India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரேமம் படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகர்களுடன் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். இந்த நிலையில், அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘லாக்டவுன்’ படத்தின் டீசர் இன்று காலை வெளியானது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, இது குறித்து எந்த பதிவையும் போடாததால், லாக்டவுன் திரைப்படத்தை புறக்கணிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைத்தல் மற்றும், மக்களுக்கு தரமான பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், 1800 425 5901 மற்றும் 1967 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட சில துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நினைத்தால் அதை மட்டும் தனியாகப் பிரித்து, இணை அமைச்சரின் தனிப்பொறுப்பில் விடுவது உண்டு. சிவில் விமானப் போக்குவரத்து போன்ற துறைக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் வேண்டாம் என்று நினைத்தால் தனிப்பொறுப்பாக ஒரு இணை அமைச்சரிடம் தருவது உண்டு. சில குறிப்பிட்ட துறைகளை தனிப்பொறுப்புள்ள அமைச்சர்கள் கவனித்து வருகிறார்கள்.

மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு), இணை அமைச்சர்கள் என்ற மூன்று பிரிவுகள் உள்ளன. கேபினட்டில் ஆழ்ந்த அனுபவமும், அரசியல் அறிவும் உடையவர்களாக இருப்பார்கள். கேபினட்டில் முக்கியமான துறைகளின் (நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட) அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த அமைச்சர்கள் பெரும்பாலும் மூத்தவர்களாகவும், பல்வேறு துறைகளில் ஆழ்ந்த அனுபவமும் உள்ளவர்களாக இருப்பார்கள்.

தனிப் பொறுப்பில்லாத இணை அமைச்சர்கள், தத்தமது துறையின் கேபினட் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வார்கள். இவர்களை ‘அதிகாரம் இல்லாத அமைச்சர்கள்’ என்று அரசியல் வட்டங்களில் கூறுவதுண்டு. சில மூத்த அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் மீது நம்பிக்கை வைத்து, பொறுப்புகளை அளித்து நன்றாகத் தயார் செய்வதும் உண்டு. சில அமைச்சர்கள் அவர்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். பாக்., அணி பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் மட்டுமே இதுவரை விளையாடியுள்ளதாக கூறிய அவர், அமெரிக்காவில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தயாராவது கடினம் என்றார். பும்பா, சூர்ய குமார் யாதவ் பாக்., அணிக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் எனவும் கணித்துள்ளார்.

பாஜக வழங்க முன்வந்த இணையமைச்சர் பதவியை நிராகரிப்பதாக அஜித் பவார் அறிவித்துள்ளார். மகராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்புமுனை ஏற்பட்டு வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸின் பிரபுல் படேல் ஏற்கெனவே இருந்த கேபினட் பொறுப்பை கேட்டிருந்த நிலையில், அதனை கொடுக்காமல் இணையமைச்சர் பதவியை பாஜக கொடுத்ததால், அதனை அஜித் பவார் புறக்கணித்துள்ளார். பாஜக ஆட்சியமைக்காத சூழலில் கூட்டணியில் குழப்பம் எழுந்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் 7,193 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. பாஜகவில் 27 பேரும், காங்கிரஸ் கட்சியில் 26 பேரும் நாடு முழுவதும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரையில் நாம் தமிழர் 39 இடத்திலும், பாஜக 11, அதிமுக 7 இடங்களிலும் டெபாசிட்டை இழந்ததுள்ளன. தேசிய அளவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் 97% வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

ஒடிசாவில் கால் வைத்த நாள் முதல் மக்கள் என் மீது பெரும் அன்பு செலுத்தினார்கள். இதுவே எனக்கு மிகப்பெரிய சொத்து என்று வி.கே.பாண்டியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நவீன் பட்நாயக்கிடம் நான் கற்றுக் கொண்டது எனது வாழ்நாள் முழுமைக்கும் பயன் தரும். ஒடிசாவின் சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக உழைத்தது பெரும் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என 2 படங்களில் நடித்துவருகிறார் அஜித். இதில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இப்படங்களுக்கு அடுத்து, ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், இதற்காக சமீபத்தில் அஜித் – ஷங்கர் சந்திப்பு நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.