India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியாவுடனான போட்டியில் அமெரிக்க அணி தடுமாறி வருகிறது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த USA, 10 ஓவர்கள் முடிவில் 42/3 ரன்கள் எடுத்துள்ளது. இதில் சயான் 0, ஆண்டீஸ் 2, ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டீவன் டெய்லர் 14*, நிதிஷ் குமார் 9* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் 2, ஹர்திக் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

மத்திய வேளாண் அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக, விவசாய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. சுவாமிநாதன் கமிஷன் வழங்கிய பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி, 2017ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 6 விவசாயிகள் பரிதாபமாக பலியாகினர். இதன் பின்னணியில், அதிகாரத்தில் இருந்த சிவராஜ் சவுகான் இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றம். ஒருவர் இன்சூரன்ஸ் இல்லாமல் முதல்முறை பிடிபட்டால் 3 மாதம் சிறை அல்லது ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். எனவே, இனி வாகனத்தில் செல்லும் போது, லைசென்ஸ், ஆர்சி புக் உடன் இன்சூரன்ஸ் ஆவணமும் கட்டாயம் இருக்க வேண்டும்.

குவைத் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென, அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தீ விபத்தில் தமிழர்கள் யாரேனும் சிக்கியுள்ளனரா? என்ற விவரங்களை சேகரிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அயலகத் தமிழர் நலத்துறையின் +91 1800 309 3793, +91 80 6900 9900 & 9901 ஆகிய உதவி எண்களை அறிவித்துள்ளார்.

பானைத் தொழில் செய்வதற்கு மண், வண்டல், களிமண் வெட்டி எடுக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார். வட்டாட்சியர் அளவிலேயே எளியே முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி மண் எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதேபோல், நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களில் விவசாய பயன்பாட்டிற்கும் மண் எடுக்கலாம் எனவும் அறிவித்துள்ளார்.

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. 2025 – 2027ஆம் ஆண்டு வரை வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 6.7%ஆக இருக்கும். தனியார் முதலீட்டுடன் வலுவான பொது முதலீடு உள்ளதால், இந்தியாவை உள்ளடக்கிய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-26 ல் சராசரியாக சுமார் 3%ஆக வளரும். இது 2010-19 ன் சராசரியை விட மிகக் குறைவு என தெரிவித்துள்ளது.

திராவிட மாடல் அரசின் திட்டங்கள், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களை தந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 ஆண்டுகாலமாக பெற்ற பயன்களால் தான் மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நாம் இருக்கிறோம் எனவும், அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில், அரசின் திட்டங்கள் தொடரும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா மிரட்டலாக பந்து வீசி வருகிறது. முதலில் களமிறங்கிய அமெரிக்க அணியின் தொடக்க வீரர் ஷயான் ஜஹாங்கீர், இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத்தொடர்ந்து கடைசி பந்தில் ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்களுக்கு நடையை கட்டினார். அந்த அணி ஒரு ஓவருக்கு 3/2 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்ல உள்ளார். நாளை (13ஆம் தேதி) தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள, 50ஆவது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலை, காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த கலோரிகள், குறைந்த கொழுப்பு. அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பாப்கார்ன் சிறந்த நொறுக்குத் தீனியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாப்கார்னை வெண்ணெய், உப்பு சேர்க்காமல் வெறுமனே சாப்பிடலாம் என அறிவுறுத்துகின்றனர். மசாலா, எண்ணெய், கேராமல் போன்றவற்றை சேர்க்கும் போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.