India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜெயக்குமார் வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வராது என ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயக்குமார் அரசியல் நாகரிகம் அற்றவர் மனிதர் என்ற விமர்சித்துள்ள அவர், ஜெயக்குமாரின் பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு எல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டை என ஓபிஎஸ் என்று ஜெயக்குமார் இன்று காலை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமகவினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் அனைவருக்கும், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இவ்வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த விஜய் வர்மா, ஆரம்பத்தில் இந்த செய்தி தங்களுக்கே அதிர்ச்சியாக இருந்ததாகவும், தற்போது இந்த புரளியை இருவருமே என்ஜாய் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கும், தமன்னாவுக்கும் இடையே ஆழமான, அன்பான பந்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆறுதல் சொல்வதற்காக ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வரிடம், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்க அவரது குடும்பத்தினர் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த திமுக நிர்வாகிகள், தலைவர் வரும் போது சங்கடப்படுத்தும் மாதிரியாக எதுவும் பேசிவிட வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனால்தான், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் அமைதி காத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த அவரை, கடந்த 5ஆம் தேதி மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த விவகாரத்தில், ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மும்பை செல்லும் மேற்கு வங்க முதல்வர் மம்தா, INDIA கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரை நாளை சந்தித்து பேச உள்ளதாகக் கூறியுள்ளார். அம்பானி மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை செல்லும் அவர், INDIA கூட்டணி தலைவர்களையும் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அகிலேஷ் யாதவும் கலந்துகொள்வார் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின் முதன்முறையாக இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்குகிறார். மியூசிக்கல் காதல் படமாக உருவாக உள்ளதாக அர்ஜுன், அதிதி ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை லண்டனில் சொத்து வாங்கி வைத்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, தன் மீதான குற்றச்சாட்டுக்கு உடனே செல்வப்பெருந்தகை பதில் அளிப்பது வழக்கம். ஆனால் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து மெளனம் காக்கிறார். இதனால் இக்குற்றச்சாட்டு உண்மையோ? என அவரது கட்சியினரிடையே கேள்வி எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில், மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 38 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், சுல்தான்பூர், பிரக்யாராஜ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக பிரதாப்கர் பகுதியில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.