India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 128
▶குறள்: ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
▶பொருள்: பாலில் விழுந்த ஒரு துளி நஞ்சு, மொத்தப் பாலையும் நஞ்சாக்கிவிடும். அதுபோல, பேசும் சொற்களில் உள்ள ஒரு தீயச் சொல், அந்தப் பேச்சில் உள்ள அனைத்து நல்ல சொற்களையும் தீயவை ஆக்கிவிடும்.
கோடை விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக, சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை தோறும் மே 2 முதல் ஜூன் 27ஆம் தேதி வரையும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள், மே 3 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவருக்கான பர்பிள் கேப்பை, மும்பை வீரர் பும்ரா மீண்டும் பெற்றுள்ளார். டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், அபாரமாக பந்துவீசி ரிஷப் பண்டின் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான தரவரிசையில், பஞ்சாப் வீரர் ஹர்ஷல் பட்டேலை (14) பின்னுக்குத் தள்ளி (எகனாமி சதவிகிதப்படி) முதலிடத்திற்கு முன்னேறினார்.
ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக குழந்தைகள், குடும்பங்களைக் கவர்ந்த நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர், தற்போது ஒரு படத்திற்கு ரூ.30 கோடி சம்பளமாக வாங்குகிறார். இதனால் அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.120 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘அமரன்’ படத்தில் நடித்துள்ள அவர், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் கை கோர்த்துள்ளார்.
இன்று (ஏப்ரல் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
மீனவர்கள் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கோவாவில் பிரசாரம் மேற்கொண்ட அவர், கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர் தான் எனவும் தமது அடுத்த ஆட்சியில் இன்னும் நிறைய பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கனவை பாஜக நிறைவேற்றும் என அவர் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83% குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக கோடைக்கால பருவமழை 53.3 மி.மீ பதிவாக வேண்டிய நிலையில், தற்போது 9.4 மி.மீ மழையே பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழையும் பெய்து வருகிறது.
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர், 7 Four, 5 Six என விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக அதிக ரன் குவித்த வீரர் பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். மேலும், ஆரஞ்சு கேப்புக்கான தரவரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
▶6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
▶தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்
▶தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை: ஐபிஎஸ் குற்றச்சாட்டு
▶பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு மோடி அரசு வஞ்சனை செய்கிறது: ஆர்.எஸ்.பாரதி
▶தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
▶IPL: டெல்லி அணி வெற்றி
Sorry, no posts matched your criteria.