India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும் ஏழைகள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதாகவும், ஏழ்மையைக் கண்டவரால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங். செயலாளர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நெல்லை விரைந்துள்ளனர். 2 நாள்களுக்கு முன் மாயமான அவர், இன்று எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, கொலை மிரட்டல் புகார் அளித்திருந்த நிலையில், அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
த.செ.ஞானவேல், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை இன்று தனது இன்ஸ்டாவில் அமிதாப் பகிர்ந்துள்ளார். அதில், ரஜினி மிகவும் எளிமையான மனிதர் என்றும், அவர் சற்றும் மாறாமல் முன்பு பழகியது போலவே தற்போதும் இருப்பதாக நெகிழ்ந்துள்ளார். அத்துடன், மீண்டும் அவருடன் நடிப்பது பெருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மே 7, 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 7ஆம் தேதி, தேனி, திண்டுக்கல் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும், 8ஆம் தேதி திருப்பூர், விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார், ஏப். 30ஆம் தேதி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் என புகார் அளித்து 4 நாள்கள் ஆகியும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், அவரை உயிருடன் மீட்டிருக்க முடியும். காவல்துறையின் மெத்தனப் போக்கிற்கு என்ன காரணம், அரசியல் அழுத்தமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மோடியால் சாமானிய மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் பிரசாரம் செய்த அவர், மக்கள் பிரச்னைகளை கேட்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ராகுல் 4,000 கி.மீ. பயணம் செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், உடலில் சிறு தூசி கூட படாமல் மாளிகையில் வசிக்கும் மோடி, மக்கள் பிரச்னையை எப்படி புரிந்துக் கொள்வார் என்று கேள்வி எழுப்பினார்.
தீ விபத்து & மீட்பு பணிகளில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக மே 4ஆம் தேதி சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எண்ணன்ற உயிர்களைப் பாதுகாக்க ராணுவம் போல 24*7 களத்தில் நின்று பணியாற்றும் மீட்புப் பணி வீரர்களை சமூகம் குறைத்து மதிப்பிடுகிறது என்பது கசப்பான உண்மை. காடு, மலை, வெயில், மழை என பார்க்காமல் மக்களுக்காக கடமையாற்றும் இந்த வீரர்களை போற்றுவோம்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் ‘டாக்சிக்’ திரைப்படம் தயாராகி வருகிறது. ‘கேஜிஎஃப்’ படத்தைபோல, இப்படமும் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் யாஷின் சகோதரியாக கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் தற்போது கால்ஷீட் பிரச்னையால் படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கு பதில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமாரின் மரண வாக்குமூலம் கடிதத்தில் நாங்குநேரி MLA ரூபி மனோகரன் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து பேசிய அவர், ஜெயக்குமார் நெருங்கிய நண்பர்; அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு. என் மீதான புகாரில் உண்மையில்லை, அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில் யாரோ சிலர் செயல்படுகிறனர். காவல்துறை உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
KKRக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார். 5 முறை கோப்பையை பெற்றுத் தந்த ரோஹித்தை இம்பாக்ட் பிளேயராக எப்படி ஆட வைக்கலாம் என ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இதுகுறித்து MI அணி வீரர் பியூஷ் சாவ்லா, KKRக்கு எதிரான போட்டிக்கு முன்பாக ரோஹித்துக்கு முதுகு பிடிப்பு இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இம்பாக்ட் பிளேயராக ஆட வைக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Sorry, no posts matched your criteria.