India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RCB வீரர் யஷ் தயாள் மீது உ.பி.யில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது இந்த FIR பதியப்பட்டுள்ளது. யஷ் தயாள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் குறை தீர்க்கும் போர்டல் மூலம் இளம் பெண் ஒருவர் அவர் மீது, பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வைத்துள்ளார்.
கடவுளின் சன்னதிக்குச் சென்ற அனைத்து பொருள்களுமே புனிதம் பெற்றுவிடும். அந்தவகையில், சன்னதியில் குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கு சாற்றப்படும் மாலைகளும் புனிதம் பெறும். அதனை பக்தர்களுக்கு அளிக்கும்போது அவர்களின் கடவுள் நம்பிக்கை மேலும் வலுப்பெறும். தனிநபர் (அ) வாகனங்கள் ஆகியவற்றுக்கு மாலை அணியும்போது, நமக்கான உத்வேகம் அதிகரிக்கும். தொடங்கும் காரியங்களும் நல்ல பலன்களை அளிக்கும்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையே நடந்து வரும் மோதலால் அதிருப்தியில் பலர் சமீப காலமாக திமுக, அதிமுகவுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் காசி நெடுஞ்செழியன் தலைமையில் 400 பேர் அதிமுகவில் இணைந்தனர். நெய்வேலியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நெய்வேலி பாமகவின் வாக்கு வங்கி அதிகம் உள்ள தொகுதியாகும்.
உடனடி தேவைக்காக கடன் செயலியில் கடன் வாங்குவோர், இவற்றை கவனியுங்க:
*கடன் செயலிகளில் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.
*வாங்க நினைத்தால், அந்த ஆப் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்றதா என்பதை கவனிக்கவும்
*அத்துடன் அந்த செயலி NBFC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*Playstore-ல் இருக்கும் ஆப்களை மட்டுமே பயன்படுத்தவும். மெசெஜ் வழியாக கிடைக்கும் ஆப்களில் கடன் பெற வேண்டாம்.
முதல் சம்பளம் குறைவாக இருந்தாலும், அதிலிருக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது என்பார்கள். அந்த வகையில் இந்தியாவில் எந்த நகரத்தில் Freshersகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் (₹30,100) வழங்கி சென்னை முதலிடத்திலும், ஹைதராபாத்(₹28,500), பெங்களூர் (₹28,400) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்கள் Freshersகளுக்கு Hotspot-ஆக உள்ளதாம்.
இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் ஆக.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியாவுக்கு 26% வரியும், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, துனிசியா, கஜகஸ்தானுக்கு தலா 25% வரியும் விதிக்கப்பட்டுள்ளது, லாவோஸ் – 40, மியான்மர் – 40%, தென் ஆப்ரிக்கா – 30%, இந்தோனேசியா – 32%, கம்போடியா – 36%, செர்பியா – 35%, வங்கதேசம் – 35% இனி இறக்குமதி வரியாகும்.
வடசேரியில் இருக்கும் கிளைச் செயலாளருக்கு போன் செய்தபோது, தன்னை யாரென்றே தெரியாது என்று எதிர்முனையில் பேசியவர் கூறியதாக நயினார் நாகேந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், நயினார் என்பதை ‘நைனாவா?’ எனக் கேட்பதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக பாஜக ஆலோசனை மேடையிலேயே போட்டுடைத்த நாகேந்திரனின் குமுறலை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
செவ்வாய் பகவானை, இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். திருமணம், சொந்த வீடு கனவு போன்றவை கைகூடும் என்பது ஐதீகம்.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்.
அர்த்தம்: வீரக் கொடியைக் கொண்டவரும், விக்னங்களைத் தீர்க்கும் கையை உடையவருமான செவ்வாய் பகவானை நாங்கள் தியானிக்கிறோம். அவர் எங்களை ஆசீர்வதிப்பாராக!
மாநில திட்டக்குழுவானது தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் தாக்கங்கள், அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதோடு, அரசு கொள்கை முடிவெடுக்கின்ற வகையில் பல துறைகளில் ஆய்வு செய்து அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது. அந்தவகையில் தற்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு, சுரங்கங்கள் சீரமைப்பு, காலநிலை மாற்றம், வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஆய்வறிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.
தேர்தல் பரப்புரையை <<16979878>>தொடங்கிய இபிஎஸ்<<>> கூட்டணியையும் விரைவில் இறுதி செய்யத் தீவிரம் காட்டியுள்ளாராம். அதிமுக கூட்டணியில் தற்போது, பாஜக, அமமுக, இந்தியக் குடியரசு கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தற்போது புதிதாக(நேற்று) <<16978111>>இந்திய ஜனநாயக கட்சி<<>> இணைந்துள்ளது. பாமக, தேமுதிக தங்களது நிலைப்பாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை.
Sorry, no posts matched your criteria.