News April 25, 2024

பறவைக் காய்ச்சல் காரணமாக எல்லையில் கடும் சோதனை

image

கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தமிழக எல்லையில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லையில் உள்ள கோழி, வாத்துப் பண்ணைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் கோழிகளுக்கு முற்றிலும் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

News April 25, 2024

உச்சநீதிமன்றத்தில் மம்தா மேல்முறையீடு

image

ஆசிரியர்கள் பணிநியமன விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மே.வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த 2016இல் 26 ஆயிரம் ஆசிரியர் பணியமர்த்தப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அந்த நியமனங்களை அம்மாநில உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் ரத்து செய்தது. இந்த தீர்ப்பு தேர்தல் நேரத்தில் மம்தா அரசுக்கு சிக்கலாகக் கருதப்படும் நிலையில், தற்போது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

News April 25, 2024

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் ஏப்ரல் 26ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரளா தேர்தலையொட்டி, குமரி, தேனி, கோவை எல்லை மாவட்டங்களிலும், கர்நாடகா தேர்தலையொட்டி ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய எல்லை மாவட்டங்களிலும் டாஸ்மாக் இயங்காது எனக் கூறப்படுகிறது.

News April 25, 2024

ஃபகத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ ₹100 கோடி வசூல்

image

‘ஆவேஷம்’ திரைப்படம், உலக அளவில் ₹100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த ஏப்.11ஆம் தேதி திரைக்கு வந்தது. ரங்கா கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் ஃபாசில், சக நடிகர்களுடன் இணைந்து கேங்ஸ்டர் காமெடியனாக வெளுத்து வாங்கி இருக்கிறார். இதனால் மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம், பிரம்மயுகம் போன்ற வெற்றிப் படங்கள் வரிசையில் ஆவேஷமும் இணைந்துள்ளது.

News April 25, 2024

ED கைதை எதிா்த்து உச்சநீதிமன்றம் சென்ற சோரன்

image

ED கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை ED ஜனவரி 31இல் கைது செய்தது. இந்நிலையில் இந்த கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் பிப்ரவரி 26இல் வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்

News April 25, 2024

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு

image

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளர்கள் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். பரவா பிலிம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி, படத்தின் லாபத்தில் 40% தருவதாகக் கூறி தன்னிடம் ₹7 கோடி வாங்கி ஏமாற்றியதாக அரூரைச் சேர்ந்த சிராஜ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி, படத் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

News April 25, 2024

இந்தியாவில் சேலம் 3ஆவது இடம்

image

அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் இந்தியாவிலேயே 3ஆவது இடத்தை (42.3 டிகிரி செல்சியஸ்) சேலம் பிடித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் அனந்தபூர் முதலிடமும், ஒடிசாவின் பரலாகிமுண்டி 2ஆவது இடமும் பிடித்துள்ளன. சேலத்தில் இன்றும் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்கவும். நேற்று கரூர் 3வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

நாட்டிற்காக இந்திரா காந்தி செய்தது இது

image

பெண்களின் தாலியை காங்., பறித்ததாக பேசிய பிரதமர் மோடிக்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நாட்டிற்காக இந்திரா காந்தி தனது நகைகளைக் கொடுத்தார். வெறுப்பைக் கக்கும் பிரதமர் மோடிக்கு இது தெரிய வாய்ப்பில்லை என விமர்சித்துள்ளார்.

News April 25, 2024

Apply Now: 490 காலிப் பணியிடங்கள்

image

பொதுத்துறை நிறுவனமான ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், சிவில், எலக்ட்ரிக்கல், ஐடி உள்ளிட்ட 490 இளநிலைப் பொறியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வம் உள்ள இளைஞர்கள், வரும் மே 1ஆம் தேதிக்குள் www.aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ரூ.40,500 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

News April 25, 2024

இடஒதுக்கீட்டை பறிக்க காங்., திட்டம்

image

எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி, இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் பிரித்து, அதனைப் பறிக்க காங்., திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கியபோதே, மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காங்., மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டுவந்து அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது என விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!