India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திரைத்துறையில் 22 ஆண்டுகளைக் கடந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருவது மிகப்பெரிய சாதனை. அத்தகைய சாதனைக்கு சொந்தக்காரரான த்ரிஷா, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கமலுடன் ‘தக் லைஃப்’, விஜய்யின் ‘தி கோட்’, அஜித்துடன் ‘விடாமுயற்சி’, மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ‘ஐடென்டிட்டி’, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ எனப் பெரிய லைன் அப்பை வைத்திருக்கிறார்.

திண்டுக்கல், தி.மலை, நாமக்கல், விருதுநகர், புதுக்கோட்டையில் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, சிவகங்கை, தஞ்சை, தருமபுரி, செங்கல்பட்டு, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய பட்ஜெட்டில் 8ஆவது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 8ஆவது ஊதியக்குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் ஊதிய முறையில் பல மாற்றங்கள் ஏற்படும். அடிப்படை ஊதியம், தினப்படி, ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர மற்ற யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், போதை கலாச்சாரத்தால் இளைஞர்கள் அடிமையாகி, கூலிப்படைகளாக மாறி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழகத்தில் தினந்தோறும் 4 கொலைகள் நடப்பதாகவும், போலீஸ் திறனற்று இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் விமர்சித்துள்ளார்.

அம்பானி வீட்டுத் திருமணம் சர்க்கஸ் மாதிரி இருப்பதாக, பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மகள் ஆலியா விமர்சித்துள்ளார். திருமணத்தில் பங்கேற்க தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அதில் பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், விளம்பரம் செய்வதற்காகவே பிரபலங்களை திருமணத்திற்கு அழைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனக்கு சுயமரியாதை இருப்பதாகவும் காட்டமாக கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில், பலவீனமான கூட்டணியே தோல்விக்கு காரணம் என இபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படியானால், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை வலுப்படுத்த அதிமுக என்ன வியூகங்களை வகுக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக மீண்டும் இணையுமா? திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய IND அணி 20 ஓவர்களில் 182/4 ரன்கள் குவித்தது. கேப்டன் கில் 66, ருதுராஜ் 49 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய ZIM, 20 ஓவர்களில் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால், தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பார்கள் எனவும், நீட் வினாத்தாள் எது என்பது அதை தயாரிப்பவர்களுக்கே தெரியாது என்றும் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நீட் முறைகேடு குற்றவாளிகளை கண்டறியாவிட்டால் தேர்வை ரத்து செய்வது அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என இபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, பலவீனமான கூட்டணியே தேர்தல் தோல்விக்கு காரணம் என சில நிர்வாகிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றப் பின்னணிகளை கொண்ட அமித்ஷா அமைச்சராக இருப்பது குறித்து அண்ணாமலை வாய் திறப்பாரா? என காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் வினவியுள்ளார். அண்ணாமலை பாட்டி வடை சுட்ட கதையை கூறாமல், ஆருத்ராவுக்கும் பாஜகவுக்கு என்ன தொடர்பு என்பதை கூறுவாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, குண்டர் சட்டத்தில் கைதான செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பதாக அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.