India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக 42.4 டிகிரி வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு-42.4, திருப்பத்தூர்-41.8, தருமபுரி-41, சேலம்-41.9, கரூர்-40.5, வேலூர்-40.2, நாமக்கல்-40, திருச்சி-39.7, மதுரை-39.2, கோவை-39.1, தஞ்சை-39 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போவதால், மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாகவும், அவற்றில் சுமார் 20 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. அந்த நகரங்களில் உள்ள அனல் மின் நிலையங்களை இலக்காக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 4 அனல் மின் நிலையங்கள் கடும் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிடில் ஆர்டரில் ரன் குவிக்க தவறியதே தோல்விக்கு காரணம் என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், இந்தப் போட்டி இறுதி வரை நெருக்கமாக சென்றது என்றும், கடைசி வரை போராடியும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்றும் அவர் கூறினார். மேலும், டெல்லி அணி சார்பாக விளையாடிய ஜேக் பிரேசர் மெக்கர்க் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பாராட்டியுள்ளார்.
✍தன்னை உயர்ந்த ஜாதியாகவும், பிறரை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மனநோயாளி. ✍கணவன் மனைவி உறவு நல்ல நண்பர்களை போன்றதாக இருக்க வேண்டும் ✍பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள் தான், சிங்கங்கள் அல்ல. நீங்கள் சிங்கங்களாக இருங்கள். ✍சிந்திப்பதற்கான சுதந்திரமே உண்மையான சுதந்திரம். ✍நாம் யாருக்கும் அடிமையில்லை, யாரும் நமக்கும் அடிமையும் இல்லை. ✍மனிதர்களை பிடித்திருக்கும் மோசமான நோய்களில் ஒன்று வேற்றுமை.
விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்துக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டரில், விக்ரம் 2 கைகளிலும் அரிவாள் வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில், விக்ரமின் இந்தப் போஸ்டர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை தூண்டும் என்றும், எனவே இதுகுறித்து படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசு தமிழகத்தின் மீது தீராத வஞ்சனையோடு இருப்பதாக திமுக எம்.பி. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்காக தமிழக அரசு ரூ.38,000 கேட்டதாகவும், ஆனால், மத்திய அரசு ரூ.276 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல, வன்மம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியா் ஓய்வூதிய பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சாா்ந்த தணிக்கைத் தடை நிலுவை இல்லையென்றால், உடனடியாக 30 நாள்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக் காலத்துக்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சாா்ந்த தணிக்கை தடைகளுக்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் பிலிப்பைன்ஸில் அமைக்கப்பட்டது.
1792 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு பெல்ஜியத்தை முற்றுகையிட்டது.
1788 – மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 7ஆவது மாநிலமானது.
1920 – அஜர்பைஜான் நாடு சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932 – மஞ்சள் காய்ச்சல் நோய்க்கு முதல்முறையாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், டெல்லி வீரர் மெக்கர்க் ஆட்டநாயகன் வென்றுள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 11 Four, 6 Six என விளாசி வாண வேடிக்கை காட்டினார். 27 பந்துகளில் 84 ரன்கள் குவித்த அவர், தனது 3ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். இதுவரை 5 போட்டிகளில் களமிறங்கிய அவர், 55, 20, 65, 23, 84 ரன்கள் குவித்து டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.
போதைப்பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த அறிக்கை வெளியிட்ட அவர், இபிஎஸ் ஆட்சியில் குட்கா நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறிய ஸ்டாலின், சட்டசபைக்கே குட்காவை எடுத்துச் சென்று குற்றம் சாட்டியவர். ஆனால், அவர் முதல்வரான பின், அதைத் தடுக்கவோ ஒலிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.