News July 4, 2024

பெண்ணின் பித்தப்பையில் இருந்த 1500 கற்கள்

image

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமை சேர்ந்த ரியா சர்மா என்ற பெண்ணின் பித்தப்பையில் இருந்து 1500 கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. அதீத வயிற்று வலி காரணமாக மருத்துவரை அணுகிய போது இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முறையான இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்ளாதது பித்தப்பையில் கல் உருவாக காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

News July 4, 2024

கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாம்: குஷ்பு

image

ஹத்ராஸில் உயிரிழந்த 121 அப்பாவிகளும் கர்மாவால் உயிரிழக்கவில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “கடவுளால் அனுப்பப்பட்டவை என்று இந்த உலகில் எதுவும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இந்த அசம்பாவிதத்திற்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

News July 4, 2024

கொலை வழக்கில் திமுக பிரமுகர் கைது

image

சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில், திமுகவை சேர்ந்த சதீஷ் உட்பட 8 பேர் கைதாகியுள்ளனர். கொண்டலாம்பட்டி பகுதி அதிமுக செயலாளர் சண்முகம் நேற்றிரவு கொலை செய்யப்பட்டார். 5 தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், திமுக கவுன்சிலர் தனபாக்கியத்தின் கணவர் சதீஷ் கைதானார். கஞ்சா விற்பனையில் சதீஷ் ஈடுபட்டதாக புகார் கொடுத்ததால், சண்முகம் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

News July 4, 2024

அதிமுக நிர்வாகி கொலைக்கு இபிஎஸ் கண்டனம்

image

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக நிர்வாகி நேற்றிரவு மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News July 4, 2024

அம்மா உணவகங்களுக்கு நெருக்கடி?

image

சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட 7 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகங்களை மூடிவிட்டு, தனியார் கேண்டீன் அமைக்க திட்டமிடப்பட்டு வருவதாகவும், இதற்காக அந்த உணவகங்களுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு நெருக்கடி தரப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசு இதனை கவனிக்குமா?

News July 4, 2024

அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா த.மா.கா.?

image

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட த.மா.கா, 3 தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்தது. அண்மையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஜிகே வாசனிடம் மூத்த நிர்வாகிகள், பாஜக கூட்டணிக்கு அதிருப்தி தெரிவித்ததாகவும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இதற்கு தேர்தல் வரும் போது பார்க்கலாம் என ஜிகே வாசன் பதிலளித்ததாக சொல்லப்படுகிறது.

News July 4, 2024

வீரர்களை கௌரவிக்கும் மாநில அரசுகள்

image

T20 WC-ஐ வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற மகாராஷ்டிரா வீரர்களை அம்மாநில அரசு கௌரவிக்கவுள்ளது. ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகிய 4 பேருக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று 4 பேரும் நாளை சட்டமன்ற அலுவலகத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்திக்க உள்ளனர். மற்ற வீரர்களும் அந்தந்த மாநில முதல்வர்களால் கௌரவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 4, 2024

ராணுவம் கூறிய தகவலை மறுத்த தியாகியின் குடும்பம்

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் இணைந்து உயிரிழந்த அஜய்குமாரின் குடும்பத்திற்கு ₹98 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியிருந்தது. இந்த தகவலை மறுத்த அஜய்குமாரின் தந்தை சரண்ஜித் சிங், “ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைவரும் பொய் கூறுகின்றனர். சில நாள்களுக்கு முன்பு ₹48 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர். மத்திய அரசு இரங்கல் கடிதம் கூட அனுப்பவில்லை” என வேதனையுடன் கூறியுள்ளார்.

News July 4, 2024

டிஜிட்டல் பரிவர்த்தனை: நடத்துநர்களுக்கு பரிசு

image

SETC பேருந்துகளில் கடந்த ஏப்.1ஆம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்ச மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசுத்தொகையுடன், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

News July 4, 2024

3வது மாதமாக ரேஷன் பொருள்களுக்கு தட்டுப்பாடு

image

தமிழகம் முழுவதும் 3வது மாதமாக ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதலில் மே மாதம் துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின், அம்மாதத்திற்கான பொருள்கள் ஜூன் மாதம் கொடுக்கப்பட்டது. தற்போது, ஜூலை மாதம் வந்துவிட்ட நிலையில், ஜூன் மாதத்திற்கான பொருள்களே வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. விநியோகம் சீராகாத காரணத்தினால் முழுவதுமாக பொருள்களை வழங்க இயலவில்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!