India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரதமரை நேரில் சந்தித்து தமிழீழம் கேட்கப்போவதாக, மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், தான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் தன்னை கொன்று விடுவார்கள் என்றார். இலங்கை தமிழர்களை கொன்றவர்களுக்கு தமிழர்கள் வாக்களித்திருப்பது வருத்தம் எனவும், அதனால்தான், அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்காக இன்னும் அதிகமாக உழைக்க விரும்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் உத்தரவாக விவசாயிகளுக்கான உதவித் தொகையை விடுவிக்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய அரசின் முதல் முடிவு விவசாயிகளின் நலனுக்கான அர்ப்பணிப்பைக் காட்டுவதாகவும், விவசாயிகளுக்காகவே தங்களது அரசு செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

பிரேமலு படத்தின் மூலம் இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மமிதா பைஜு. பேட்டி ஒன்றில் பேசிய மமிதா, தான் சினிமாவில் நடிப்பதை நினைத்து, இன்னமும் தனது பெற்றோர் சிறிது பதற்றத்தை உணர்வதாக தெரிவித்துள்ளார். ஒரு சில படங்கள் பார்த்த பின், கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை அது மனதில் நிற்கும் என்பதால், ஹாரர் படங்களை பார்க்க மாட்டேன் என கூறியுள்ளார். ஊர்வசியும், சோபனாவும் தனது இன்ஸ்பிரேஷன் என நெகிழ்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் முட்டை விலை 60 காசுகள் உயர்ந்துள்ளன. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 60 காசுகள் உயர்ந்து 1 முட்டை ₹5.40க்கு விற்கப்படுவதால், சில்லறை விலையில் தமிழகம் முழுவதும் ஒரு முட்டை ₹8க்கு விற்கப்படலாம் என கூறப்படுகிறது. இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, சத்துணவில் கொடுப்பதற்காக முட்டை அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதால் விலை உயர்ந்துள்ளது.

PMAYG திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 2 கோடி வீடுகளைக் கட்டித்தர மத்திய அரசு ஒப்புதல் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள முதல் அமைச்சரவை கூட்டத்தில், இலாகா தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும், இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட அடுத்த 5 ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என்ற திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் விஜய் நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, வசூலை வாரிக் குவித்தது. அந்த வகையில், ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏற்கனவே துப்பாக்கி படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், விஜய்யின் மற்றொரு சூப்பர் ஹிட் படமான போக்கிரி, வருகிற 21ம் தேதி ரீ ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான செய்தி தவறானது என நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மோடி அமைச்சரவையில் தொடர்வது பெருமை என கூறியுள்ள அவர், இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். சுரேஷ் கோபி நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில், சினிமாவில் நடிக்க வேண்டியுள்ளதால், பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியை அவரது தாயார் ஹீராபென் ஆசீர்வதிப்பது போன்ற எடிட் செய்யப்பட்ட படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2019இல் மோடியின் பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தபடியே, டிவி.,யில் பார்த்து மகிழ்ந்த அவரது தாயார், 2022இல் மறைந்தார். கடந்த முறை நேரில் சென்று தாயிடம் ஆசி பெற்ற மகனை, இம்முறை தாயே பிரபஞ்சத்தின் வழியே ஆசீர்வதிப்பதாகக் கூறி, இப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில், ஃபிரான்ஸ் நாட்டின் ஆளுங்கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஆட்சியில் உள்ள கட்சி, தங்களது வேட்பாளரை வெல்ல வைக்க முடியாத நிலையில், அக்கட்சியின் மீதான மக்களின் நம்பகத்தன்மை குறைந்தது. அதனால், நாடாளுமன்றத்தை கலைத்துள்ள அந்நாட்டின் அதிபர் மேக்ரான், தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் வென்று மக்களின் நம்பிக்கையை பெறவே அவர் இதை செய்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஒரே தேர்வு மையத்தில் அடுத்தடுத்த பதிவெண்கள் கொண்ட 6 மாணவர்கள் முதலிடம் பிடித்தது போன்ற சர்ச்சைகள் எழுந்தன. இதனை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.