News April 30, 2024

நேருவின் பொன்மொழிகள்

image

✍கடப்பதற்கு தடைகள் இல்லை என்றால், வாழ்க்கை உப்பு சப்பற்று போய்விடும். ✍செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம். ✍உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும். ஆனால், ஒடுக்கிவிட முடியாது. ✍அச்சம் போன்று மிக மோசமாக ஆபத்து எதுவுமில்லை. ✍துணிந்து செயல்படுபவர்கள் தான் வெற்றியின் சிகரத்தை எட்டுவார்கள். ✍பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது.

News April 30, 2024

கள்ளச்சந்தையில் IPL டிக்கெட் விற்ற 8 பேர் கைது

image

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பெற போலீசார் கைது செய்துள்ளனர். CSK-SRH இடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியைக் காண வந்த ரசிகர்களிடம், சிலா் அதிக விலைக்கு டிக்கெட் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சரவணன், நவீன் குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து ரூ.72,242 மதிப்புள்ள 26 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News April 30, 2024

வங்கிகளின் வட்டி வசூல் குறித்து RBI அதிருப்தி

image

வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதம் வரை, வட்டி வசூலிப்பதில் நியாயமற்ற நடைமுறைகளை கண்டறிந்த ரிசர்வ் வங்கி, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் இதனை திருத்திக் கொள்ளுமாறும், பெறப்பட்ட கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கே திருப்பி வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

News April 30, 2024

அவதூறு வழக்கின் மீது தடை நீடிப்பு

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான குற்றவியல் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 6 வாரங்களில் மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்காலத் தடை தொடரும் என்றும் கூறி வழக்கை செப்.9ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

News April 30, 2024

ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

image

1803 – ஐக்கிய அமெரிக்கா லூசியானா மாநிலத்தை பிரான்சிடம் இருந்து 15 மில்லியன் டாலருக்கு வாங்கியது.
1900 – ‘ஹவாய்’ ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
1945 – ஹிட்லர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் ‘பாரத ஸ்டேட் வங்கி’ என மாற்றப்பட்டது.
1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

News April 30, 2024

பிறந்தநாள் கொண்டாடிய ரோஹித் ஷர்மா

image

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் ஷர்மா, இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நள்ளிரவு 12 மணிக்கு மனைவி மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவருக்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அவர், லக்னோவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சதம் அடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

News April 30, 2024

வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்

image

▶கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ▶சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். ▶மோர், தயிர் கலந்த அரிசி கஞ்சி, இளநீர், ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசலை போன்றவற்றை பருகலாம். ▶வெளியே செல்லும்போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும். ▶தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ▶நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.

News April 30, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 131
▶குறள்: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
▶பொருள்: ஒருவருக்கு உயர்வு உயர்வான மதிப்பை தரக்கூடியது ஒழுக்கம். எனவே, அந்த ஒழுக்கத்தை உயிரை விட மேலானதாகப் போற்றப்பட வேண்டும்.

News April 30, 2024

அரசியலமைப்புச் சட்டம் தான் உரிமைகளைப் பாதுகாக்கிறது

image

ஜனநாயகத்தை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம் என காங்., எம்.பி. ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். சத்தீஸ்கரில் நடந்த பேரணியில் பேசிய அவர், ஒரு பக்கம் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றும், மறுபுறம் காங்கிரஸ் அதை காப்பாற்ற முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டம் தான் ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது என கூறியுள்ளார்.

News April 30, 2024

IPL: ஆட்டநாயகன் விருது வென்ற வருண் சக்கரவர்த்தி

image

DC-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், KKR வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து, ரிஷப் பண்ட், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், குமார் குஷாக்ரா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால், டெல்லி அணி தாங்கள் எதிர்பார்த்த இலக்கை குவிக்க முடியாமல் திணறி வந்தது. இறுதியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

error: Content is protected !!