News July 10, 2024

ஜி.வி. பெயரை நீக்கிய சைந்தவி

image

ஜி.வி.பிரகாஷ்குமார், தன் பள்ளித் தோழியும் பாடகருமான சைந்தவியை காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இணைந்து பாடிய பாடல்கள் வரவேற்பை பெற்றன. சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சைந்தவி பிரகாஷ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருந்த சைந்தவி, தற்போது பிரகாஷ் என்பதை நீக்கியுள்ளார்.

News July 10, 2024

PF வட்டிப்பணம் எப்போது கிடைக்கும்?

image

PF வட்டி விகிதம் 8.15%-லிருந்து 8.25% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் 2023-24 நிதியாண்டுக்கான வட்டியை அரசு இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில் வட்டிப்பணத்தை பயனாளிகள் கணக்கில் டெபாசிட் செய்யும் செயல்முறை நடந்து வருவதாகவும், விரைவில் தொகை வரவு வைக்கப்படும் எனவும் EPFO நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஜூலை 23க்கு பிறகு வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News July 10, 2024

சவுக்கு சங்கர் வழக்கும், கமிஷனர் பதவியும்?

image

பெண் காவலர் குறித்த சர்ச்சை கருத்துக்கு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட பின்னணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியும், தற்போதைய சென்னை கமிஷனருமான அருண் இருந்ததாகப் பேசப்பட்டது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையை அடுத்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடம் மாற்றப்பட அப்பதவியில் அருண் நியமிக்கப்பட்டுள்ளார். சங்கர் வழக்கை திறமையாக கையாண்டதால் இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News July 10, 2024

சாராய விவகாரம்: மருத்துவ அறிக்கை வெளியானது

image

விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 7 பேரில் 5 நபர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விழுப்புரம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மீதமுள்ள 2 நபர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

News July 10, 2024

ஆர். பி. உதயகுமார் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்

image

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராடிய ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அமைதியாக போராடியவர்களை கைது செய்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கைது செய்தவர்களை உடனே விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News July 10, 2024

பாஜகவில் இணைந்த டெல்லி முன்னாள் அமைச்சர்

image

டெல்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் சமூகநலன், தொழிலாளர் துறை உள்ளிட்ட 7 துறைகளின் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்திடம் 2023இல் ED 20 மணி நேரம் விசாரித்தது. இதையடுத்து அவர் கடந்த ஏப்ரலில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பாஜக அவரை அமலாக்கத்துறையைக் கொண்டு மிரட்டுவதாக AAP குற்றம்சாட்டியது. இந்நிலையில் அவர் அக்கட்சியிலிருந்து விலகி, மனைவி வீனாவுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.

News July 10, 2024

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரணம்

image

உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் இரண்டடுக்கு பேருந்து, பால் கொண்டு சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்ததுடன் 19 பேர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

News July 10, 2024

எம்பி பதவி: பதற்றத்தில் வைகோ?

image

திமுக தரப்பில் 4 பேரையே மாநிலங்களவைக்கு எம்பியாக அனுப்ப முடியும். அதில் ஒரு இடத்தை கமலுக்கு தருவதாக திமுக உறுதியளித்துள்ளதாகவும், அப்துல்லா, வில்சனும் எம்பி பதவியில் தொடர முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மறுபுறம் ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவனும் காய் நகர்த்துவதாக கூறப்படுவதால், திமுக வாக்குறுதிபடி, தனக்கு எம்பி பதவி கிடைக்குமா என வைகோ பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

News July 10, 2024

இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் இவரா?

image

இந்திய கிரிக்கெட் அணிக்கு பவுலிங் பயிற்சியாளராக ஜாகீர் கான் அல்லது பாலாஜியை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், முன்னாள் RCB வீரர் அபிஷேக் நாயரை பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம், பாலாஜியிடமும் ஜாகீர் கானிடமும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

News July 10, 2024

6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை/ இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரம், தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!