India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெவ்வேறு வழக்குகளில் நடக்கும் இரண்டு கொலைகளும் அந்த வழக்கை தீர்க்க போராடும் காவல்துறை அதிகாரியின் போராட்டம் தான் ‘Anweshippin Kandethum’ மலையாளப் படத்தின் ஒன்லைன். டோவினோ தாமஸ் நடித்துள்ள இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. இளம்பெண்ணின் கொலை, யார் குற்றவாளி என்பதை திரில்லர், கிளைமாக்ஸ் திருப்பம், அங்கீகாரத்திற்கு போராடும் காவலர் என சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மும்பையில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய அவர், ‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் நீங்கள் பதிவு செய்த வாக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா என சோதனை செய்து கொள்வது அவசியம். அதற்கு பின் இந்த இயந்திரங்கள் இருக்காது’ என்றார்.
➤ 1913 – கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னர் படுகொலை செய்யப்பட்டார். ➤1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட காந்தி 6 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ➤1965 – சோவியத் வீரர் அலெக்சி லியோனொவ், வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடந்து விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். ➤ 1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.
எலெக்ட்ரிக் கார்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி பற்றாக்குறை, விலை உயர்வு காரணமாக சோடியம் அடிப்படையிலான பேட்டரிகள் தயாரிப்பில் சீனா அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. லித்தியம் பேட்டரி தயாரிப்பில் சிலி, பொலிவியா மற்றும் அர்ஜெண்டினா நாடுகள் முன்னணியில் உள்ளன. இதனை முறியடிக்க சீனா திட்டமிட்டுள்ளது. சோடியம் பேட்டரியில் வீட்டில் பயன்படுத்தும் உப்பு தான் முக்கிய மூலப்பொருளாகும்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின், பிரதமர் மோடி முதல்முறையாக இன்று தமிழகம் வருகிறார். கர்நாடகாவின் ஷிவமோகாவில் இருந்து கோவைக்கு மாலை 5.30 மணிக்கு வரும் மோடி, வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். சாய்பாபா காலனியில் தொடங்கும் வாகன பேரணி, ஆர்.எஸ்.புரம் காமராஜர் புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது. பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
◾பால்: அறத்துப்பால்
◾அதிகாரம்: அடக்கமுடைமை
◾குறள்: 123
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.
◾விளக்கம்: அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது ஒருவகையில் பொருளாதாரத்தை உயர்த்த உதவுமென மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ’தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்தாலும், அரசியல் கட்சிகளுக்கு பணம் வரும். ஆனால் கறுப்பு பணமாக இருக்கும்’ என்றார்.
தென்னிந்திய சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2024-26ஆம் ஆண்டுக்கான சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தம் 1,021 வாக்குகள் பதிவானது. இதி்ல், 662 வாக்குகள் பெற்ற ராதாரவி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணராஜ் 36 வாக்குகளும் பெற்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது உலக வரலாற்றின் பொன்னான பக்கங்கள் என ஆர்.ஆர்.எஸ் அமைப்பு பாராட்டியுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தின் இடைவிடாத போராட்டம்,தியாகம், மற்றும் மகான்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடு தழுவிய இயக்கங்கள், பல்வேறு பிரிவுகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானதாக கூறப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.