India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். புதிய சட்டத்தின் மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதை கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த 2 விஷயங்களையும் கண்டித்து அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சிலர் திருட்டுப் போனை தெரியாமல் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வதுண்டு. அதுபோன்ற பிரச்னையில் சிக்காமல் இருக்க டிராய் சில ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் வாங்கும்போனில் KYM என டைப் செய்து, இடைவெளிவிட்டு 15 இலக்க IMEI எண்ணை பதிவிட்டு, 14422 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள். அந்தப் போன், திருட்டுப் போனாக இருந்தால், அதுகுறித்த SMS திரும்பி வரும். இதன் மூலம், அந்த போனை வாங்குவதை தவிர்க்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட வைப்பு நிதிகளுக்கு ஜூலை- செப்டம்பர் வரையிலான வட்டி விகிதத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், எந்த மாற்றமுமின்றி ஜூலை 1- செப். 30 வரை 7.1% வட்டி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வட்டி விகிதம் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

பசுவுக்கு அகத்திக்கீரை அளிப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்வோம் * அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் *கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகிடும் *பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கி சுப வாழ்வு ஏற்படும் *குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் *திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமாகும்.

அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 AC இல்லா பெட்டிகள் உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, “2024-25 & 2025-26 ஆண்டுகளில், 232 அதிக திறன் கொண்ட பார்சல் வேன், 165 பேன்ட்ரி கார்கள், 5,300 பொது பெட்டிகளுடன் 10,000 ஏசி இல்லா பெட்டிகள் தயாரிக்கப்படும். உயர்ந்த தர உணவு பயணிகளுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் வரும் 6ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊதியம் வழங்கிட தேவையான நிதி ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. எனினும், நிலுவைத் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை.

“ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய” ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்ரீ சிவ பஞ்சாட்சர அஸ்வினி ஸ்லோகத்தை நட்சத்திர திருநாள், சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் , உடல் & மன சுத்தியுடன் நான்கு முறை பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும் என்பது ஐதீகம்.

உலக சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இரு அணிகளும் தலா 1 போட்டியில் விளையாடியுள்ள நிலையில், இந்தியா ஒரு வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் விளையாடிய ஒரு போட்டியில் வெ.இ, தோல்வியடைந்துள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

வருகிற 11 மற்றும் 15 தேதிகளில் மக்களுடன் முதல்வர் மற்றும் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சிக்கு அனைத்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் இத்திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

* உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது
* திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
* விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆதரவு
* அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பாஜவில் இணைய உள்ளதாக தகவல்
Sorry, no posts matched your criteria.