News April 25, 2024

கோடை வெயில்: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

image

கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாா். அடிக்கடி தண்ணீர் குடிப்பதுடன் நீர்ச்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிட அறிவுறுத்திய அவர், குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை வெப்பத்திலிருந்து காக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறிய அவர், அரசு நிர்வாகம் கவனத்துடன் செயல்பட ஆணையிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

News April 25, 2024

அரை சதம் விளாசினார் விராட் கோலி

image

SRH அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி அரை சதம் கடந்துள்ளார். தொடக்கத்தில் அதிரடியாக ஆடிவந்த அவர், பின் விக்கெட்டுகள் சரிந்ததால் சற்றுப் பொறுமையாக ஆடிவருகிறார். தற்போது கோலி 50*, கிரீன் 1* ரன்களுடன் களத்தில் உள்ளனர். SRH தரப்பில் நடராஜன், உனத்கட், மார்க்கண்டேய தலா 1 விக்கெட் வீழ்த்தினர். RCB இதே வேகத்தில் ஆடினால் இன்று 250 ரன்களை நெருங்க வாய்ப்புள்ளது.

News April 25, 2024

அரை சதம் கடந்தார் படிதார்

image

ஹைதராபாத் அணிக்கு எதிரான IPL போட்டியில் அதிரடியாக ஆடிவரும் RCB வீரர் ரஜத் படிதார் அரை சதம் கடந்துள்ளார். 19 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி வாணவேடிக்கை காட்டினார். இவரது அதிரடியால் RCB அணி 12 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. டு ப்ளஸி 25, ஜாக்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். கோலி 45* ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று RCB எவ்வளவு ரன்கள் எடுக்கும்?

News April 25, 2024

கடும் நெருக்கடியில் ‘Koo’ செயலி

image

இந்தியாவில் ட்விட்டருக்குப் போட்டியாக 2019ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட ‘Koo’ செயலி, தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் இருந்து மொத்த பணியாளர்களில் 80% பேரை நீக்கம் செய்த நிலையில், தற்போது சுமார் 50 பேர் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கும் 40% சம்பளமே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தற்போது அதையும் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 25, 2024

மோடி மீதான வழக்கில் நாளை விசாரணை

image

பிரதமர் மோடி, கடவுள்களின் பெயர்களை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அதன் மீதான விசாரணை நாளை தொடங்கவுள்ளது. இந்த மனுவில், பிரதமர் மோடி அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நாட்டின் அரசியல் நகர்வையே மாற்றும் என்பதால் பலரும் இதனை உற்று நோக்கி வருகின்றனர்.

News April 25, 2024

காதலனை பிரேக் அப் செய்த ஸ்ருதி ஹாசன்?

image

காதலன் சாந்தனுவை நடிகை ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாட்டூ கலைஞர் சாந்தனுவைக் காதலித்த ஸ்ருதி, மும்பையில் அவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாவில் அவரை Unfollow செய்த ஸ்ருதி, அவருடன் எடுத்த போட்டோஸை நீக்கிவிட்டு, “சிலரது உண்மை முகம் இப்போது தெரிகிறது” எனப் பதிவிட்டுள்ளார். இதனால் பிரேக்அப் ஆகிவிட்டதா என ஸ்ருதியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News April 25, 2024

சொமட்டோவில் வருகிறது புதிய வசதி

image

கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவு டெலிவரி செய்யும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்வதற்கான சோதனையில் சொமட்டோடோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தச் சேவை தற்போது பெங்களூரு மற்றும் மும்பையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 16 முதல் 21 நிமிடத்திற்குள் உங்களின் ஆர்டர் கைக்கு வர ரூ.29 கூடுதலாகச் செலுத்த வேண்டும். இந்தக் கூடுதல் கட்டணம் ‘சொமட்டோ கோல்ட்’ சப்ஸ்கிரைபருக்கும் பொருந்தும்.

News April 25, 2024

ஃபேஸ்புக்கிடம் 1,48,000 டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு

image

ஃபேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட ஆன்லைன் முதலீடு மோசடியால் பணத்தை இழந்த 4 ஜப்பானியர்கள் 1,48,000 டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்துள்ளனர். பிரபலங்களின் படங்களைப் பயன்படுத்தி மோசடியான விளம்பரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் பிரபலங்களின் புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மற்ற நாடுகளில் அவர்கள் பேசுவது போன்ற டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி மோசடிக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

News April 25, 2024

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதினால் பாஸ் மார்க்

image

உ.பி. பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத் தேர்வுகளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவர் ஒருவர் RTI மூலம் பெற்ற தகவலில் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. இன்னும் பல மாணவர்கள் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை விடைத்தாளில் எழுதி மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இது தொடர்பாக பேராசிரியர்கள் இருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News April 25, 2024

பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது

image

சுபமுகூர்த்த தினத்தையொட்டி (ஏப்ரல் 26) தோவாளை சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள், குமரி மாவட்டம் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களை கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில், மல்லிகை நேற்று கிலோ ₹300க்கு விற்பனையான நிலையில், இன்று ₹600ஆக உயர்துள்ளது. இதேபோல, பிச்சிப்பூ ₹1500, முல்லை ₹1400, அரளி ₹400, சம்பங்கி ₹300, ரோஸ் ₹200க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!