India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ₹5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீட்டை பெறுவது எப்படி எனத் தெரிந்து கொள்ளலாம். முதலில் <

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பனையபுரம் வாக்குச்சாவடியில், பாமக வேட்பாளர் சி.அன்புமணி வாக்கு செலுத்தினார். பின்னர் பேட்டி அளித்த அவர், பாமகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், திமுகவைச் சேர்ந்த வெளியூர் ஆட்கள் தொகுதியில் தங்கியிருப்பது குறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உடல்நிலை சரியில்லை என்று தவறான செய்தி பரப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் கூறினார்.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹6,760க்கும், சவரனுக்கு ₹54,080க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லாமல், ஒருகிராம் வெள்ளி ₹99க்கு விற்பனையாகிறது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும், நடிகை சங்கீதாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், தனக்கு சமைக்க தெரியாது என்பதை திருமணத்திற்கு முன்பே கணவரிடம் கூறிவிட்டதாக சங்கீதா தெரிவித்துள்ளார். வீட்டை நிர்வாகம் செய்யத் தெரியாது எனவும், ஜாலியாக சேர்ந்து ஊர் சுற்றலாம் எனவும் கூறியதற்கு ரெடின் ஓகே சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், எது கேட்டாலும் கணவர் இல்லை என சொல்லமாட்டார் எனவும் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் இணை ஆணையராக பணியாற்றும் ஐஆர்எஸ் அதிகாரி அனுசுயா, ஆணாக மாறியுள்ளதால், தன் பெயரை அனுகதிர் சூர்யா என மாற்றிக் கொண்டுள்ளார். அவர் தனது பெயர், பாலினத்தை மாற்றிக் கொண்டதை ஏற்று, ‘திருமதி அனுசுயா’ என்பதற்கு பதில் ‘திரு அனுகதிர் சூர்யா’ என்று அங்கீகரிக்கப்படுவார் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் சிவில் சர்வீசஸ் வரலாற்றில், பெண் அதிகாரி ஒருவர் ஆணாக மாறியது இதுவே முதல் முறையாகும்.

விக்கிரவாண்டியில் மாம்பழப்பட்டு 66ஆவது வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. அதேபோல், ஒட்டன் காடுவெட்டி 68ஆவது வாக்குச்சாவடியில் EVM பழுதானதால் அவற்றை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், காணை 126ஆவது வாக்குச்சாவடியில் அரை மணி நேரத்திற்கு பிறகு EVM சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் வாக்குப்பதிவு சற்று தாமதமானது.

வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணம் திருடுவதை தடுக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது. ஓடிபி மட்டுமல்லாது PIN அமைக்கும்படியும், குறுந்தகவல், லிங்குகளை நம்பி டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. பணத்தை திருடும் முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrim.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஜூன் 23ஆம் தேதி நடந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக, வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல் நிலை பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அடுத்த 15 நாட்களில் தேர்வு குறித்து அழைப்பு விடுக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே, தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விக்கிரவாண்டியில் 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 42ஆவது வாக்குச்சாவடியில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் அறிவுறுத்தலின் படி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்பாவி குழந்தைகள் கொல்லப்படுவது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும் என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, நீண்ட கால நட்புறவின் அடிப்படையில் புடினுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.