India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேற்கு வங்கத்தில் 4 வயது குழந்தைக்கு பறவைக் காய்ச்சல் உறுதியாகி இருப்பதாக WHO தெரிவித்துள்ளது. அந்த குழந்தை ஆணா, பெண்ணா என்ற விவரங்களை வெளியிடாத WHO , குழந்தையுடன் தொடர்புடையோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பில்லை எனவும், கோழிப் பண்ணை அமைந்துள்ள பகுதியில் வாழ்வதால், குழந்தைக்கு பறவை காய்ச்சல் பரவியிருக்கலாம், தற்போது குழந்தை குணமாகி விட்டது எனவும் கூறியுள்ளது.

திருமணத் தடை நீங்க திருமணஞ்சேரி கோயிலுக்கு சென்று வழிபடலாம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருப்பவர்கள், இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், இந்த தலத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும். இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருமண தோஷம் உடையவர்கள் தாராளமாக இங்கு சென்று வழிபடலாம்.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவுக்காக, விஜயவாடா அருகே உள்ள கேசரபல்லி எனும் இடத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு இன்று காலை 11.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி பிரமாணம் செய்ய உள்ளார். மேலும் இவருடன் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், நடிகர் பாலகிருஷ்ணா, மகன் லோகேஷ் உட்பட பலர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச் சுற்றில் இந்தியா- கர்த்தார் அணிகள் நேற்றிரவு மோதின. முதலில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இறுதியில் 2 – 1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. நடுவரின் தவறான முடிவுதான் இந்திய அணி தோல்வியடையக் காரணம் என்று ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இப்போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை வாய்ப்பை தவற விட்டுள்ளது.

➤ சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு
➤ திமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் விடுவிப்பு
➤ ஒடிஷா மாநில முதலமைச்சராக பதவியேற்கிறார் மோகன் சரண் மஜி
➤ சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை
➤ ஜனசேனா கட்சி சட்டமன்றக் குழு தலைவராக பவன் கல்யாண் தேர்வு
➤ நடிகர் தர்ஷனுக்கு 6 நாள் போலீஸ் காவல்

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இன்று அமெரிக்க அணியுடன் மோத உள்ளது. இந்திய அணி அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முனைப்பு காட்டி வருகிறது. அதே போல அமெரிக்காவும் 2 ஆட்டங்களில் தொடர்ந்து வென்றுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு எளிதாகும். சர்வதேச கிரிக்கெட்டில் அமெரிக்க அணியுடன் முதல் முறையாக இந்தியா விளையாட உள்ளது.

ஒவ்வொரு படத்தையும் முதல் படமாகவே நினைத்து நடித்து வருவதாக நடிகை லட்சுமி தெரிவித்துள்ளார். தற்போது இந்திய திரையுலகமே மாறிவிட்டதாக தெரிவித்த அவர், திரையிலும், திரைக்கு பின்னாலும் அதிக பெண்களை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். ஓடிடி தளங்கள் புதியவர்களுக்கு உதவியாக இருக்கிறது எனவும், சினிமாவின் அடுத்தடுத்த பரிமாணங்களாகவே இந்த வளர்ச்சியை பார்க்க வேண்டும் என்றார்.

நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளது. ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள ஆஸி., இந்த போட்டியில் வென்று சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்ய காத்திருக்கிறது. 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள நமீபியா, ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸி., அணியின் அதிரடி ஆட்டத்தை நமீபியா சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சில உணவுகளை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடும் போது, அனைத்து சத்துக்களையும் முழுவதுமாக பெற முடியும். நட்ஸ் வகைகளில் ஒன்றாக பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட இரவில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். ஓட்ஸை ஊற வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள ஃபைடிக் அமிலம் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. உலர் திராட்சை, ஆளி விதைகளையும் ஊற வைத்து சாப்பிடலாம்.

‘நீட்’ தேர்வை அரசியலாக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தியாவை வல்லரசாக மாற்ற மோடி நடவடிக்கை எடுப்பார் என்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.