India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது என்றும், அதில் நடைமுறை சிக்கல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும், மதுப் பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விகடன் இதழில் வாரந்தோறும் வெளியான ‘வேள்பாரி’ கதை பின்னாளில் நாவலாக அச்சிடப்பட்டது. அதனை மையப்படுத்தி 3 பாகங்களாக திரைப்படம் இயக்க இருப்பதாக ஷங்கர் அறிவித்துள்ளார். அப்படி இந்த நாவலில் என்ன சிறப்பு? இந்த அறிவிப்பு ஏன் கவனம் பெறுகிறது? தமிழின் பெரும்பாலான வரலாற்று புதினங்கள், பேரரசர்களை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. ஆனால், வேள்பாரி நாவல் குறுநில மன்னன் பாரியை மையப்படுத்தியது.

சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று பேரரசுகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய குறுநில மன்னன்தான் வேள்பாரி. பறம்பு மலைப்பகுதியை ஆட்சி செய்த பாரி, மூன்று அரசுகளின் படைகள் சூழ்ந்தபோது தடுப்பு அரண்கள் அமைத்து போரிட்டவர். அவரது வாழ்க்கையைப் பற்றியும் பறம்பு மக்களின் வாழ்க்கை முறைப் பற்றியும் நாவலாக விரிந்த கதை இனி திரைப்படமாகவும் குதூகலிக்கப் போகிறது.

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்கியதற்கு பின்னர் வரலாற்று புனித திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு தீனி போடும் வகையில் சிறப்பான கதையம்சம் கொண்ட படம்தான் வேள்பாரி. காதல், கலாசாரம், போர் யுத்திகள், அரசாட்சி என்று பல வகையான தமிழர் நாகரிகம் பற்றி வேள்பாரி நாவல் விளக்கமாக விவரிக்கிறது. மேலும், ஷங்கரின் பிரம்மாண்டம் இதில் சேர்வதால் எதிர்பார்ப்பு அதிகரிக்கித்துள்ளது

தமிழகத்தில் நாளை (12.07.2024) மற்றும் நாளை மறுநாள் (13.07.2024) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாள்களும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 14ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

மக்களவை தேர்தலுக்கு முன் தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று ஆஜரான எஸ்.ஆர்.சேகரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கோவையில் உள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பான அதிமுகவின் கருத்து கேட்பு கூட்டங்களில் ஓபிஎஸ் குறித்தோ, சசிகலா குறித்தோ, யாருமே பேசவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வலுவான கூட்டணி அமையாததுதான் தோல்விக்கு காரணம் என்று பேசிய சிவகங்கை நிர்வாகிகள் கூட அவர்கள் இருவர் குறித்து பேசவில்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று இருவரும் அழைப்பு விடுத்துவரும் நிலையில் இபிஎஸ் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

இந்தோனேசியா அருகேயுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் ரிக்டர் அளவில் 7.1 அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாங்கை நகர் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள சேதாரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

புதிய தொலைத் தொடர்பு சட்டத்தில் ஒருவர் பெயரில் 9 சிம்கார்டுக்கு மேல் இருந்தால் ₹50,000- ₹2 லட்சம் அபராதம், வேறு ஒருவர் பெயரில் சிம்கார்டு பயன்படுத்தினால், ₹50 லட்சம் அபராதம், 3 ஆண்டு சிறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலில் இருப்பதால், தேவையில்லாத சிம்மை துண்டிப்பது நல்லது. மொபைலில் இருந்து 198 என்ற எண்ணில் பேசி கோரிக்கை வைத்தால், தேவையில்லாத எண் துண்டிக்கப்பட்டு விடும்.

ஜம்மு & காஷ்மீரில் கடந்த 8ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காஷ்மீர் டைகர்ஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தாக்குதலுக்கு முன் தீவிரவாதிகள் உள்ளூர்வாசிகளை உணவு சமைத்து தரும்படி துப்பாக்கி முனையில் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உடலில் கேமராக்களை பொருத்திக் கொண்டு, ராணுவத்தினரின் ஆயுதங்களை கைப்பற்ற முயற்சித்தாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.