India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியக் குடிமக்கள் தான் பெற்ற வருமானத்தில் வாங்கும் தங்கத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவையில்லை. மேலும், விவசாயம் மூலம் ஈட்டிய பணம், மரபு வழியாகப் பெற்ற பணம் & சேமித்து வைத்த பணம் ஆகியவற்றின் வாயிலாக வாங்கும் தங்கத்திற்கும் வரி கட்ட தேவையில்லை. அதே வேளை, அவற்றை விற்பனை செய்யும்போது, எவ்வளவு காலம் அவர்கள் வைத்திருந்தனர் என்பதை பொறுத்து தங்கத்துக்கான வரி என்பது விதிக்கப்படும்.

சேலத்தில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல, பிரிந்து இருப்பதால் இந்த நிலை என்று இபிஎஸ்ஸிடம் முன்னாள் அமைச்சர்கள் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமல்ல, மக்களவை தேர்தலில் கிளைக்கழகச் செயலாளர்களே சரியாக வேலை பார்க்கவில்லை. இனியும் தாமதிக்கக் கூடாது, பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம் என்று 6 பேரும் கூற, இபிஎஸ் அதெல்லாம் சரிப்பட்டு வராது என சொல்லியதாக தெரிகிறது.

நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 25%க்கும் கீழ் சென்றது. இதனால், உட்கட்சி பூசல் வெடிக்க ஆரம்பித்து, இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக, பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. நேற்று இபிஎஸ் இல்லத்தில் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், அவருக்கு எதிராக செங்கோட்டையன், சி.வி சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 6 முன்னாள் அமைச்சர்கள் கலகக்குரல் எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கு, டி20 உலகக்கோப்பையை வென்ற நாளில் பதவிக்காலம் நிறைவடைந்தது. இந்நிலையில், KKR ஆலோசகர் பொறுப்பிற்காக அந்த அணி நிர்வாகம் அவரை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. KKRன் தற்போதைய ஆலோசகர் கௌதம் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீண்டாமை நிலவுவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பட்டியலினத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ள அவர், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக தோல்வியடைந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

நமது பெயரில் எத்தனை சிம்கார்டுகள் ஆக்டிவாக உள்ளது என்பதை அறிய மத்திய அரசு Sanchar Saathi என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் மொபைல் எண்ணை பதிவு செய்து, உள்நுழைந்தால் Not My Number, Not Required மற்றும் Required என்ற 3 விருப்பத் தேர்வுகள் இருக்கும். இதில் நமக்கு தெரியாமலேயே நமது பெயரில் சிம்கார்டு ஆக்டிவாக இருந்தால் Not My Number என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இணைப்பை துண்டிக்கலாம்.

இந்திய தகவல் தொடர்பு சட்டம், சிம் கார்டுகளின் வரம்பு குறித்த புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஒருவர் 9 சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். இதனை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம், சிறை தண்டனை வழங்கப்படும். வேறொருவரின் அடையாள ஆவணங்களைக் கொண்டு சிம் வாங்கினால் 3 ஆண்டுகள் சிறை, ₹50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஜம்மு காஷ்மீர், அசாம் மாநிலங்களில் 6 சிம் கார்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும், உயிரிழப்பை அதிகரிக்க நவீன ஆயுதங்களை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், உயிர் தியாகம் செய்த வீரர்களை தேசம் என்றும் நினைவில் கொள்ளும் எனவும், தீவிரவாதிகள் பழிதீர்க்கப்படுவர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏவுமான ஓ.எஸ்.மணியனின் இளைய சகோதரர் ஓ.எஸ்.மூர்த்தி இன்று அதிகாலை அவரது வீட்டில் காலமானார். ஓ.எஸ்.மூர்த்தி மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஓ.எஸ்.மணியனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இறுதி ஊர்வலம் இன்று மாலை தலைஞாயிறு அருகே ஓரடியம்புலம் இல்லத்தில் இருந்து தொடங்க உள்ளது.

ரஷ்யா சென்றிருக்கும் பிரதமர் மோடியை விமர்சித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார். இன்று மட்டும் 37 உக்ரைன் மக்களை ரஷ்யா கொன்றிருப்பதாக கூறியிருக்கும் அவர், உலகின் மிகப்பெரிய கிரிமினலுடன் (புடின்) மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் (மோடி) உறவு கொண்டாடுவது ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது, சமாதான முயற்சியில் மிகப்பெரிய தொய்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Sorry, no posts matched your criteria.