India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பஹிஸ்கரன் என்ற வெப் தொடரில் அஞ்சலி நடித்துள்ளார். இதில் விலைமாது கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்தத் தொடர் கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட பின்னணியில் உருவாகியுள்ளது. இதை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார். ஏற்கெனவே “கேங்க்ஸ் ஆப் கோதாவரி” என்ற படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஞ்சலி நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கோயில்களில் உப்பு, மிளகை காணிக்கையாக பக்தர்கள் அளிப்பார்கள். வீட்டு சமையல் பொருளான அவற்றை ஏன் காணிக்கையாக அளிக்கின்றனர் என பலருக்கும் சந்தேகம் எழுவதுண்டு. இதற்கு ஆன்மிகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உப்பானது உடலில் உள்ள நோய் நொடியையும், மிளகானது மனதில் உள்ள அகங்காரத்தையும் குறிப்பதாகவும், இவற்றை அகற்ற வேண்டியே அவற்றை காணிக்கை அளிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

செல்லாத ரூ.2,000 கள்ள நோட்டுகளை பாக்.கில் இருந்து மும்பை கடத்தி வந்ததாக கைதான குலாம் நபி ஆசாத், மும்பை உயர்நீதிமன்றம் தனக்கு ஜாமின் மறுத்ததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளி என நிரூபணமாகும் வரை நிரபராதிதான். ஆதலால் குற்றத்தன்மையை மனதில் வைக்காமல், பின்னர் விதிக்கப்படும் தண்டனையை முன்னிட்டு ஜாமின் மறுக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தனர்.

டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வேலைக்கு அழைத்து செல்லப்படும் பலர் ஆன்லைன் மோசடிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், இது குற்றமென்றும் கூறியுள்ளார். ஆதலால் வேலைக்கு அழைத்து செல்லும் ஏஜெண்டுகளின் உண்மைத் தன்மையை சரிபார்த்த பிறகே வெளிநாடு செல்ல வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலச்சிக்கல் பின்னாளில் மூலத்துக்கு வழிவகுக்கக்கூடும். ஆதலால் முதலிலேயே இதை சரி செய்துவிடுவது நலமாகும். இதற்கு உடல்நல நிபுணர்கள் சில ஆலோசனைகளை தெரிவிக்கின்றனர். உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நார்சத்தாலும், தினமும் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதாலும், பழச்சாறு அதிகம் குடிப்பதுடன், இனிப்புகள், கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதால் சரி செய்யலாம் என கூறுகின்றனர்.

சுதந்திரம் பெற்றது முதல் மக்களவை பெண் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது முதல்முறையாக சரிந்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 78 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இது மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையில் 14.36% ஆகும். அந்த எண்ணிக்கை 2024 தேர்தலில் 74ஆக குறைந்துள்ளது. அதாவது 13.63% ஆக சரிந்துள்ளது. பாஜகவில் 31, காங்கிரசில் 13, டிஎம்சியில் 11 பெண் எம்பிக்கள் உள்ளனர்.

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஏற்கெனவே, நாடு முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த புதிய சட்ட அமலால் வழக்குகளின் தேக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக புதிய சட்டங்களை நிறுத்தி வைக்கும்படி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. நாளை இரவு 12.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. புதன்கிழமை இரவு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. இதனையடுத்து, இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 12.30 மணிக்கு ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது.

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. முறைகேடு வழக்கில் கைதாகி 28ஆம் தேதி ஜாமினில் வெளி வந்த அவர் கடந்த வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து அவர் அரசு மீது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஆளுநர் கோரியிருந்தார். அதன்படி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரியவகை மூளை தொற்றுநோய் பரவல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த வைரஸால் கேரளாவில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இதனால், சுற்றுசூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் நீர்நிலைகளை சுத்திகரிக்கவும், தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள், குழந்தைகள் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.