India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லுங்கள்.

ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். அத்துடன், இந்தப் பிரிவில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் தனதாக்கியுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். இதன் காரணமாக தரவரிசையில், 2 இடங்கள் ஏற்றம் பெற்று, முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் நாளை வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 கட்ட கலந்தாய்வு முடிவடைந்திருக்கும் நிலையில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை கடைசி நாள் என்பதால் மேலும், கூடுதலான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8முதல் தொடங்கவுள்ளது.

மக்களவை உறுப்பினராக பதவியேற்கும்போது கோஷம் எழுப்புவதை தடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்களவை எம்பியாக பதவியேற்ற ஓவைசி, ஜெய் பாலஸ்தீனம் என கோஷம் எழுப்பியிருந்தார். மேலும் சில உறுப்பினர்கள், ஜெய் சம்விதான், ஜெய் ஹிந்துராஷ்டிரா என முழக்கமிட்டிருந்தனர். இதனால் சர்ச்சை எழுந்ததையடுத்து, மக்களவை சபாநாயகர் உத்தரவின்படி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘வலை வீசி மீன் பிடித்த படலம்’ என்ற திருவிளையாடலை ஈசன் நடத்திய திருத்தலம் ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோயிலாகும். தமிழ் மன்னன் ராவணன், மண்டோதரி திருமணம் நடந்ததாக மயன் புராணம் கூறும் பெருமை பெற்றது. இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று மங்களநாதர் – மங்களநாயகிக்கு சந்தன அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி, ரோஜா மாலை சாற்றி வணங்கினால் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை பலப்படும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக திடீரென மழை பெய்து வெப்பத்தை தணித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் சிறிது தாமதம் ஏற்பட்டது.

பிஹாரில் சிவன் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 42 ஆண்டுகள் பழமையான பாலம் நேற்று இடிந்து விழுந்தது. இது பல கிராமங்களை இணைக்கும் பாலம் என்பதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். சிவன் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 வாரங்களில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆய்வு நடத்த பிஹார் அரசு குழு அமைத்துள்ளது.

* டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் இன்று தாயகம் திரும்புகின்றனர்.
* அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
* கோவை, நெல்லை மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா
* மத்தியப் பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31,000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் மாயம்.

தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான முன்னுரிமையை மாற்று மாநில அளவிலான முன்னுரிமை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பணி மாறுதல், பதவி உயர் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாகக் கூறி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராடியதாக இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் அண்ணா பல்கலை கழகத்திற்கு நேற்று இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக கோட்டூர்புரம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு ஏதும் கிடைக்காத நிலையில், இது வெறும் மிரட்டலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.