India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து, இதுவரை 65 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், இந்த திருத்தச் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி 4 சாதனைகளை படைத்துள்ளது.
*டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் அதிக ரன்கள் (525)
*ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் (603/6d)
*ஒரு இன்னிங்சில் குறைந்த ஓவர்களில் அதிக ரன்கள் (இதுவரை 115.1 ஓவர் 603 ரன்கள்)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் ரேட்டுடன் (5.23) அதிக ரன்கள் குவித்த அணி (603 ரன்கள்).

இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு (FD), தற்போது வழங்கிவரும் வட்டி விகிதங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
*SBI (அம்ரித் கலாஷ்) – 400 நாள்கள் – 7.10%
*PNB – 400 நாள்கள் – 7.25%
*HDFC – 18-21 மாதங்கள் – 7.25%
*ICICI – 15-24 மாதங்கள் – 7.20%
*BOB – 2-3 வருடங்கள் – 7.25%
*கனரா – 444 நாள்கள் – 7.25%
*ஆக்சிஸ் – 17-18 மாதங்கள் – 7.20%

விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதியில் வரும் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமகவை ஒரு போட்டியாளராகவே தங்கள் கட்சி கருதவில்லை என்று கூறியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தொடர்ந்து வெற்றி பெறுவதை சுட்டிக்காட்டிய அவர், இத்தேர்தலில் பாமகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் ரத்த சரித்திரம், அமிதாப் பச்சனின் சர்க்கார் உள்ளிட்ட பல இடங்களை இயக்கிய சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா, சென்னையில் அண்மையில் விஜய் சேதுபதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை அடுத்து, அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பிறகு அறிவிக்கப்பட இருப்பதாகத் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று, இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்குமுன், சர்வதேச போட்டிகளில் இரு அணிகளும் 26 முறை நேருக்கு நேர் மோதியதில், IND அணி 14 முறையும், SA 11 முறையும் வென்றுள்ளன. மேலும், உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 முறை எதிர்கொண்டதில், 4 முறை IND அணியும், 2 முறை SAவும் வென்றுள்ளன. இந்தியாவின் ஆதிக்கம் இன்றைய போட்டியிலும் தொடருமா?

சென்னையில் ₹50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை வைக்கப்படுமென அண்மையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படும் முன்பு, இந்திரா சிலைக்கே கடைசியாக மாலை அணிவித்தார். இதேபோல் இந்திராவுக்கு சிலை அமைக்கும் முயற்சியால் வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனாரின் அரசியல் வாழ்க்கை இறங்குமுகம் கண்டது. இதனை நினைத்து, திமுகவினர் தற்போது கலக்கமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களாக குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, மேலும் குறைந்து சவரன் ₹53,000க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று சவரனுக்கு ₹328 உயர்ந்த விலை, இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹152 அதிகரித்து ₹53,480க்கும், கிராமுக்கு ₹19 அதிகரித்து ₹6,685க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹94.50க்கு விற்பனையாகிறது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக, பாஜக ஆகியவை தனித்தனியே புகார் அளித்துள்ளன. இந்நிலையில் அவர் தனக்கு வேண்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளை வைத்து தனியே ரகசியமாக தகவல்களை திரட்டி, அறிக்கை தயாரித்ததாகவும், அந்த அறிக்கையை கடந்த 26ம் தேதி டெல்லி சென்றபோது மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோரிடம் அவர் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து, இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பட்டாசு தயாரிக்க கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.