News July 3, 2024

அரசியல் சாசனத்தை புனிதமாக கருதுகிறேன்: மோடி

image

தங்களது ஆட்சி கலங்கரை விளக்கம் போல இருக்கும் என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசினார். அரசியல் சாசனத்தை புனிதமாக கருதுவதாகவும், அதனை எழுதிய அம்பேத்கரின் தத்துவத்தை புனிதமாக கருதுவதாகவும் அவர் உரையாற்றினார். முன்னதாக, 60 ஆண்டுகளுக்கு பின் ஒரே கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறது என்று பேசிய அவர், அதனை சிலர் ஏற்க மறுப்பதாக காங்கிரஸ் கட்சியை சாடினார்.

News July 3, 2024

நீட் தேர்வை ரத்து செய்ய விட மாட்டார்கள்: விஜய்

image

நீட் தேர்வால் ஏற்படும் பிரச்னைகளுக்கு அதனை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்று தவெக தலைவர் விஜய் பேசினார். மேலும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இவற்றையெல்லாம் நான் பரிந்துரை மட்டுமே செய்கிறேன் என்றார். இவையெல்லாம் உடனே நடக்க வாய்ப்பில்லை, நடக்கவும் விட மாட்டார்கள் என்று அழுத்தமாக பேசி அரசியல் பஞ்ச் கொடுத்தார்.

News July 3, 2024

யார் இந்த போலே பாபா? (2/2)

image

1990களின் பிற்பாதியில் இவரது சமய சொற்பொழிவுகளில் மயங்கி ஹரியானா, உத்தரகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் பல அப்பாவி மக்கள் இவரை பின்பற்றுபவர்களாக உள்ளனர். ஆன்மிகத்தில் இருந்தாலும், மத அடையாளத்தை வெளிக்காட்டாத இவருக்கு அரசியல் கட்சிகளுடனும் தொடர்புள்ளது. அவ்வபோது அரசியல் தலைவர்களை சந்திப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இவர் மீது பல குற்ற வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

News July 3, 2024

யார் இந்த போலே பாபா? (1/2)

image

ஹாத்ரஸில் 161 பேர் உயிரிழக்க முக்கிய காரணம் என போலே பாபாவை பலரும் குறிப்பிடுகின்றனர். யார் இந்த போலே பாபா? உ.பி., மாநிலத்தின் எடா மாவட்டத்தை சேர்ந்தவர் இவரது இயற்பெயர் நாராயண் சகார் ஹரி. கல்வியை முடித்த கையோடு பாபா உளவுத்துறையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. (சான்றுகள் இல்லை.) ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட பாபா, தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஆன்மிகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

News July 3, 2024

‘போலே பாபா’ தலைமறைவு

image

உ.பியில் மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மத போதகர் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் ‘போலே பாபா’ உள்பட பலர் தலைமறைவாகியுள்ளனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி என 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கியதாகவும், ஆனால் கூட்டத்தில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் அவர்கள் மீதான எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News July 3, 2024

NDA வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி: மோடி

image

நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, இன்று மாநிலங்களவையில் உரை நிகழ்த்தினார். முதற்கட்டமாக, குடியரசுத் தலைவர் உரையின் மீது தங்களது கருத்துகளை தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியை நம்பியே மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பளித்திருப்பதாக கூறிய மோடி, தங்களது வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சிகள் நடப்பதாக சாடினார்.

News July 3, 2024

வெற்றியுடன் தொடங்கிய நோவக் ஜோகோவிச்

image

விம்பிள்டன் (லண்டன்) டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஆடுகளத்தில் இறங்கிய அவர், தொடரின் முதலாவது சுற்றில், செக் வீரர் கோப்ரிவாவை 3-0 என்ற நேர் செட்டில் வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஃபார்ம் இழந்துவிட்டதாக தன்னை விமர்சித்தவர்களுக்கு நோவக் பதிலடி கொடுத்திருப்பதாக, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

News July 3, 2024

கல்வி கற்பதே கொண்டாட்டம்; ஜாலியா படிங்க: விஜய்

image

விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக விஜய் பேசினார். “கல்வி கற்பதே கொண்டாட்டம்தான். ஜாலியா படிங்க. மன அழுத்தம் அடையாதீங்க. உலகம் ரொம்ப பெருசு. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கு. ஒண்ணு ரெண்டு மிஸ் ஆனாலும் கவலைப்பட வேண்டாம். கடவுள் உங்களுக்கு வேறு வாய்ப்பு வழங்க காத்திருக்கிறார். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.” என்று அவர் பேசியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது.

News July 3, 2024

மாநில உரிமைகள், தமிழக உணர்வுகளை பேசிய விஜய்

image

தனது அரசியல் அத்தியாயத்தை அதிரடியாகத் தொடங்கியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். நீட் தேர்வுக்கு எதிராக இன்று பேசிய அவர், மாநில உரிமைகள், தமிழர்களின் உணர்வுகள் ஆகிய ஆயுதங்களை கையில் எடுத்தார். சுதந்திரம் கிடைத்தது முதலே தமிழக அரசியல் இந்த இரண்டையும் சுற்றியே வந்திருக்கிறது. தற்போது விஜய்யின் அரசியல் கொள்கைகளும் அதனை மையப்படுத்தியே அமைகிறது. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News July 3, 2024

மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் தேவை: விஜய்

image

நீட் தேர்வு பிரச்னைகளுக்கு அதனை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்று தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே ஒரே தீர்வு என்று கூறிய அவர், தற்காலிக தீர்வாக சிறப்பு பொதுப் பட்டியல் உருவாக்கி கல்வியை அதில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன்மூலம், மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் விஜய் பேசினார்.

error: Content is protected !!