India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 25% அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கடந்த காலங்களில் பால் கொள்முதலில் தொய்வு இருந்ததாகக் கூறிய அவர், தற்போது ஒன்றியங்களில் மட்டும் நாளொன்றுக்கு 36லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் சில ஆவின் கிளைகள் திறக்க உள்ளதற்கான தேவைகள் இருப்பதாகக் கூறிய அவர், பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்.

கள் இறக்குமதி செய்யும் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், சாராயம், மதுபானத்தை விட கள் உடலுக்கு மிகவும் நல்லது என்றார். கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான கள் இறக்குவதை அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

▶ஜூலை – 01 | ▶ஆனி – 17 ▶கிழமை: திங்கள் | ▶திதி: ஏகாதசி ▶நல்ல நேரம்: காலை 06:15 – 07:15 வரை, மாலை 03:15- 04:15 வரை ▶கெளரி நேரம்: காலை 09:15 – 10:15 வரை, மாலை 07:30 – 08:30 வரை ▶ராகு காலம்: காலை 7:30 – 9:00 வரை ▶எமகண்டம்: காலை 10:30 – பிற்பகல் 12:00 வரை ▶குளிகை: மாலை 01:30 – 03:00 வரை ▶சந்திராஷ்டமம்: பூரம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று ரயில்களில் முன்பதிவு தொடங்கியது. அக்.28ஆம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், டிக்கெட் விற்பனை தொடங்கிய 10 -15 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளை விற்றுத் தீர்ந்துவிட்டது. அக். 29ஆம் தேதிக்கு இன்றும், அக். 30ஆம் தேதிக்கு நாளையும் டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண தூரத்தை எளிதாக சென்றடைவதற்கு வசதியாகவும் மெட்ரோ ரயில் சேவைகள் 2015ல் கொண்டுவரப்பட்டது. தற்போது 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 29 கோடியே 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு பயண அட்டை, கியூஆர் கோர்டு மூலம் பயணம் செய்தால் 20 சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட IPC, CrPC, IEC ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதிநியம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

* உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். -மாவீரன் நெப்போலியன் * முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல், புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல் -ஜார்ஜ் பெர்னாட்ஷா * நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அதை உன்னில் இருந்தே தொடங்கு. – காந்தி * இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை. – கன்ஃபூசியஸ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக குஜராத் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் பட்டேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோத்ராவில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன் ஜார்கண்டை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

T20 WC இறுதிப் போட்டியில் சூர்யகுமார் பிடித்த கேட்ச் போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த கேட்ச் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அவர், எனது தந்தை கபில்தேவின் கேட்சை என்னிடம் பெருமையாகக் கூறினார், நான் என் குழந்தைகளுக்கு சூர்யாவின் கேட்சை பெருமையாகக் கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார். இதை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் SKY.

➤ தேசிய மருத்துவர்கள் நாள் (இந்தியா)
➤ 1961 – இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த நாள்.
➤ 1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
➤ 1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.
➤ 1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னாளில் கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.
Sorry, no posts matched your criteria.