India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நானி, தெலுங்கில் ஒரு படத்துக்கு ₹22 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆரம்பத்தில் அவர், ₹2,500 ஊதியம் வாங்கியதாகவும், அதுவும் அந்த காசோலை பணமின்றி திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார். உதவி இயக்குநராகவும், கிளாப்பராகவும் பணியாற்றிய காலத்தில் இயக்குநர் ஒருவர், அனைவர் முன்னிலையிலும் நீ ஒருபோதும் இயக்குநராக முடியாது எனக் கூறி அவமதித்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.

டி20 WC கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி கனடாவை எதிர்கொள்கிறது. ஏற்கெனவே நடைபெற்ற 2 லீக் போட்டியிலும் தோல்வியடைந்த பாக்., புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்கும் பட்சத்தில் அந்த அணி ‘சூப்பர் 8’ செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும். இந்தியா, அமெரிக்கா தலா 2 வெற்றிகளுடன் பட்டியலில் முதல் 2 இடங்களிலும், கனடா ஒரு வெற்றியுடன் 3வது இடத்திலும் உள்ளது

கன்னட சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார், சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக உள்ளார். இவருக்கும் மைசூருவை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருக்கும் 2019இல் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது இருவரும் பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியாவில் 2023இல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற்றது. இதற்கான டிக்கெட் வருவாய், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் ஐசிசிக்கு ₹6,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் 2019இல் நடைபெற்ற உலகக் கோப்பை மூலம் ₹4,650 கோடி கிடைத்த நிலையில், அதை விட 2023இல் சுமார் ₹1,500 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் ஐசிசிக்கு கிடைத்த மிகப்பெரிய வருவாய் ஆகும்.

காஷ்மீரின் ரியாஸி பகுதியில் பாக்., தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் 10 யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர். உரி, புல்வாமாவில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக உரியில் துல்லியத் தாக்குதல், பாலாகோட்டில் விமானப்படை தாக்குதலை இந்தியா நடத்தியது. இந்நிலையில், மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற நாளில், நடந்த இத்தாக்குதலுக்கு இந்தியா என்ன பதிலடி கொடுக்க போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

தமிழில் பிரெண்ட்ஸ், சூரிய வம்சம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள தேவயாணி, உச்சத்தில் இருந்தபோதே இயக்குநர் ராஜகுமரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, 49 வயதாகும் நிலையிலும் இளமையாக அவர் காட்சியளிக்கிறார். திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதைக்கண்ட ரசிகர்கள், தேவயாணியை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

மோடியின் அமைச்சரவையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இடம் பிடிக்கும் ஒரே பெண் என்ற சாதனையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். 64 வயதாகும் அவருக்கு இந்த முறையும் முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு அவர் தொழிற்சாலைத் துறை அமைச்சராகவும், 2017ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவியேற்றார். பின்னர், 2019ஆம் ஆண்டு முதல் நிதித்துறையை நிர்வகித்து வருகிறார்.

சென்னை எழும்பூரில் உள்ள அபார்ட்மெண்டில் குடும்பத்துடன் வசித்து வரும் நயன்தாரா, சூட்டிங் இல்லாத நேரத்தில் அபார்ட்மெண்டுக்கு வெளியே 2 குழந்தைகளை விளையாட விடுவாராம். அண்மையில், அப்படி குழந்தைகளை அவர் விட்டிருந்தபோது, அபார்ட்மெண்டுக்குள் வேகமாக ஆட்டோ வேகமாக வந்ததாகவும், இதனால் குழந்தைகள் அச்சமடைந்ததை கண்ட நயன்தாரா, ஆட்டோக்காரரிடம் சென்று வேகமாக வந்ததற்காக சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.

மாலவி நாட்டின் துணை அதிபர் பயணித்த ராணுவ விமானம் காணாமல் போனதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 51 வயதாகும் துணை அதிபர் சிலிமா உள்ளிட்ட 10 பேருடன் விமானம் நேற்று புறப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் தவித்ததால், திரும்பிச் செல்ல கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின், விமானம் மாயமானது.

தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டபோது வெளியான செய்தித்தாள் நகல், தற்போது தவறாகப் பரப்பப்படுகிறது எனவும் இந்தாண்டு மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை எனவும், அரசு விளக்கமளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.