India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ₹1000 திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என பொன்முடி கூறியது பேசுபொருளாக மாறியுள்ளது. ₹1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதைப் போல், ஆண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அப்படி இருக்கையில் பொன்முடி இவ்வாறு எப்படி கூறினார். ஒருவேளை மாணவர்களுக்கு ₹1000 வழங்கவுள்ளதை தான் இப்படி கூறினாரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

புதுச்சேரி பாஜக செயலாளார் ரத்னவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் எஸ்.செல்வகணபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, ரத்னவேல் இன்று போராட்டம் நடத்தினார். இதனால், கட்சியின் கட்டுப்பாட்டை அவர் மீறியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

T20 உலகக் கோப்பையில் இன்று அமெரிக்கா-அயர்லாந்து இடையிலான போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள மைதானத்தில் போட்டி நடைபெற இருந்த நிலையில், அங்கு பெய்த கனமழையால் மைதானம் ஈரப்பதமாக உள்ளது. ஒருவேளை இன்றைய போட்டி கைவிடப்பட்டால் US அணி எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். அதே நேரம் பாக்., அணி வெளியேறும் நிலை ஏற்படும்.

பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால்டிக்கெட்டை ஜூன் 19ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in -இல் மாணவர்கள் நிரந்தரப் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்து விவரங்களை, தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மீண்டும் கோஷ்டி மோதல் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை அணியினர் இடையே நடந்த மோதல், தற்போது தலைவர்களுக்கு மத்தியிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. “காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும்” எனக் செல்வப்பெருந்தகையும் “நடப்பதே காமராஜர் ஆட்சிதான்” என இளங்கோவனும்
பொதுக்குழுக் கூட்டத்திலேயே மாறி மாறி கருத்துகளைத் தெரிவித்தது இதனை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளது.

விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் FAME-3 திட்டத்தை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 2015இல் மின்சார வாகன உற்பத்தி & தொழில்நுட்பத்தை மேம்படுத்த FAME திட்டம் பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. FAME-1க்கு ₹5,172 கோடியும், FAME-2க்கு ₹10,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. FAME-2 திட்டம் மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைந்தது கவனிக்கத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் 6 -12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ₹360 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். மாணவர்கள் தங்களின் கல்விச் சான்று, ஆதார் எண், புகைப்படம் போன்ற ஆவணங்களை கல்லூரியில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

தவறான தகவல் அல்லது வதந்தியை பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சராக பொறுப்பேற்ற பின் தமிழகத்திற்கு வருகை தந்த அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சியில் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோஸ் பட்லர் மூன்றாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். அவரது மனைவி லூயிஸ் பட்லர் தற்போது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு சார்லி என்று பெயரிட்டுள்ளதாக தம்பதியினர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. இவர்களுக்கு ஏற்கனவே ஜார்ஜியா ரோஸ் மற்றும் மார்கோட் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.

தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை இன்று சற்று குறைந்துள்ளது. இது தொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள விலைப் பட்டியலில், முட்டை கொள்முதல் 20 காசுகள் குறைந்து ₹5.30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சில்லறை விலையில் ஒரு முட்டை 6 ரூபாய் முதல் 6 ரூபாய் 50 காசுகள் வரை விற்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.