News April 25, 2024

இப்போது செய்து என்ன பயன்?

image

தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை சசிகலா ஆதரவாளர்கள் வழங்கி வருகின்றனர். அமைப்பின் பெயர், முகவரி ஏதுமில்லாத அந்தப் படிவத்தில் ‘2017இல் என்ன பொறுப்பில் இருந்தீர்கள்?’ போன்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன. கட்சி, சின்னம் என எல்லாம் கைமீறிப் போன பிறகு, சிறையில் இருந்து வந்தபோது செய்திருக்க வேண்டிய வேலைகளை இப்போது செய்து என்ன பயன் என அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர்.

News April 25, 2024

சொந்த மண்ணில் வீழுமா ஹைதராபாத்?

image

RCB-SRH அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 40 போட்டிகளில், ஹைதராபாத் அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் தங்களது சொந்த மண்ணில் வீழ்ந்துள்ளன. ஏப். 5ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த CSK-க்கு எதிரான போட்டியில், SRH அணி வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மண்ணில் தோற்காத ஒரே அணி என்ற பெருமையைக் கொண்டுள்ளது. RCB பதிலடி கொடுக்குமா?

News April 25, 2024

இந்திரா சொத்துக்காக வரியை ரத்து செய்தார் ராஜீவ் காந்தி

image

இந்திராவின் சொத்து அரசுக்கு செல்வதை தடுக்கவே பரம்பரை வரியை ராஜீவ் காந்தி ரத்து செய்ததாக மோடி சாடியுள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் முன்பு அமலில் இருந்த பரம்பரை வரியின்படி, யாரேனும் உயிரிழந்தால் அவர் சொத்தின் ஒரு பகுதியை அரசு எடுத்து கொள்ளும் என்று தெரிவித்தார். இந்திரா மறைவுக்குப் பிறகு அவர் சொத்து அரசிடம் செல்வதைத் தடுக்கவே, அந்த வரியை ராஜீவ் ரத்து செய்தார் என்று அவர் கூறினார்.

News April 25, 2024

தமிழ்நாட்டின் ‘வெப்ப அலை’க்கு புதிய பெயர்

image

தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிர வெப்ப அலை வீசுவதாக இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய நிலைக்கு “Hot and humidity weather” என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிறது. தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்பநிலை உணரப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம் எனத் தெரிவித்தார்.

News April 25, 2024

மோடி ஆட்சியில் இருக்க மாட்டார்

image

மக்களவைத் தேர்தலில் மோடி தோல்வியடையப் போவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, பிரதமர்களாக நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி, மன்மோகன்சிங் சிறப்பாக செயல்பட்டதாகவும், அவர்கள் காலத்தில் கட்டமைத்த அரசு நிறுவனங்களை மோடி ஏலத்தில் விற்று வருவதாகவும் சாடினார். ஜூன் 4 தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜகவும், மோடியும் ஆட்சி அதிகாரத்தில் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

News April 25, 2024

6ஆவது இடத்தைப் பிடித்த சென்னை

image

இந்திய அளவில் அதிகமான உள்நாட்டுப் பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. AAI ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023இல் அதிக பயணிகளைக் கையாண்டதில் பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இரு விமானங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. 2022இல் 1.37 கோடியாக இருந்த சென்னை விமான நிலையத்தின் பயணிகள் எண்ணிக்கை 2023இல் 1.53 கோடியாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 25, 2024

தேர்வாணையத்தை காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும்

image

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். யு.பி.எஸ்.சியை பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான அட்டவணையை டி.என்.பி.எஸ்.சியும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News April 25, 2024

‘ஹார்லிக்ஸ்’ இனி ஊட்டச்சத்து பானம் கிடையாது

image

பால், தானியங்கள் கொண்ட பானங்களுக்கு, ஊட்டச்சத்து பானங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஏப்.2ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், ஹார்லிக்ஸ் பானத்தில் இருந்த ‘ஹெல்த்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டது. சமீபத்தில் போர்ன்விட்டாவை, ஊட்டச்சத்து பானங்கள் வரிசையில் இருந்து மத்திய அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

காங்கிரஸில் மன்சூர் அலிகான்: செல்வப்பெருந்தகை விளக்கம்

image

‘இந்திய ஜனநாயக புலிகள்’ கட்சியை கலைத்து, காங்கிரஸுடன் இணைக்கவுள்ளதாக மன்சூர் அலிகான் அறிவித்தது குறித்து செல்வப்பெருந்தகை விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், காங்., கட்சியுடன் இணைவதாக மன்சூர் அலிகான் கடிதம் அளித்துள்ளார். ஆனால், இது தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியாது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மன்சூர் அலிகானின் கடிதம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

மரண ரயில் பாதையின் வதை!

image

சயாம் – பர்மா மரண ரயில் பாதைக் கட்டுமானத்திற்காக கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மலேசியா & பர்மா தமிழர்களின் 80ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஐந்தாண்டுகளில் கட்டுமானம் செய்யப்பட வேண்டிய 415 கி.மீ. நீளத்திலான பாதையை குண்டு வீச்சு, காலரா மத்தியில் வெறும் 15 மாதங்களில் கட்டி முடிக்க துப்பாக்கி முனையில் ஜப்பான் ராணுவம் செய்த கொடுமைகளால் உயிரிழந்த அயலகத் தமிழர்களை நினைவில் ஏந்துவோம்.

error: Content is protected !!