India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேமிக்கும் பழக்கம் சிறந்த தூக்கத்திற்கு பங்களிப்பதாக, சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, சேமிப்புக்காக மாதாந்திரத் தொகையை ஒதுக்குவது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவுவதாக தெரியவந்துள்ளது. குறைந்த சம்பளத்திலும் சேமிப்பு பழக்கம் கொண்டவர்கள், அதிக சம்பளம் வாங்குபவர்களை விட திருப்தியான வாழ்க்கையை வாழ்வதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான், வரும் 27ஆம் தேதி மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். அதற்காக மலேசியா சென்றுள்ள அவர், மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார். அந்த படங்களை X தளத்தில் பகிர்ந்துள்ள அவர், அந்த சந்திப்பில் இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் குறித்து உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழியை மெய்யாக்கும் வகையில் சிரிப்பதை ஜப்பான் நாடு கட்டாயமாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டில் யமகாட்டா மாகாணத்தில், பொதுமக்கள் நாளொன்றுக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதும், சிரிக்காமல் இருப்பதும் மனிதர்களின் அடிப்படை உரிமை என்று, இந்த சட்டத்திற்கு அந்நாட்டின் எல்டிபி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ள அவர், கைது செய்யப்பட்டுள்ள 80 மீனவர்களையும், 174 படகுகளையும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விடுவிக்க, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு சைபர் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, Android 12, 12L, 13 மற்றும் Android 14க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஃபோன்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்களின் பட்டியலை தயார் செய்ய திமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அறிவாலயத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், லிஸ்டை தயார் செய்யும் பணியில் தேர்தல் பணிக்குழு தீவிரம் காட்டி வருகிறதாம். இதனால், சில அமைச்சர்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கலக்கத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களை இன்று காலை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அந்த 13 மீனவர்களுக்கும் யாழ்ப்பாணம் ஊர்காவல்படை நீதிமன்றம் ஜூலை 25ஆம் தேதி வரை நீதிமன்றத் காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.

புகைப்பிடிக்கும் பழக்கம் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லையென ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, காற்று மாசுபாடு மற்றும் மரபணு குறைபாடு புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பி.சி., எம்.பி.சி., மற்றும் சீர்மரபினருக்கு தனிநபர் மற்றும் சிறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், அதிகபட்சமாக ₹15 லட்சம் வரை 7 முதல் 8% வட்டியில் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. <

தமிழகத்தில் உள்ள பேய்களை ஓட்டும் வேதாளமாக தான் வந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தை இன்று பீடைகள் போல பல அரசியல் பேய்கள் பிடித்துள்ளதாக விமர்சித்த அவர், ஒவ்வொரு பேயாக விரட்டுவதே தனது முதல் பணி என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலையை வேதாளம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.