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பேசி மக்களைத் தொடர்ந்து குழப்புவதாக ராகுல் குற்றம்சாட்டினார்.
அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு, ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘ரெட்ட தல’ என்ற தலைப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க இருந்தார். அதற்காக, சுமார் 10 ஆண்டுகளாக இந்தத் தலைப்பின் உரிமையை வைத்திருந்தார். ஆனால், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையாததால், அவரது உதவி இயக்குநரான திருகுமரனுக்கு அப்படத்தின் பெயரை கொடுத்ததாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் மோசமான நிர்வாகத் திறமையே அவர்களது அழிவுக்கு காரணம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், தீவிரவாதம் மற்றும் நக்சல்களுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தீவிரவாதிகள் கொல்லப்படும்போது காங்கிரசார் கண்ணீர் விடுகின்றனர் என குற்றம் சாட்டினார். இது போன்ற காங்கிரஸ் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.
டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக ஏராளமான விவசாயிகளைப் போட்டியிட வைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த முறையும் தேர்தலுக்கு முன்பு இதே போன்று அறிவித்து, பின் அமித்ஷாவை நேரில் சந்தித்து தனது முடிவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி-குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. குஜராத் கேப்டன் ஷுப்மன் கில், இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற அவர், குஜராத் அணிக்கு இதுவரை 4 வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். முன்னணி கேப்டன்களுடன் போட்டி போடும் அவர், இன்று தனது அணியை வெற்றி பெறச் செய்வாரா?
Sorry, no posts matched your criteria.