India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்படி, நேற்றிரவு நடந்த சோதனையில் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுதாகருக்கு சொந்தமான இடத்தில் ₹4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனைக் கட்டையால் அடித்துக் கொன்று வீட்டுக்கு பின்புறம் வீசிய பெற்றோர் கைது செய்யப்பட்டனர். வெங்கடேஷ் பிரசாத் என்பவர் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோரும், சகோதரரும் அடித்துக் கொலை செய்து, விவசாய நிலத்தில் சடலத்தை வீசியுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.
சங்கம்விடுதியில் உள்ள மக்களுக்கு கந்தர்வக் கோட்டையில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக சாணம் கலக்கப்பட்ட குறிப்பிட்ட நீர்த் தொட்டிக்கு சீல் வைத்த அதிகாரிகள், அதிலிருந்து நீர் மாதிரியையும் தடயங்களையும் எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என்றும் நகர்ப்புறங்களில் அதுவும் கிடையாது எனவும் கூறினார்.
தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “பள்ளிகளிலும், தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த கவலையை அளிக்கிறது. சங்கம்விடுதி ஊராட்சி நீர்த்தொட்டியில் சாணத்தைக் கலந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் அருகே மதுபோதையில் பெண் VAO வயிற்றில் எட்டி உதைத்த திமுக மாவட்ட கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். ஆ.கூடலூர் VAO சாந்தி, 19ஆம் தேதி வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளுக்கு உணவு வழங்கியபோது, கவுன்சிலர் ராஜீவ்காந்தி, அவரை கன்னத்தில் அறைந்து திட்டியுள்ளார். பிறகு மது அருந்திவிட்டு வந்து வயிற்றில் உதைத்துள்ளார். புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த ராஜீவ்காந்தியை போலீசார் கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், ஓய்வெடுக்கும் வகையில் ஒருவார பயணமாக ஏப். 29ஆம் தேதி மாலத்தீவு செல்லவுள்ளார். குடும்பத்தினருடன் செல்லும் அவர், அரசுப் பணிகளையும் அங்கிருந்து கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் வட உள்மாவட்டங்களில் மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46°C வரை வெப்ப அளவு பதிவாகக்கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவித்தார். மேலும், மே 5 முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்பதைத் தடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுவாக, ஆன்லைனில் விற்கப்படும் IPL டிக்கெட்டுகள், சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்து விடும். அதனை வாங்க முடிந்தவர்கள், 10 மடங்கு அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் சாதாரண ரசிகர்களால் போட்டியை காண முடியாத சூழல் உருவாகிறது என்பதே பலருடைய குற்றச்சாட்டு.
மேற்கு வங்கத்தில் லஞ்சம் கொடுக்காமல் அரசு வேலைகள் எதுவும் நடக்காது என்று மோடி குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு மால்டாவில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், விவசாயிகளும் அதிலிருந்து தப்பவில்லை என்றும் விமர்சித்தார். இளைஞர்களின் எதிர்காலத்தோடு திரிணாமுல் விளையாடுவதாகவும், அக்கட்சியால் 26,000 குடும்பங்கள் வேலையை இழந்து விட்டதாகவும் அவர் புகார் கூறினார்.
Sorry, no posts matched your criteria.