India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்டு வெற்றி பெற்ற சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பிரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து கிரீஷ் மாத்ருபூதம் விலகியுள்ளார். அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ ஆக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டென்னிஸ் வுட்சைடு நியமிக்கப்பட்டுள்ளார். கிரீஷ் மாத்ருபூதம் விலகிய தகவலையடுத்து, நாஸ்டாக் பங்குச்சந்தையில் பிரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 20% சரிவைக் கண்டுள்ளன.
பாகிஸ்தானுடனான காங்கிரஸ் கூட்டணி அம்பலமாகி விட்டதாக மோடி விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுதரி, ராகுல் காந்தியைப் புகழ்ந்து பேசியதைச் சுட்டிக்காட்டியுள்ள மோடி, இந்தியாவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்து வருவதைக் கண்டு பாகிஸ்தான் அழுவதாகத் தெரிவித்தார். இளவரசர் (ராகுல் காந்தி) பிரதமராக வேண்டுமெனப் பாகிஸ்தானில் தொழுகை நடத்தப்பட்டதாகவும் மோடி கூறினார்.
தஞ்சை பெரிய கோவில் தொடர்பாகத், தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோவில் சன்னதியின் பின்புறம் மத்தியத் தொல்லியல் துறையினர் பராமரிப்புப் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோவிலைச் சிதைக்கும் வகையில் அறநிலையத்துறை ஈடுபடுவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை எனக் கூறியுள்ள அரசு, அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.
BSNL, BHEL போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஏறத்தாழ 6 லட்சம் நிரந்தரப் பணியிடங்களை பாஜக அரசு நீக்கியிருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “மோடி அரசின் ‘தனியார்மயமாக்கல்’ நாட்டின் வளங்களை நேரடியாகவும், இடஒதுக்கீட்டை ரகசியமாகவும் பறித்து வருகிறது. ஒப்பந்த அடிப்படையில், பணியாட்களை நியமித்துப் பின்வாசல் வழியாகப் பணியிடங்களை ஒழித்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுப் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி சென்னை அணி இதுவரை தலா 5 வெற்றி, தோல்விகளுடன் தரவரிசைப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. வரவிருக்கும் 4 லீக் போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் மொத்தம் 18 புள்ளிகள் கிடைக்கும். இதில் குறைந்தது 3 போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியாகிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், இதுவரை பிரதமர் மோடி இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிரஜ்வல் விவகாரத்தில் பிரதமர், பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய ராகுல், சுமார் 400 பெண்களைக் கூட்டுப் பலாத்காரம் செய்த பிரஜ்வல் மோடியால் அங்கீகரிக்கப்பட்டவர் என விமர்சித்தார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திகழ்கிறார். கடந்த ஆண்டு அவரின் ஆண்டு சம்பளம் ₹1,869 கோடியாக இருந்ததால், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு ₹8,342 கோடியாக உள்ளது.
டி20 உலகக் கோப்பையை இந்திய அணியே வெல்ல வாய்ப்பு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சங்கக்கரா தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை இப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி குறித்துக் கருத்துத் தெரிவித்த சங்கக்கரா, வலுவான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறந்த பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்களைக் கொண்ட கலவையாக இந்திய அணி உள்ளதென்றும் பாராட்டினார்.
ஜூன் 2ஆவது வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்க நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவையைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்தக் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தலைமைச் செயலகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
மேலே படத்தில் இருப்பவர் தமிழ்நாட்டின் முன்னணி இசையமைப்பாளர். சமீப காலமாக தொடர்ந்து செய்திகளில் பேசப்படும் அவர், கோடையை சமாளிக்க மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு கடற்கரையில் நேரத்தைப் போக்குவது போன்ற போட்டோவை அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர் யார் என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.