India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தர பிரதேசத்தின் ஜஹாங்கீராபாத் பகுதியில் மோகித் என்ற இளைஞரைப் பாம்பு கடித்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது, கங்கை நதியில் உடலை வைத்தால் விஷம் தானாக இறங்கி விடும் என்று சிலர் கூற, இளைஞரின் உறவினர்கள் அவரின் உடலைக் கயிறு கட்டி 2 நாள்களாகக் கங்கை நதியில் போட்ட நிலையில், விஷம் தலைக்கேறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தியாவுக்குச் சொந்தமான தீவுகளை சாட்டிலைட் சர்வே மூலம் தான் கண்டறிந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஜூனாகத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம் லீக்கின் மொழியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எழுதப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம். ஆனால் அதனை மீண்டும் கொண்டு வருவோமென அரச குடும்பத்தினர் வெளிப்படையாகக் கூறி வருவதாகவும் சாடினார்.
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று என சசி தரூர் தெரிவித்துள்ளார். 400 இடங்களில் வெல்வோம் என்ற பாஜகவின் பேச்சு நகைச்சுவை என்று குறிப்பிட்ட அவர், கடந்த முறை பாஜக வென்ற 300 இடங்கள் மீண்டும் கிடைக்காது என்றார். 2 கட்டத் தேர்தலிலேயே பாஜகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சசி தரூர் போட்டியிட்ட திருவனந்தபுரம் தொகுதியில் ஏப்., 26இல் தேர்தல் நடைபெற்றது.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மக்கள் யுபிஐ மூலம் ரூ.19.6 லட்சம் கோடி பரிமாற்றம் செய்துள்ளனர். பணத்தைக் கையில் எடுத்துச் செல்ல விரும்பாதோர் யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். இதுபோல ஏப்ரலில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.65,933 கோடி மதிப்பிலான 44.3 கோடி பரிவர்த்தனைகள் செய்திருப்பதும் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆந்திராவில் ₹2,000 கோடி கைப்பற்றப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 13ஆம் தேதி அங்குத் தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கஜராம்பள்ளியில் 4 கண்டெய்னர் லாரிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள் அவற்றில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் அந்தப் பணம் RBI-க்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2012இல் வெளியான 2ஜி தீர்ப்பிற்கு மாற்றாக, அலைக்கற்றையை ஏலத்துக்கு பதிலாக நிர்வாக உத்தரவு மூலம் ஒதுக்க அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசு மனுவில் கோரியிருந்தது. இத்தனை ஆண்டுகள் கழித்து, எந்தக் காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய தேவையில்லை என உச்ச நீதிமன்றப் பதிவாளர் மனுவை நிராகரித்தார்.
போட்டியிடும் இடங்கள் தொடர்பாகத் தவறான தகவலைக் கூறிய பிரதமருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் மெஜாரிட்டிக்குத் தேவையான 272 இடங்களில் போட்டியிடவில்லை என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ், இதுவரை 326 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகவும், தவறான தகவல்களைக் கூற வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 4 மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள 271 நிறுவனங்கள், 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்க கண்காணிப்பு வலைதளமான Layoffs.fyi வெளியிட்ட அறிக்கையில், டெஸ்லா (14,000), ஜெட்டிர் (6,000), ஆப்பிள் (600) ஆகியவை அதிக பணிநீக்கங்களைச் செய்துள்ளன. கடந்த ஏப்ரலில் மட்டும் 21,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை ராவின் செயல்பாடு குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தொடர்பாக பதிலளிக்காமல் இந்தியா மெளனம் காக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஏபிசி, சிட்னி ஹெரால்ட், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை “ரா”வை குற்றம்சாட்டிச் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்குப் பதிலளித்தால், மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என இந்தியா நினைப்பதாகக் கூறப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியாவைச் சேர்த்ததற்கு முன்னாள் வீரர் இர்பான் பதான் அதிருப்தி தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் ஸ்ரேயஸ் அய்யர், இஷான் கிசன், ஹர்திக் விளையாடாத நிலையில், அதில் ஹர்திக்கை மட்டும் அணியில் சேர்த்துத் துணைக் கேப்டனாக்கி இருக்கக் கூடாது, இது மற்ற வீரர்களுக்குத் தவறான சமிக்ஞையை அளிப்பதோடு, அணிச் சூழலையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.