India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழையால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிறைந்து வருகின்றன. நீர்வள துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 TMC ஆகும். இதில், தற்போது 196.897 TMC அதாவது 87.77% தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14, 141 பாசன ஏரிகளில், 1,522 ஏரிகள் 100%, 1,842 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக, வரும் 28-ம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து வரும் 29-ம் தேதி தான் பிறந்த ஊரான திருப்பூருக்கு செல்லும் நிலையில், அவரது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் CPR, தனது சொந்த ஊருக்கு முதல் முறையாக செல்கிறார்.

மழை நிவாரண பணிகள் குறித்து பேச EPS-க்கு அருகதை இல்லை என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், ஆளும்கட்சியாக இருந்தபோது கால்கூட தரையில் படாமல்தான் EPS பணியாற்றினார் என விமர்சித்தார். மேலும், கொரோனா காலத்தில் கூட உயிரை துச்சமென நினைத்து களத்தில் பணியாற்றியது அன்றைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்தான் என்றார்.

➤இதன் 4 இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் போதும், தலைவலி நீங்கிவிடும். ➤வியர்வை நாற்றம் அடிக்காமல் இருக்க, ஒரு கைப்பிடி பச்சிலை இலைகளைப் பறித்து நீரில் நன்கு ஊற வைத்து, அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நறுமணமாக இருக்கும். ➤காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலையின் சாற்றை, சில சொட்டுகள் விட்டால் வலி நீங்கும். ➤வாயுத்தொல்லை இருப்பவர்கள், இந்த இலையை பச்சையாக மென்று தின்றால் பிரச்னை சரியாகும்.

தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. USA – சீனா இடையேயான புவிசார் அரசியல் சுமூகமாக மாறியது, முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவு செய்தது உள்ளிட்ட காரணங்களே விலை சரிவுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள 228 Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 12-வது தேர்ச்சி பெற்ற 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹19,900- ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு அப்ளை பண்ண இன்றே கடைசி நாள் என்பதால் முந்துங்கள். உடனே வேலை தேடுவோருக்கு SHARE THIS.

Whatsapp-ல் ‘Mention Everyone’ என்ற புதிய அப்டேட்டை Meta கொண்டு வரவுள்ளது. இதன் மூலம், ஒரு Group Chat-ல் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் ஒரே நேரத்தில் Mention செய்து மெசேஜ் செய்ய முடியும். முன்னர், அனைவரையும் Tag செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு பெயராக தேர்வு செய்ய வேண்டும். தற்போது Beta பயனர்களுக்கு கிடைக்கும் இந்த அம்சம், விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேந்தமங்கலம் திமுக <<18078637>>MLA பொன்னுசாமி(74)<<>> மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். கொல்லிமலை வீட்டில் நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், நாமக்கல்லில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ஏற்கெனவே 2 முறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நம்மூரில் ஊதுபத்தி ஏற்றாத வீடுகளே இருக்காது எனலாம். நறுமணத்தால் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும் இந்த ஊதுபத்தியின் புகை, சிகரெட்டை விட ரொம்ப டேஞ்சர் என தெரியவந்துள்ளது. தென் சீன தொழில்நுட்ப யூனிவர்சிட்டியின் ஆய்வில், ஊதுபத்தியில் மிக நுண்ணிய அல்ட்ராஃபைன் 99% இருப்பதாகவும், அதில் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் பொருள்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மக்களே, கொஞ்சம் உஷாரா இருங்க!

அடிலெய்டில் நடக்கும் 2-வது ODI-ல் டாஸ் வென்று ஆஸி. அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதல் ODI-ல் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்குமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி: கில்(C), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், அக்சர் படேல், சுந்தர், நிதிஷ் ரெட்டி, ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ். இன்று வெற்றி பெறுமா இந்தியா?
Sorry, no posts matched your criteria.