News June 9, 2024

மோடி 3.0: அமைச்சரவை உத்தேசப் பட்டியல் (2/3)

image

நிர்மலா சீதாராமன், ஷோபா கரந்த்லாஜே, ரவ்னீத் சிங் பிட்டு, சர்பானந்தா சோனோவால், அன்னபூர்ணா தேவி, ஜிதின் பிரசாத், மனோகர் லால் கட்டார், ஹர்ஷ் மல்ஹோத்ரா, நித்யானந்தா ராய், அனுப்ரியா, அஜய் தம்தா, தர்மேந்திர பிரதான், சாவித்ரி தாக்கூர், கிரண் ரிஜூஜூ, ரக்ஷா கட்சே, சாந்தனு தாக்கூர், முரளிதர் மோஹோல், நித்யானந்த் ராய், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட பாஜக எம்.பி.,க்களின் பெயர்களும் உத்தேசப் பட்டியலில் உள்ளது.

News June 9, 2024

மோடி 3.0: அமைச்சரவை உத்தேசப் பட்டியல் (1/3)

image

NDA கூட்டணி பிரதமராக மோடி 3ஆவது முறையாக இன்று பதவியேற்கவுள்ளார். அவரது அமைச்சரவையில், பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்சுக் மாண்டவியா, மேக்வால், அஷ்வினி வைஷ்ணவ், பண்டி சஞ்சய், கிஷன் ரெட்டி, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பாஜக எம்.பி.,க்களின் பெயர்களும் உத்தேசப் பட்டியலில் உள்ளது.

News June 9, 2024

தமிழகத்தில் புதிய கட்சி உதயமானது

image

புதிய பாரதம் கட்சியின் காஞ்சி மாவட்டத் தலைவராக இருந்த ஓதியூர் சங்கர், அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்று ‘புதிய புரட்சி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியிருக்கிறார். புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் புரட்சி பாரதம் கட்சி வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

News June 9, 2024

நீட் தேர்வுக்கு எதிரான அறிக்கை: பல மொழிகளில் வெளியீடு

image

நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையை ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக தேசிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளார். சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வின் அபாயத்தை முதன் முதலில் எதிர்த்தது திமுகதான் எனவும் தெரிவித்துள்ளார்.

News June 9, 2024

மத்திய அமைச்சர்களுக்கு இருக்கும் அதிகாரம் (2/2)

image

மத்திய அரசின் கொள்கைகளை மத்திய அமைச்சர்களே வகுப்பார்கள். தனக்கு ஒதுக்கப்படும் இலாகா தொடர்பான முடிவை எடுப்பது, அதை செயல்படுத்துவது ஆகிய அதிகாரமும் அவர்களுக்கே உண்டு. மரண தண்டனை கைதி, சட்டம் ஒழுங்கு விவகாரம் போன்ற முக்கிய முடிவுகள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அளிப்பார்கள். மத்திய அரசின் சட்டங்கள், முடிவுகளை மத்திய அமைச்சர்களே செயல்படுத்துவார்கள்.

News June 9, 2024

மத்திய அமைச்சர்களுக்கு இருக்கும் அதிகாரம் (1/2)

image

பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவோரே மத்திய அமைச்சர்களாக கருதப்படுகின்றனர். பிரதமரின் பரிந்துரையை ஏற்று, அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைப்பார். பிரதமர் விரும்பும்வரை மத்திய அமைச்சரவையில் அமைச்சர்கள் நீடிக்க முடியும். பிரதமர் தலைமையில் செயல்பட்டாலும், மத்திய அமைச்சர்களாக இருப்போருக்கும் தனி அதிகாரம், கடமைகள் உள்ளன.

News June 9, 2024

என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் விரிசல்?

image

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், NDA கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கு வலுசேர்க்கும் வகையில், மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி செல்லவில்லை. முன்னதாக, NDA கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News June 9, 2024

பிரதமராக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வயது தெரியுமா?

image

நாடாளுமன்ற கீழவையான மக்களவையில் 272க்கு மேல் இடங்களைக் கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியின் தலைவரே பிரதமராக முடியும். அந்த பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது வரம்பு தெரியுமா? பிரதமராக பொறுப்பேற்பவர் மக்களவை எம்பி எனில், அவர் 25 வயதை கடந்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரதமராக முடியும். அதேபோல், பிரதமர் மாநிலங்களவை எம்பி எனில், அவர் 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

News June 9, 2024

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்: ராகுல்

image

நீட் வினாத்தாள் கசிந்ததை அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நீட் தேர்வு முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்றும், இளைஞர்களின் குரல் நசுக்கப்படுவதை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், முறைகேட்டை அரசு மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

News June 9, 2024

மாநிலங்களவையில் இருந்து முதலில் பிரதமரானவர் யார்?

image

இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ளார். அவரது காலத்திலேயே வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றது. அப்போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்து, வங்கதேசத்துக்கு விடுதலை பெற்றுத் தந்தது. அவரே இந்தியாவின் முதல் பெண் பிரதமரும் ஆவார். இதுபோல பல பெருமைகளுக்கு சொந்தகாரரான இந்திரா காந்தியே மாநிலங்களவையில் இருந்து பிரதமரான முதல் எம்பி என்ற பெருமையை கொண்டுள்ளார்.

error: Content is protected !!