India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பூமியில் இருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள சிவப்புக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தில், உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட 2.6 மடங்கு பெரிதான K2-18b கடல்கள் சூழ அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் வளிமண்டலத்தில் உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு இருப்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த பாஜக விரும்புவதாகப் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தலைவர்கள் அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். மோடி எதை மறுக்கிறாரோ அதை அதிகாரத்திற்கு வந்த பிறகு அமல்படுத்துவார் என்ற அவர், பாஜக அரசியலமைப்பை மாற்றி மக்களுக்கான உரிமைகளைப் பறிக்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நவக்கிரகங்களில் மங்கள நாயகனான சுக்கிர பகவானின் பெயர்ச்சி அனைத்து ராசியினருக்கும் நல்ல பலன்களைக் கொடுக்கும். தற்போது மேஷ ராசிக்கு அவர் இடம்பெயர்ந்துள்ளதால் மேஷம், மிதுனம், சிம்மம், விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப் போகிறது. பொன், பொருள் சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை போன்ற யோகங்கள் தேடி வரும். நீண்ட நாள் காரியம் கைகூடும், திருமணம், புதிய வேலை என பல்வேறு சுப பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள்.
பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி ‘ராமாயணா’ திரைப்படத்தை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இயக்கி வருகிறார். இப்படத்தில் சாய் பல்லவி சீதா வேடத்திலும், ரன்பீர் கபூர் ராமன் வேடத்திலும் நடித்து வருவதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சாய் பல்லவி மற்றும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானாவில் பாஜக வேட்பாளரை ஆதரித்து குஷ்பு ரோடு ஷோவில் கலந்து கொண்டார். செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடும் தெலங்கானா மாநிலப் பாஜக தலைவர் கிஷன் ரெட்டியை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். சில நாட்களுக்கு முன்பு உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பரப்புரையில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அண்டை மாநிலத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்த பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படத்தில் அறிமுகமாகித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் உருவான ’ரத்னம்’ படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது இன்ஸ்டா பதிவு கவனம் ஈர்த்துள்ளது. முடியை கட் செய்து புதிய லுக்கில் இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் INDIA கூட்டணி வெற்றிபெற்றால் ஆண்டுக்கு ஒரு பிரதமர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர் எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் துணை முதல்வரை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதைப் போல, இந்தியாவிற்கு ஐந்து பிரதமர்களைக் கொண்டுவர காங்., தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது எனக் கூறினார்.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி அழகர் கோவிலிலிருந்து மதுரை சென்ற கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு இன்று கோவிலை வந்தடைந்தார். ஏப்ரல் 23 அதிகாலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர், பின்னர் 26ஆம் தேதி தல்லாகுளம் கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று மலைக்குத் திரும்பினார். இன்று பகல் 12:30 மணிக்குக் கோவிலை அடைந்த அழகருக்கு பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால், பகல் நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை, திருச்சி, கோவை, ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர் உள்பட 18 மாவட்டங்களில் நாளை வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையிலிருந்த சிசிடிவி கேமராக்கள் சில நிமிடங்கள் செயலிழந்தன. ஒரே நேரத்தில் 173 சிசிடிவி கேமராக்களும் செயல்படாமல் போனதால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு சிசிடிவி வேலை செய்ய துவங்கியது. அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.