India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் 100 வயது விதியை பயன்படுத்த வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது 100இல் உங்கள் வயதை கழித்தால் மீதம் கிடைக்கும் எண்ணின் விகிதத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். உதாரணமாக 20 வயதுடையவர்கள் 80% பங்குச்சந்தையிலும், மீதி 20%ஐ தங்கம், கடன் பத்திரம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.
டி20 கிரிக்கெட்டில் மலிங்கா, பும்ரா போன்ற பவுலர்களின் வெற்றிக்கு காரணமே அவர்களது யார்க்கர் பந்து வீச்சு திறமை தான் என்று CSK அணியின் பயிற்சியாளர் பிராவோ கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், யார்க்கர் வீச முடியும் என்று தெரிந்தும் தங்களது திறமையை டி20 பவுலர்கள் நம்புவது கிடையாது. அதுதான் அவர்கள் சிரமப்படுவதற்கு முக்கிய காரணம். பவுலர்களுக்கு யார்க்கர் பந்துகளை வீச பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.
கடுமையான வெயில் காரணமாக உடலின் வெப்பநிலை 104 பாரன்ஹீட் (40°C) தாண்டுவதே ஹீட் ஸ்ட்ரோக் எனக் கூறப்படுகிறது. பொதுவாக இந்நோய் குழந்தைகள், முதியவர்கள், வெளிப்புற அமைப்புகளில் பணிபுரிபவர்கள், அதிக நேரம் அடுப்பில் இருக்கும் பெண்கள், மது அருந்துபவர்களை பாதிக்கிறது. இந்நிலை உடனடியாக கையாளப்படவில்லை எனில், உள்ளுறுப்புகளுக்கு சேதம் விளைவிப்பதோடு, மரணத்திற்கும் சில சமயங்களில் அழைத்துச் செல்லும்.
மகாராஷ்டிராவில் சரத்பவார் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருப்பது போன்ற சின்னங்களை சுயேச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் (EC) ஒதுக்கியதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ‘ஆண் எக்காளம் ஊதும்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போன்ற ‘ட்ரம்ப்பெட்’ சின்னத்தை சரத் பவார் அணியினர் போட்டியிடும் பாராமதி, சதாரா & மாதா தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு EC ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2016 – 2020 வரை KKR அணிக்காக விளையாடியதை நினைத்து தான் தற்போது வருந்துவதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொல்கத்தா அணியில் ஆடிய காலத்தில் எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. ஆனால், அறிவுரைக் கூறத்தான் ஆளில்லை. தோனிக்கு பிறகு யாருமே என்னை வழிநடத்தவில்லை. அப்போது எனக்கு ஆதரவு வழங்காமல் மோசமாக நடத்தி, KKR அணி கழற்றிவிட்டதாகக் கூறினார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கை பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறை முடித்துவைத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாராமதி தொகுதியில் சுனேத்ரா போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் மீதான கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் அவர் மீது குற்றமில்லை எனவும் வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஷுப்மான் கில் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் DC அணி பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகள் விளையாடியுள்ளன. அவற்றில், GT 4 வெற்றியும், DC 3 வெற்றியும் பெற்றுள்ளன. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
எழும்பூர் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதில் நயினார் நாகேந்திரனிடம் ED விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ராகவன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், பணம் பறிமுதல் செய்ததை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சேர்க்க முடியாது என ED தெரிவித்தது. இதையடுத்து விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் எனக்கூறிய உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
நடிகர் ஜெயம் ரவி மறைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ராஜா (33). ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த இவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த ஜெயம் ரவி இன்று அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.
பிரதமர் மோடி தன் கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தப் பணத்தால் 10 கோடி விவசாயிகளின் கடனை அடைத்து, தற்கொலை செய்துகொண்ட அவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கியிருக்க முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.