News April 28, 2024

இந்திய மசாலா பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதிக்குமா?

image

எவரெஸ்ட், எம்.டி.எச்., போன்ற இந்திய நிறுவனங்களின் மசாலா பொருள்களின் தரத்தை அமெரிக்க உணவு பாதுகாப்பு மையம் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனங்களின் மசாலா பொருள்களில், புற்றுநோயை உண்டாக்கும் உயிர்க்கொல்லி ரசாயனம் இருப்பதாகக் கூறி, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்தன. தற்போதைய நிலையில், அப்பொருள்களின் தரம் குறித்து அமெரிக்க அரசு ஆய்வுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.

News April 28, 2024

காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்

image

மின்னணு வாக்கு இயந்திரங்கள் குறித்துக் காங்கிரஸ் பொய்யான தகவலைப் பரப்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் பெலகாவியில் பிரசாரம் செய்த அவர், மின்னணு வாக்கு இயந்திர வழக்கில் காங்கிரஸை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததாகக் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பதாகக் கூறிய அவர், மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.

News April 28, 2024

ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தவருக்கு ரூ.5,000 இழப்பீடு

image

பெங்களூருவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் கடந்த ஆண்டு ஸ்விக்கி மூலம் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அதற்காக ₹187 தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியும், ஐஸ்கீரிம் வந்து சேரவில்லை. இது குறித்துப் புகார் தெரிவித்தும் அலட்சியமாக பதில் வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், இது தொடர்பான மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு வழக்குச் செலவோடு ரூ.5,000-ஐ இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

News April 28, 2024

குகேஷூக்கு ₹75 லட்சம் ஊக்கத்தொகை

image

கனடாவில் நடந்த கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக செஸ் வீரர் குகேஷ், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இளம் வயதிலேயே FIDE கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெறுமையை பெற்ற அவருக்கு, முதல்வர் ₹75 லட்சம் ஊக்கத்தொகை, கேடயத்தை வழங்கி பாராட்டு தெரிவித்தார். முதல்வரைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

News April 28, 2024

கஞ்சா போதையில் மிதக்கும் தமிழ்நாடு

image

கடந்த ஒரு வாரமாக தினம் ஒரு கஞ்சா போதை குற்றச்சம்பவம் செய்திகளில் வெளியாகின்றன. பேருந்துகளை மறிப்பது, பெற்றோருடன் சண்டையிடுவது, சாலையில் செல்வோரை வெட்டுவது என தேவையற்ற குற்றங்களை கஞ்சா போதை செய்ய வைக்கிறது. போதையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின், இந்தச் செய்திகளை படிப்பதில்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News April 28, 2024

சண்டே கிச்சன் டிப்ஸ்…

image

*பச்சை மிளகாயில் உள்ள காம்பை நீக்கி விட்டு அதை ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள்களுக்குப் பிரெஷ்ஷாக இருக்கும். *பிரியாணி செய்யும்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும். *லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் சேர்த்து பிடித்தால் சுவையாக இருக்கும். *மோர்க் குழம்பு செய்யும்போது தேய்க்காய்க்கு பதிலாகக் கசகசாவை தேர்த்து அரைத்தால் கெட்டியாக வரும்.

News April 28, 2024

தமிழக மாணவர் தேர்ச்சி விகிதம் சரிவது எதனால்?

image

மூன்று ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகை பணிகளுக்காக UPSC நடத்திய தேர்வில் இந்தாண்டு தேர்வான 1,016 பேரில், தமிழக அளவில் 45 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம், ஐ.டி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் மோகமே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

News April 28, 2024

கட்சிப் பதவியை பறிக்கும் முடிவில் இபிஎஸ்?

image

தேர்தலில் அதிமுகவின் செயல்பாடுகள் மீது எதிர்மறை கருத்துகள் வந்ததால், EX அமைச்சர்கள், சீனியர் நிர்வாகிகளை நேரில் அழைத்து இபிஎஸ் கடுகடுத்துள்ளார். இதனால், எந்தெந்த தொகுதிகளில் பாசிடிவ், நெகடிவ் என்பதை ஆய்வு செய்து ரிப்போர்ட் தர, தனக்கு நெருக்கமான ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகிகளை பதவி நீக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 28, 2024

சிசிடிவி செயலிழப்புக்கு பொருந்தாத காரணம் கூறாதீர்

image

நீலகிரியில் நேற்று ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா அதிவெப்பம் காரணமாக 20 நிமிடங்கள் செயலிழந்தது. இதுதொடர்பாக பேசிய அத்தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன், கேமரா செயலிழப்புக்கு பொருந்தாத காரணங்கள் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமராக்களில் தொழில்நுட்பக் கோளாறு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News April 28, 2024

தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்!

image

பணியிடங்களில் தொழிலாளர்களுக்கான சுகாதாரம், பாதுகாப்பை வலியுறுத்தி 1989 ஆம் ஆண்டிலிருந்து ஏப். 28 அன்று உலக பணியிட பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு ‘பருவநிலை மாற்றத்தால் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் பாதிப்புகள்’ என்ற கருப்பொருளில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய குரல் கொடுப்போம்!

error: Content is protected !!