India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலையொட்டி, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை கண்காணிக்க வேட்பாளர்கள் தங்களின் ஏஜெண்டுகளை நியமிக்கலாம். ஒரு பண்டலுக்கு 50 வாக்குச் சீட்டுகள் என்ற அடைப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களை இட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தபால் வாக்கு சீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தபால் வாக்கு சீட்டுகளை தயார் செய்யும் பணிகளை கண்காணிக்க தனியாக ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.