News June 14, 2024

4ஆம் இடத்தை பிடித்த மும்பை பங்குச் சந்தை

image

ஹாங்காங் பங்குச் சந்தையை மீண்டும் பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பங்குச் சந்தையானது மும்பை பங்குச் சந்தை. புளூம்பெர்க் நிறுவன தரவுகளின்படி, 5.18 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் மும்பை 4ஆவது இடத்திலும், ஹாங்காங் 5.17 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் 5ஆவது இடத்திலும் உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு மும்பை பங்குச் சந்தை 6% வரை ஏற்றம் கண்டுள்ளது.

News June 14, 2024

படிங்க, படிங்க, படிச்சிக்கிட்டே இருங்க!

image

சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, மாணவர்களிடம் படிங்க, படிங்க, படிச்சிக்கிட்டே இருங்க என்று அறிவுறுத்தினார். முன்னதாக, ‘யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; நன்றாக படிங்க’ என்றார். மாணவர்கள் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துமாறும், அதற்கு தேவையான அனைத்தையும் அரசு கவனித்துக்கொள்ளும் எனவும் அவர் தொடர்ச்சியாக நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

News June 14, 2024

ஸ்மார்ட் வகுப்பறைகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

image

அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய அவர், தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியையும் வழங்கினார். அத்துடன், தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

News June 14, 2024

செல்வப்பெருந்தகை முடிவு செய்ய முடியாது: ராகுல் காந்தி

image

தமிழகத்தில் யாருடன் கூட்டணியமைக்க வேண்டும் என்பதை செல்வப்பெருந்தகை முடிவு செய்ய முடியாது என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய செல்வப் பெருந்தகை, “எத்தனை காலத்திற்குதான் கூட்டணியை நம்பியிருப்பது?” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதுகுறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்து முடிவு செய்ய பல முக்கியத் தலைவர்கள் இருக்கின்றனர் என்று ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

News June 14, 2024

30 ஆண்டுகள் வரை வாழும் “ராணி எறும்புகள்”

image

சுறுசுறுப்புக்கு பெயர் போன எறும்புகள், உடல் எடையை விட 20 மடங்கு அதிக எடையை தூக்கக்கூடியவை. அவற்றில் உணவு தேடும் எறும்பு, எதிரிகளை தாக்கும் எறும்பு, கூடு கட்டும் எறும்பு, ராணி எறும்பு எனப் பல வகைகள் உண்டு. இதில் ராணி எறும்பு அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை வாழும் என்பதும், இன விருத்தியில் ஈடுபடும் ஆண் எறும்பு, சேர்க்கைக்குபின் ஓரிரு நாளில் இறந்துவிடும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

News June 14, 2024

₹10 அம்மா குடிநீர் பாட்டில் திரும்ப கிடைக்குமா?

image

ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மறக்க முடியாத திட்டங்களில், பேருந்து நிலையங்களில் ₹10க்கு அம்மா குடிநீர் பாட்டில் விற்கும் திட்டமும் ஒன்று. அவர் மறைவுக்கு பிறகு, அத்திட்டத்துக்கு படிப்படியாக மூடுவிழா காணப்பட்டது. இதனால், 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மீண்டும் ₹15-₹20 வரை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏழை பயணிகள் நலன் கருதி, ₹10 குடிநீர் பாட்டிலை தமிழக அரசு மீண்டும் கொண்டு வருமா?

News June 14, 2024

இன்று உலக ரத்தத் தான நன்கொடையாளர் தினம்

image

ஆஸ்திரியாவை சேர்ந்த விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டெய்னர், ஏபிஓ ரத்த குழு அமைப்பை கண்டுபிடித்து, ரத்த தானம் முறைக்கு வழிவகுத்தார். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ ஆராய்ச்சியில் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. இதனால் ரத்தமின்றி உயிரிழக்கும் பல லட்சம் பேரின் மரணங்கள் தடுக்கப்பட்டன. எனவே அவர் பிறந்த நாளான ஜுன் 14ஆம் தேதி உலக ரத்தத் தானம் செய்வோர்/நன்கொடையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

News June 14, 2024

வேட்பாளரை அறிவித்தார் சீமான்

image

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் ‘நாம் தமிழர்’ சார்பாக போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சித்த மருத்துவரான அபிநயா அத்தொகுதியில் போட்டியிடுவார் என்றும், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்கிடுமாறும் கட்சியினருக்கு சீமான் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே அன்னியூர் சிவாவை வேட்பாளராக திமுக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News June 14, 2024

கூடுதலாக 28 மெட்ரோ ரயில்கள் வாங்க ஒப்புதல்

image

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மெட்ரோ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களைக் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், ரூ.2,820.90 கோடி மதிப்பில் கூடுதலாக 28 மெட்ரோ ரயில்களை வாங்க நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை தயாரித்து பெறுவதற்கு 2 ஆண்டுகள் வரையிலாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News June 14, 2024

T20WC: மழையால் வெளியேறுகிறதா பாகிஸ்தான்?

image

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மழையின் காரணமாக பாகிஸ்தான் அணி வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்று நடைபெறும் அமெரிக்கா – அயர்லாந்து இடையேயான போட்டியின்போது மழை பெய்ய 31% வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போட்டியில் அமெரிக்கா தோற்றால் மட்டுமே பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது என்பதால், அந்த அணியின் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

error: Content is protected !!