India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கஜோல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “தி டிரையல்” வெப் தொடரில் நடித்து பிரபலமான நடிகை நூர் மலபிகா தாஸ் (37) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் பிணமாக கிடந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன், திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில், பிரதமர் மோடி அமைச்சரவையில் அவருக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சராக எல்.முருகன் பதவி வகித்த நிலையில், இந்த முறை நாடாளுமன்ற விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடியின் 3.O அமைச்சரவையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான அன்னபூர்ணா தேவிக்கு மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுவது போன்ற பல பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு எல்லாம் தேவி முற்றிப்புள்ளி வைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரிக்கு இந்த முறையும் அதே இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்திவிட்டு, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கடந்தமுறை அவர் அமைச்சராக இருந்த போது தெரிவித்திருந்தார். சுற்றுச்சூழலை காப்பதற்காகவும், செலவு குறைவு என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழியை நியமித்து திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுவரை அப்பொறுப்பை டி.ஆர்.பாலு வகித்து வந்த நிலையில், அவரது மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தமிழக தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால், நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழியும், மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*சஞ்சய் சேத் – பாதுகாப்புத்துறை
*ரவனீத் சிங் – உணவு பதப்படுத்துதல்
*துர்கா தாஸ் – பழங்குடியினர் நலன்
*ரக்ஷா நிகில் – விளையாட்டு, இளைஞர் நலன்
*சுகந்தா – கல்வித்துறை
*சாவித்ரி – குழந்தைகள், பெண்கள் நலன்
*தோஹன் சாஹூ – வீட்டுவசதி
*ராஜ்பூஷண் – நீர்வளம்
*பூபதி ராஜு – கனரகத் தொழில்
*ஹர்ஸ் மல்ஹோத்ரா – சாலைப் போக்குவரத்து *நிமூ பென் ஜெயந்தி பாய் – உணவு பொது விநியோகம் *முரளிதர் – விமானப் போக்குவரத்து

*L.முருகன் – தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரம்
*சுரேஷ் கோபி – பெட்ரோலியம், சுற்றுலா
*எஸ்.பி.சிங் – கால்நடை, பால்வளம்
*ஷோபா – சிறு, குறு, நடுத்தர தொழில்
*கீர்த்தி வர்தன் – வனம், சுற்றுச்சூழல்
*பி.எல்.வர்மா – உணவுத்துறை
*சாந்தனு தாகூர் – கப்பல், துறைமுகம்
*அஜத் தம்தா – சாலைப் போக்குவரத்து
*கமலேஷ் பஸ்வான் – ஊரக வளர்ச்சி *சதீஷ் சந்திரா துபே – நிலக்கரி, சுரங்கம் *ஜார்ஜ் குரியன் – கால்நடை, மீன்வளம்

*ஜிதின் பிரசாதா – வர்த்தகம், தொழில்துறை
*ஸ்ரீபத் யசோ நாயக் – மின்சாரம்
*பங்கஜ் செளத்ரி – நிதித்துறை
*கிருஷ்ணன் பால் – கூட்டுறவுத்துறை
*ராம்தாஸ் அத்வாலே – சமூக நீதி
*ராம்நாத் தாகூர் – வேளாண்மை
*பகிரத் செளத்ரி – வேளாண்மை
*நித்யானந்த ராய் – உள்துறை
*பந்தி சஞ்சய்குமார் – உள்துறை
*அனுப்பிரியா பாட்டீல் – சுகாதாரம் *சோமண்ணா – நீர்வளம், ரயில்வே *சந்திரசேகர் பெம்மசானி – தொலைத்தொடர்பு, ஊரக வளர்ச்சி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை ED கைது செய்தது. சுமார் ஓராண்டாக சிறையில் இருக்கும் அவர், இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இன்று இறுதி வாதங்களை கேட்டறிந்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இது செந்தில் பாலாஜி தரப்புக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது..

கங்கனா ரனாவத்தை பெண் காவலர் அறைந்த விவகாரத்தில் இருவர் மீதும் தவறு இருப்பதாக பஞ்சாப் முதல்வர் பகவத் மான் கூறியுள்ளார். டெல்லியில் போராடிய விவசாயிகளை கங்கனா பயங்கரவாதிகள் எனக் கூறியதால், பெண் காவலர் அவரை கோபப்பட்டு அடித்திருக்கலாம். இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாதுதான், இருப்பினும் நடிகையோ, எம்.பி.,யோ விவசாயிகள் போராட்டம் நடத்தினால், அவர்களை பயங்கரவாதிகள் என அழைப்பது தவறு என்றார்.
Sorry, no posts matched your criteria.