India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை உத்தரவு பறந்துள்ளது. வெயில் தாக்கத்தை பொருட்படுத்தாமலும், விடுமுறை அளித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர், கல்வியாளர்கள் புகார் கூறிய நிலையில், தனியார் பள்ளி இயக்குநர் இந்த எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுசரிதா மொஹந்தி, தலைமையிடம் இருந்து போதிய நிதி கிடைக்காததால், தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார். அங்கு வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (மே 6) உடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே பிஜூ ஜனதா தளம், பாஜக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், மொஹந்தி தற்போது வரை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
சியாச்சின் பனிமலைக்கு வடக்கே ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த சாலையைப் பள்ளத்தாக்கின் (16,333 அடி) மேல் பகுதிவரை சீனா நீட்டித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுமென பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். சியாச்சினில் நீண்ட கால பாதுகாப்பு திட்டங்களில், மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இசை பெரிதா? பாடல் பெரிதா என ஒப்பிடும் வகையில் சமீபத்தில் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கி பேசியிருந்தார். இதற்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கடும் எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில், வைரமுத்து தனது x பதிவில், “குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும், மக்கள் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ₹55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ₹53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹52,800க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ₹6,600க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹86.50க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது.
கோடை காலம் முழுவதும் விஐபி தரிசன சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி, கோடை விடுமுறை காரணமாக சுவாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.
நாட்டு மக்களிடமிருந்து உண்மையை எவ்வளவு காலம் பிரதமர் மோடியால் மறைக்க முடியும் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மொரேனாவில் நடந்த பிரசாரத்தில் பேசிய அவர், பாஜகவினரின் பிரசாரம் உண்மையல்ல என்பதை மக்கள் அறிவர். பணவீக்கம், ஊழல், நிதி நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை இவைதான் பாஜக அரசின் 10 ஆண்டுகால சாதனை. இம்முறை பாஜகவின் கனவு பலிக்காது. ‘சத்யமேவ ஜெயதே’ உண்மையே வெல்லும்” எனக் கூறினார்.
காப்புரிமை விவகாரத்தில் வைரமுத்துவுக்கு சீனு ராமசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வைரமுத்து மீதான கோபத்தில் இளையராஜா யாரையும் கவித்துவமாக எழுத விடாமல், 20 வருடமாக தான் இசையமைத்த நல்ல டியூன்களுக்கு Dummy வரிகளை ஓகே செய்ததாக சாடியுள்ளார். அப்படி பார்க்கும்போது, உண்மையில் வைரமுத்துவை வளர்த்தது இளையராஜாதான் என கங்கை அமரனுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற இருந்த நாதக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதி மறுத்த போதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் பலர் தடுப்பு காவலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நீதிமன்ற அனுமதி பெற்று மாற்று தேதியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுரவ் கங்குலியிடம் தன்னுடைய பேட்டிங் ஸ்டேன்ஸ் & டெக்னிக்கல் சம்பந்தமான ஆலோசனைகளைக் கேட்டதாக KKR வீரர் வெங்கடேஷ் ஐயர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். MI அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆட்டநாயகன் விருதை பெற்ற பின் பேசிய அவர், நான் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன். தொழில்முறை கிரிக்கெட்டராக ஆட்டத்தை எப்படி வேகப்படுத்த வேண்டுமென அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.