News May 4, 2024

வாகன ஓட்டிகளுக்கு நிழல் அளிக்கும் பசுமை பந்தல்கள்

image

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால், பகல் நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். அப்படி, வெயிலில் வரும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் அளிக்கும் வகையில் கோவை, திருப்பூர் மாநகராட்சிகள் சிக்னல்களில் பசுமை பந்தல்களை அமைத்து வருகின்றன. இதற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பசுமை பந்தல்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News May 4, 2024

தாய்மார்களின் வாக்கு பிள்ளைகளைக் காப்பாற்றியது

image

பாஜக ஆட்சியில் நக்சல் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஜார்கண்டின் பாலமு பகுதியில் பிரசாரம் செய்த அவர், சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்கள் தீவிரவாதத்தைப் பரப்பி வந்ததாகக் கூறினார். இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தி காடுகளுக்கு சென்றதால், ஏராளமான தாய்மார்கள் பிள்ளைகளை இழந்து தவித்ததாகக் கூறிய மோடி, அவர்களின் வாக்கு பிள்ளைகளைக் காப்பாற்றியது எனத் தெரிவித்தார்.

News May 4, 2024

எப்போது இந்நிலை மாறும்?

image

அரசு நிறுவனத்திற்கு நிகரான சேவையை வழங்குகிறோம் என தனியார் செல்போன் நிறுவனங்கள் வெளிநாடுகளில் விளம்பரம் செய்கின்றன. ஆனால், நம் நாட்டிலோ பொதுத்துறை நிறுவனமான BSNL இன்றுவரை நெட்வொர்க்கை சீரமைக்க முடியாமல் தத்தளித்து வருகிறது. 5ஜி, 6ஜி சேவையை பிற நிறுவனங்கள் வழங்கத் தயாராகும் நிலையில், நிதி & ஆள்பற்றாகுறை காரணங்களால் 4ஜி சேவையைக் கூட முழுமையாக அளிக்க முடியாமல் திணறுகிறது. எப்போது இந்நிலை மாறும்?

News May 4, 2024

காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு

image

நெல்லை கிழக்கு மாவட்டச் காங்., செயலாளர் ஜெயக்குமாரை 2 நாளாக காணவில்லை என அவரது மகன் புகார் தெரிவித்திருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் கடிதம் எழுதி இருந்த நிலையில், திசையன்விளை அருகே சொந்த ஊரில் உள்ள வீட்டின் தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், அவரது சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 4, 2024

போர்க்கால நடவடிக்கை எடுங்க

image

கோடை வெயில் காரணமாக தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து, சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசை டிடிவி வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு ₹15 – ₹20 வரை பணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

News May 4, 2024

வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீக்கம்

image

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை 6 மாதங்களுக்கு பிறகு மத்திய அரசு நீக்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், அதற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன்னுக்கு ரூ.41,690ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

News May 4, 2024

விபத்தில் காயமடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்

image

ஏற்காடு மலைப்பாதையில் மே 1இல் நடந்த பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து இபிஎஸ் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு தலா ₹10 லட்சம் வழங்குமாறும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ₹2 லட்சம் அளிக்கவும் வலியுறுத்தினார்.

News May 4, 2024

இந்திய வரைபடத்துடன் நேபாள் ரூபாய் வெளியீடு

image

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் கூடிய புதிய ரூபாய் நோட்டை வெளியிட்டு நேபாள அரசு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா, கலாபானி ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதனை அச்சிடுவதற்கு அந்நாட்டின் பிரதமர் புஷ்பகமல் பிரசந்தா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலளித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

News May 4, 2024

ஸ்ரீதேவியின் பங்களாவில் தங்க இலவசம்

image

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, போனி கபூரை காதலித்து திருமணம் செய்த பிறகு, சென்னையில் பிரம்மாண்ட பங்களா ஒன்றை வாங்கினார். அவரது மறைவுக்கு பிறகு பூட்டி வைத்திருந்த அந்த பங்களாவை புதுப்பித்து ஹோட்டலாக மாற்றும் ஒப்பந்தத்தை, Airbnb நிறுவனத்திற்கு அளித்துள்ளனர். இந்நிலையில், அந்த பங்களாவில் ரசிகர்கள் ஒரு நாள் இலவசமாக தங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் விரைவில் தொடங்கவுள்ளது.

News May 4, 2024

வாழ்வா, சாவா போட்டியில் RCB?

image

இன்று GT அணிக்கு எதிரான போட்டியில் RCB அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம், வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். இதுவரை RCB 10 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, இனி வரும் அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

error: Content is protected !!